Sunday, September 22, 2019

இந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்

அக்டோபர் 21 ல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடை பெறப்போகிறதாம்.. நிச்சயம் பாஜகவும் அதனது ஆதரவு கட்சிகளும் பல இடங்களில் வெல்லும் என்று அடித்து கூறுகிறேன்..

அது எப்படிங்க? மோடி ஆட்சியில்  நாட்டுக்கு நல்லதுஏதும் நடந்து இருக்கிறதா ? இவ்வளவு உறுதியாக சொல்லுறீங்க


மோடி ஆட்சியில் பொருளாதாரம் சிரழிந்து கொண்டிருக்கிறது வேலை இழப்பும் அதிகமாகி கொண்டிருக்கிறது..

அப்படின்னா அவங்க எப்படி அதிக சீட்டில் வெற்றி பெற முடியும்... மக்கள் என்ன அவ்வளவு முட்டாளா என்ன?

யோவ இந்திய மக்களை முட்டாள் என்று சொல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை... அவங்க எல்லாம் பெரிய அறிவாளிங்க அதனாலதான் சொல்லுறேன் பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் அதிக சீட்டில் வெல்லும் என்று

நீங்க சொல்ல வருவது ஒன்றும் புரியவில்லையே

அதுதானாய்யா இந்தியன்  லாஜிக்

அது என்ன இந்தியன் லாஜிக்

சும்மா சும்மா கேள்வியாக கேட்காதைய்யா...... கடைசி பதில் இதுதான் இதுக்கு மேலே கேள்வி கேட்க கூடாது. ஒகேவா

சரிங்க

மக்கள் எந்த கட்சியை பெரும்பான்மையாக வெறுக்கிறார்களோ அந்த கட்சி பெரும்பான்மையான இடத்தில் அமோக வெற்றி பெரும்.... அதுதான் இந்தியன் லாஜிக் அது எப்படி சாத்தியம் என்று எல்லாம் கேட்க கூடாது அவ்வளவுதான் சொல்லுவேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இந்த இடைத்தேர்தலில் பாஜக பாதி இடத்தில் வெல்லும் மீதி பாதி இடங்களில் வெல்லுபவர்களை தேர்தலுக்கு பின் தன் பக்கம் இழுத்து கொள்ளும்

4 comments:

  1. Replies
    1. பேசாமல் ஆருடம் பார்க்க இந்தியா வந்துடலாம் என்று சொல்லுங்க

      Delete
  2. கணிப்பு பொய்க்குமா ?

    ReplyDelete
    Replies


    1. வோட்டிங்க் மிஷினைத்தான் கேட்கணும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.