Sunday, March 22, 2020

சங்கிகள் எழுதி கொடுத்த மோடியின் பேச்சும் ஞாயிற்று கிழமையும்



மோடி  ஒரு சில தினங்களுக்கு முன்னால் பேசிய பேச்சு  யாரோ ஒரு சங்கி எழுதி கொடுத்த பேச்சாகத்தான் இருக்கனும் இதை காரணம் இல்லாமல் சொல்லவில்லை. சங்கிகள் எப்படி குஜராத் மாடல் பற்றி பேசும் போது மேலை நாட்டு பஸ்டாண்டு அல்லது மருத்துவமனைகளை போட்டு ஷாப் செய்து இது குஜராத்தில் எடுக்கப்பட்ட படம் என்று பேசுவார்கள் அதையேத்தான் திருவாளர் மோடியும் பேசிக் கொண்டிருந்தார்.


அதை போலத்தான் மோடி பேசிய பேச்சும் காப்பி பேஸ்ட் செய்து தயாரிக்கப்பட்டது...  உலக சுகாதார துறை சொன்ன மக்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதையும் மேலும் ஏதோ ஒரு நாட்டில் மக்கள் தனிமையில் இருப்பவர்கள் தங்களை உற்சாகப்படுத்தி கொள்ள ஒரு இரவில் தங்கள் வீட்டு பால்கனியில் வந்து கைதட்டி ஆராவரித்து மகிழ்ந்தனர்... இதையும் இந்த சங்கிகள் காப்பி அடித்து   மோடியின் பேச்சை தயாரித்து கொடுத்திருக்கிறார்கள் இதைத்தான் மோடி அவர்கள் வாசித்தார் அவ்வளவுதான் விஷயம்.. சங்கிகள்தான் அப்படி காப்பி பேஸ்ட் அடித்தார்கள் என்றால் அதை வாசிக்கும் மோடி கொஞ்சமாவது சுய அறிவை பயன்படுத்தி அந்த பேச்சை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி நம் நாட்டிற்கு ஏற்றவாறு கொடுத்திருக்கலாம் அவருக்கு அறிவு இருந்தால்.. ஆனால் அது தான் அவரிடம் இல்லையே அதனால் அப்படியே வாந்தி எடுத்து இருக்கிறார்.. இந்தியாவில் எத்தனை வீட்டிற்கு பால்கணி இருக்கிறது கூட அறிவு ஜீவி மோடிக்கு தெரியவில்லையா என்ன?


புத்தி இருப்பவன் என்ன சொல்லி இருப்பான்.. டாகடர்கள் நர்சுக்கள் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் போலீஸ் துறை மருந்துக்கடை ஊழியர்கள் மற்றும் அத்தியாவசியமான கடைகள் மற்றும் துறைகளில் இராப்பகலாக தூக்கம் இல்லாமல் பணியாற்றுபவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உங்களின் முழு ஆதாரவையும் தாருங்கள். இப்படி பணியாற்றும் பலருக்கு பலவிதமான தேவைகள் இருக்கலாம்... அப்படிப்பட்ட தேவைகளை பொதுமக்களாகிய நாம மனம் உவந்து செய்வோம் அதுவே அவர்களை மேலும் உற்சாகமடைய செய்யும்... உதாரணமாக இப்படி இராப்பகலாக பணியாற்றுபவர்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கலாம் அல்லது முதியவர்கள் இருக்கலாம் அவர்களின் தேவைகளை நம்மால் முடிந்தவரை பூர்த்தி செய்ய  முயற்சிக்கலாம்... இதற்காக நாம் செய்ய வேண்டியது நம் குடியிருப்புக்கு அருகில் இப்படி பணியாற்றுபவர்களின் வீடுகளை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்வோம் அதுதான் மிகப் பெரிய உதவி...


அப்படியில்லாமல் மோடி சொன்ன மாதிரி மாலை 5 மணிக்கு பால்கனியில் வந்து கைதட்டுவதால் அல்லது குரல் கொடுப்பதால் ஒரு மயிருக்கும் பலன் இல்லை..


மோடி கைதட்ட சொல்லுவதால்  ஏற்படும் பலன் என்ன வென்று ஒரு  படித்த சங்கி சொல்லி இருப்பது இதுதான். நான் சொல்லியது பயன் அளிக்குமா அல்லது இந்த சங்கி சொல்வது பலன் அளிக்குமா கொஞ்சம் யோசியுங்களேன்


The 5pm clapping modi asked us to do is extremely interesting. Someone i know who's studied astrology and knows how to corelate with science.
At that time Moon is passing to a new 'nakshatra' called Revati.
The playing of bells and clapping: The cumulative vibration will encourage blood circulation in the body. .
It's the reason they used to have huge, gong-like bells in old Shakti temples on the mountains.
Someone very knowledgeable is guiding Modi abt this. Hope it works. 22nd March is Amavasya, darkest day in a month. All virus, bacteria and evil forces have maximum potential and power on such days. 5 PM- clapping, shankh nada etc by 130 crore people at the same time will create so much vibrations that virus will lose all potency. Must for everyone

அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :

மோடிஜி இதை டிவியில் அறிவிப்பு செய்தற்கு பதிலாக ஒரு பொது கூட்டத்தை கூட்டி சொல்லி இருந்தார் என்றால் நாட்டில் சங்கிகள் எல்லாம் காலியாகி இருப்பாங்க.... ஹும்ம் என்னத்த சொல்ல

தமிழகத்தில் எங்கெல்லாம் மக்கள் அதிகமாக கூடுகிறார்களோ அங்கெல்லாம் பாஜக பொதுக் கூட்டத்தை நடத்தினால் அங்கே ஆட்டோமேட்டிக்காக மக்கள் கூட்டம் குறைந்துவிடும்.... மற்ற  மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டம் போடலாம் அதிகமாக கூட மாட்டார்கள்


க்ரோனாவில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த மோடி தான் வெளிநாடுகளில் இருந்து கைப்பற்றிய கருப்புபணத்தை பயன்படுத்த இருக்கிறார். இப்படி ஒரு நிலமை வரும் என்று ஒரு யோகி ஒருவர் சொன்னதால்தான் இது வரை அவர் கருப்புபணத்தை யாருக்கும் கொடுக்காமல் இருந்து  வந்தார். இனிமேல் அந்த கருப்பு பணத்தை கொண்டு இழந்த பொருளாதாரத்தை மீட்டு இந்தியாவை வல்லரசாக்கி காட்டுவார். ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் மோடி மகான் வாழ்க


தமிழக மக்களே  ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு பால்கனியில் வந்து கைதட்டனும் என்றுதான் மோடி சொல்லி இருக்கிறார். பழக்க தோஷத்தில் இடுப்பில் கிள்ளும் திராவிட குஞ்சுகளே அப்படி கை தட்டும் பெண்களின் பின்னழகை பார்த்து அங்கே தட்டிவிட வேண்டாம்


க்ரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத்தை மீட்டு எடுக்க நிர்மலா மாமி செய்த ஊறுகாய் பாட்டிலை நாட்டும் மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்.

எங்க கம்பெனியின் ஒரு வைஸ் பிரசிடெண்ட் எல்லாருக்கும் ஒரு இமெயில் அனுப்பி அதில் ஒரு அட்டாச்மெண்ட் லெட்டரையும் சேர்த்து அனுப்பி இருக்கார். அந்த லெட்டரை எல்லோரும் எடுத்து கொண்டு வேலைக்கு செல்லவேண்டும் போலீஸ் தடுத்து நிறுத்தினால் அதை காண்பித்தால் போதுமாம் அவர்கள் எங்களை வேலைக்கு செல்ல அனுமதிப்பார்களாம்...#அடேய் உங்களை எல்லாம் என்ன சொல்லுறதுன்னே தெரியலைடா

மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு ஆசிரியர்கள் ஏன் வர வேண்டும் முட்டாப்பயல்கள் ஆட்சி நடத்தினால் இப்படித்தான் இருக்கும் போல


மோடி ஏதோ நேஷனல் ஹாலிடே அறிவித்திருக்கிறார் என்று மக்கள் நினைத்து ஜாலியாக இருக்கிற மாதிரி தெரிகிறது.....



தமிழக மக்களே  ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு பால்கனியில் வந்து கைதட்டனும் என்றுதான் மோடி சொல்லி இருக்கிறார். பழக்க தோஷத்தில் இடுப்பில் கிள்ளும் திராவிட குஞ்சுகளே அப்படி கை தட்டும் பெண்களின் பின்னழகை பார்த்து அங்கே தட்டிவிட வேண்டாம்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.