Wednesday, January 22, 2020

@avargal unmaigal
திரு. ரஜினிக்கு  திறந்த மனதுடன் ஒரு  ரசிகனின் கடிதம் 
(ஓ!  இட் ஈஸ் எ ஷேம் ஆன் யூ! புரூப்ஸ் இருக்காம் புருப்ஸ்)


மிஸ்டர் ரஜினி பெரிய மனிதர்களையும் பிரபமானவங்களையும் அவதூறு செய்யறதையே தொழிலா கொண்டிருக்கே சில மஞ்சள் பத்திரிக்கைங்க அவங்ககிட்டேயும் அதுக்கெல்லாம் புருப் இருக்கும். அதுக்கெல்லாம் புருப் இருக்காதுன்னா அதை 'மஞ்சள் பத்தரிக்கைன்னு' கெளரவமானவங்க ஒதுக்குறாங்க? அது ரு மனுஷனுடைய பெருமை, திறமை எல்லாத்தையும் விட்டுவிட்டு அவனுடைய தவறுகளைப்பற்றி பேசுறதை, ஒரு பிழைப்பா வைச்சிருக்கிறதனாலே சமுதாயத்திற்கோ நாகரிகத்திற்கோ கேடுதான் ஒழிய லாபமில்லே அதனால்தான் நாம் மஞ்சள்  பத்தரிக்கைகளைக் கண்டா அருவருத்து ஒதுக்குகிறோம்? இப்ப நீங்கப் பண்ணி இருக்கிறீங்களே இதுக்கும்  அதுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க,, நீங்களும் அவங்களை மாதிரி தான் புருப் இருக்கு என்கிறீங்க  மிஸ்டர் ரஜினி எனக்கு உங்களை நினைச்சி ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஷேம்  இட் இஸ் எ ஷேம்  ஆன் யூ மிஸ்டர் ரஜினி,


மிஸ்டர் ரஜினி இப்படியெல்லாம் உங்களால் எப்படிச் செய்ய முடிந்தது.  ஒரு உயர்ந்த மனுஷனை சமுக நீதிக்காக போராடியவரை  தேவையில்லாமல் கொச்சை படுத்திருக்கிறீர்கள் தெரியுமா? ஆமாம் அவர் ராமரை இழிவுபடுத்தி இருந்தால் அது  கண்டிக்கப்பட விஷயம்தான் இல்லை என்று மறுக்க வேண்டியது இல்லை ..... ஆனால் அதை இப்ப பேச வேண்டிய அவசியம் ஏன் வந்ததது... அந்த விஷயத்தையே ஒரு கனவாக மறந்துவிட்டு பெரியாரின் சமுக நீதி கொள்கைகளை மட்டும் பின்பற்றி வரும் மக்களிடையே எப்படி உங்களால் மீண்டும் மறந்து போன சம்பத்தை மீண்டும் தோண்டி எடுத்து அதில் விஷ விதைகளை உங்களால் விதைக்க முடிகிறது. அப்படி என்ன தவறுகளை தமிழக மக்கள் உங்களுக்கு செய்து விட்டார்கள்.

மிஸ்டர் ரஜினி உங்கள் நடிப்பிற்காகத் தமிழக மக்கள் உங்களை எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் அந்த வீட்டில்  இருக்கும் தாத்தா பாட்டி முதல் இன்று இருக்கும் பேரன் பேத்திகள் வரை உங்கள் நடிப்பைப் பார்த்து சந்தோஷித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஏன் பல குடும்பங்கள் தெய்வத்திற்கு அடுத்தாக நினைத்தும் கொண்டு இருக்கிறார்கள்...




நீங்கள் சினிமா துறையில் கொஞ்சம் புகழ் உச்சியை அடைந்த சமயத்தில் நீங்கள் பல தவறுகளை மஹாபலிபுர ரிசார்ட்களிலும்  சோழா போன்ற ஸ்டார் ஹோட்டல்களிலும் செய்து இருக்கிறீர்கள் .அது உங்கள் மனசாட்சிக்கே  நன்றாகத் தெரியும்... அப்படிப்பட்ட விஷயங்களை இப்போது யாரவது ஆவணப்படுத்தி வைத்து இருந்து, அதை வெளியிட்டு மீ டூ என்று இப்போது ஊடகங்களில் வெளியிட்டு இருந்தால் எப்படி இருக்கும்... நிச்சயம் உங்களுக்கு ஒன்றும் ஆகி இருக்காது .ஆனால் உங்களை உயர்ந்த நிலையில் வைத்துப் பார்த்தவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று சற்றும் யோசித்துப் பார்த்தது உண்டா?

அப்படி  போன்ற ஒரு செயலை போலத்தான்  எல்லோரும் மறந்தும் மன்னித்தும் விட்ட பெரியாரின் செயலை மீண்டு நினைவுபடுத்தி மக்களிடம் ஒரு வித வெறுப்பு விஷ விதையை ஊன்றி இருக்கிறீர்கள்...

இன்னும் எவ்வளவோ எழுதிக் கொண்டே போகலாம்....  ஆனால் நீங்கள் முதிர்ச்சியடைந்த ஒரு பெரிய மனிதர் சற்று அமைதியாக இருந்து யோசித்துப் பாருங்கள் அதன் பின் உங்களை இப்படிச் செய்யத் தூண்டியது எது யார் என்று உணருங்கள் அது தவறு என்று நினைத்தால் மனம் திறந்து மன்னிப்பு கேளுங்கள்

இல்லையென்றால் மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியரைப் போலத்தான் உங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்

டாட்

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. சரியான வாசகம் அடங்கிய கடு'தாசி'

    ReplyDelete
  2. நடுநிலையோடு சிறப்பாக எழுதப்பட்ட கடிதம்.

    ReplyDelete
  3. நம்ம குடும்பத்துலயும் ஒருத்தி இருக்காங்குற எண்ணம் கூட இல்லாம பெரிய பதவிக்கு வர்றவளுக எல்லாம் அடுத்தவனோட படுத்து தான் வர்றாளுகன்னு ஒருத்தன் சொல்லுறான்.
    இன்னொருத்தன் சொல்லுறான். போராட்டத்துக்கு வர்றவனெல்லாம் சைட் அடிக்க தான் வர்றானுகன்னுட்டு.
    இதெல்லாம் போன வருசம் நடந்த சம்பவம்.
    அதெல்லாம் தெரியாத மாதிரி இருந்துட்டு அம்பது வருசத்துக்கு முன்னால நடந்த சம்பவத்த தூக்கிட்டு வர்றதெல்லாம் ஒரு கச்சி தலைவனுக்கு நல்லாவா இருக்கு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.