Friday, December 27, 2019

@avargal unmaigal
புதிய இந்தியாவை நோக்கி பீடு நடைபோடும்  மோடியின் நடைப்பயணம்




இப்போது இந்தியாவின் பிரதமர் மோடியாக இருக்கலாம் ஆனால் ஆள்வது என்னவோ அமித்ஷாதான்..... மோடி இந்தியாவின் செல்லூர் ராஜுவாக மாறிவிட்டார் எனலாம்


இந்திய அளவில் மோடி  ஜெயலலிதாகவும் அமித்ஷா சசிகலாவாக மாறிவிட்டது போல எனக்கு தோன்றுகிறது அமித்ஷாவின் பிடியில் மோடி இருக்கிறார் போலவும் இருக்கிறது ஆனால ஜெயலலிதா இறந்த மாதிரி மோடியும் இறந்து போய்விடுவாரோ என்று எல்லாம் சந்தேகமும் வருகிறது.. இன்னும் எத்தனை நாளுக்குத்தான் மோடிக்காக பல்லாக்கு தூக்குவது அதற்கு பதிலாக நாமே பல்லாக்கில் உட்கார வேண்டும் என்ற ஆசை அமித்ஷாவிற்கு வந்து இருக்கலாம்தானே... அமித்ஷா என்ன மகானா அவரும் சராசரி மனிதர்தானே



ஒரு காலத்தில் #மன்மோகன்சிங்கை கழுவி கழுவி கொட்டினோம் ஆனால் இப்ப #மோடி ஆட்சியை பார்க்கும் போது மன்மோகன்சிங் ஆட்சியே பெட்டராக இருக்கிறது போல தோன்றுகி
து அது போல #பாகிஸ்தானை  நாம் கழுவி கழுவி கொட்டுகிறோம் ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் பாகிஸ்தானே #இந்தியாவை விட சிறந்த நாடாக மக்களுக்கு தோன்றினாலும் தோன்ற வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. சொன்னவை நடக்கும் வாய்ப்புள்ளது.
    காரணம் குரு எட்டாம் வீட்டிலிருந்து வெளியேறி விட்டாராம்.

    ReplyDelete
  2. எனக்கென்னவோ அமித் ஷா விற்கு நீங்களே ஐடியா கொடுப்பது போல் இருக்கிறது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.