Sunday, March 15, 2020

என்ன நான் சொல்லுறது சரிதானுங்க





ஹெச்.ராஜா ,ராகவன், வானதி சீனிவாசன், இலட்சுமணன், எஸ்.வி.சேகர் இப்படி இவர்களில் யாராவது ஒருத்தரை பாஜக தமிழக தலைவர்களாக தேர்ந்திடுத்திருந்தால் ஒருவருக்குள் ஒருவர் அடித்து இன்னும் கட்சியை இல்லாமல் ஆக்கி இருப்பார்கள் ஆனால் அதற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஒருவரை தமிழக பாஜக தேர்ந்தெடுத்ததால் இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து இந்த தாழ்த்தபட்டவரை  என்ன அடி அடிச்சாலும்  நல்லா வாங்கி கொள்வார் அல்லது அப்படி அடிச்சால் கேள்வி கேட்க ஆள் இருக்கமாட்டார்கள் என்று நினைத்துதான் தேர்ந்தெடுத்து இருக்க்கிறார்கள்  போல

kishore கே swamy மட்டும் மனசு வைச்சா ரஜினி நிச்சயம் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.... ஹேய் நான் உண்மையை சொன்னால் எதுக்கு எல்லோரும் சிரிக்கிறீங்க





சாந்தி முகூர்த்திற்கு நேராமாச்சு மாப்பிள்ளையை அனுப்புங்கோ? இன்னும் போகாமல் இருக்கிறாரு?

மாப்பிள்ளைக்கு எழுச்சி தெரிஞ்சால்தான் போவாராம்....

அடே வயசான காலத்தி எப்படிடா எழுச்சி ஏற்படும் மாப்பிள்ளைதான் எழுச்சி ஏற்பட ஏதாவது செய்யனும் சும்மா உட்கார்ந்து கிட்டே இருந்தால் எப்படிடா எழுச்சி ஏற்படும்


ரஜினி தன் குடும்பத்தை போலவே நாட்டை ஆள நினைக்கிறார் என்ன புரியவில்லையா உங்களுக்கு? ரஜினி அவரின் குடும்பத்திற்கு தலைவர் ஆனால் அவர் மனைவிதான் அதிகாரம் செலுத்தி குடும்பத்தை ஆள்கிறார். இப்ப புரிகிறதான் நான் கட்சிக்குதான் தலைவாராக இருப்பேன் ஆனால் முதலைமைச்சாரக வேறு ஒருத்தர் இருப்பார் என்பது


மோடியிடம் கறுப்பணம் எங்கய்யா எங்கய்யா என்று கேட்டவங்க எல்லாம் இப்ப மோடிய பார்த்து நாங்க பேங்கில் போட்டிருக்கும் பணத்தை மட்டுமாவது கொஞ்சம் விட்டு வைய்யா வைய்யா என்று கதற ஆரம்பித்துவிட்டார்கள்....#

புதிய இந்தியா என்று சொல்லிக் கொண்டிருந்த மோடி பாஜகவை புதிய காங்கிரஸாக மாற்றிக் கொண்டிருக்கிறார்


மோடியின் புதிய இந்தியா என்பது ஜனநாயகத்தை காலில் மிதித்து குழியில் தூக்கி போட்டுவிட்டு சர்வதிகாரத்தை நிலை நாட்டுவதுதான். அதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டு இருக்கிறார் மோடிஜி.... அதனால் மக்களே அவசரப்படாதீர்கள் புதி இந்தியா மிக் சீக்கிரம் பிறந்தே தீரும் . ஜெய்ஹிந்த்


இந்திய மக்களே மோடியிடம் இனிமேலும் நீங்க தருவதாக சொன்ன கருப்பு பணம் 15 லட்சம் எங்கே என கேட்காதீர்கள் அதற்கு பதில் நாங்கள் பேங்கில் டெப்பாசிட் செய்த பணம் எங்களுக்கு தேவையான பொழுது கொஞ்சமாவது கிடைக்குமா என்று கேளுங்கள்


ஐ லவ் க்ரோனா வைரஸ் காரணம் அதால மட்டுந்தான் மோடியின்  வெளிநாட்டு பயணத்தை தடுத்து நிறுத்தி  வெட்டிச்செலவு செய்வதை தடுத்து  நிறுத்த முடிகிறது


இந்த கொரோனா வைரஸ் மட்டும் வராமல் இருந்திருந்தா மோடிஜியும் நிர்மலாஜியும் சேர்ந்து இந்நேரம் இந்தியவை உலகின் நம்பர் 1 வல்லரசு நாடாக ஆக்கி இருப்பார்கள். இந்த வைரஸ் வந்து எல்லாம் கெடுத்துடுச்சு....#இப்படி எந்த சங்கிகளும் சொல்லாமலா இருப்பாங்க

ரஜினிக்கு வயது 69 .வயதானவர்களைத்தான் க்ரோனா அதிகம் தாக்குதாம் ரஜினி செய்தியாளர்கள் மற்றும் ரசிகர் மன்ற  கூட்டங்களை கொஞ்ச நாலைக்கு கூட்டாமல் இருந்தால்தான் வருங்காலத்தில் காமெடி பண்ண ஆள் இருப்பார் # என்ன நான் சொல்லுறது










-----------------------------------------------------------------------------
நன்றி: AP Renganathan
"ஹலோ மிஸ்டர் மோடி, நாங்க இங்கே பத்து லட்சம் கொரோனா மாஸ்க் விலைக்கு வாங்கியிருக்கோம். நீங்க?"
.
."மிஸ்டர் ட்ரெம்ப் நாங்க 20 காங்கிரஸ் எம்.எல். ஏ க்களை மட்டும் விலைக்கு வாங்கியிருக்கோம். இன்னும் கூடுதலா வாங்குறதுக்கு முயற்சி செஞ்சிகிட்டே இருக்கோம் "


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. தேவையில்லாமல் எழுச்சி, புரட்சி, திருச்சி'னு உளறி மாட்டிக்கிடுச்சு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.