Saturday, May 11, 2019

@avargalunmaigal
அமெரிக்க பத்திரிகை டைம்ஸின் கருத்தும் சங்கிகளின் கருத்தும்

இந்திய பிளவுவாதிகளின் தலைவர் மோடி' என, அமெரிக்க பத்திரிகையான, 'டைம்ஸ்' விமர்சித்துள்ளது.


அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சர்வதேச பத்திரிகை, டைம்ஸ். கடந்த, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில், உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில், பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தியது. இப்போது, 'இந்திய பிளவு சக்திகளின் தலைவர்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள, அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, மோடி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார்.இந்தியாவின் எதிர்காலம், பிரகாசமாக இருக்கும் என, மக்கள் நம்பினர்.


ஆனால், தனது உறுதிமொழிகளை செயல்படுத்தாத மோடி, 2019 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற, சாதாரண அரசியல்வாதி போல் பிரசாரம் செய்கிறார். மதம் சார்ந்த தேசியம் என்ற விஷத்தை, மக்களிடம் புகுத்தி வருகிறார். வளர்ச்சிக்கான தலைவராக கருதப்பட்டவர், இப்போது, இந்திய பிளவு சக்திகளின் தலைவராக உள்ளார். இந்திய மக்களிடம் ஒற்றுமை குறைந்து, வேற்றுமைகள் அதிகரித்திருப்பது தான், மோடி செய்த சாதனை என்று அந்த பத்திரிக்கை விமர்சித்துள்ளது..



கடந்த, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில், உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில், பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தியது என்று எழுதிய போது சங்கிகள் உலகமே மோடியை பாராட்டுகிறார்கள் என்று  அதற்கு அங்கிகாரம்தாம் இந்த டைம்ஸ் பத்தரிக்கை என்று பாராட்டி தள்ளினார்கள்

ஆனால் இப்போது இந்திய பிளவுவாதிகளின் தலைவர் மோடி' என்று எழுதியவுடன் அதெல்லாம் ஒரு பத்திரிக்கையா டைம்ஸ் நம்ம முரசொலி, நக்கீரன், விகடன் நமது எம்ஜிஆர் மாதிரி ஒரு பாரம்பரிய மஞ்சள் பத்திரிக்கைதான் என்று கதறிக் கொண்டு இருக்கிறார்கள்


அதே பத்திரிக்கை மோடியை வைத்து அட்டை கட்டுரை எழுதும் போது இனித்தது. இப்பொழுது கசக்கும்.

மோடியை பாராட்டிய போது அது கிறிஸ்டியன் பத்திரிக்கையாக கண்ணுக் தெரியவில்லை ஆனால் அது அமெரிக்க ஆதரவு பெற்ற கிறிஸ்டியன் பத்திரிக்கை என்று இந்த சங்கிகளின் கண்களுக்கு இப்போது தெரிகிறதாம்

மோடி உண்மையில் பாராட்டுகுரியவர் என்றால் ஐந்து ஆண்டு சாதனையை கூறி வோட்டு கேட்காமல் அபிநந்தனை வைத்து வோட்டு கேட்கும் இழி நிலைக்கு பீ ஜெ பீ சென்றிருக்குமா? எப்பேர்ப்பட்ட அயோக்கியனாக இருந்தாலும் அவன் மரணித்த பிறகு அவனை தூற்றும் விதமாக நல்ல அறிவு உடையவர்கள் பேச மாட்டார்கள். மோடியின் ராஜிவ் குறித்த பிரச்சாரத்தை அவர் கட்சியை சேர்ந்தவர்களே விரும்பாததை  பாஜக ஆதரவு  நாளிதழ்கள் கூட பதிவிட்டிருந்தது. மோடி ஏதோ வெறி பிடித்த பித்தனை போல் அவரின் பரப்புரைகள் இந்த தேர்தலில் இருந்தது


மோடியை போல் ஒரு வெறுப்பு அரசியலை முன்னெடுத்து சென்ற அரசியல்வாதியை இந்த இந்நாடு கண்டதில்லை. அவரை போலவே அவரின் பக்தாளும் வெறுப்பு அரசியலில் இருப்பதை சமுக இணைய தள பதிவுகளிலேயே காணமுடியும்.


நம் இந்திய பத்திரிக்கைகள் எழுதத் சொல்ல துணியாத உண்மையை அமெரிக்க பத்திரிக்கைதான் போட்டு உடைக்கிறது அந்த அளவிற்குத்தான் இந்தியாவில் மோடியின் ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறது





அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு : கடந்த பல வருடங்களாக நான் சொல்லி கொண்டிருந்ததைத்தான்  டைம்ஸ் பத்திரிக்கை இப்போதுதான் அறிந்து வெளியிட்டு இருக்கிறது .டைம்ஸ் ரொம்ப ஸ்லோ ஹீஹீ

1 comments:

  1. யார் என்ன சொன்னால்தான் என்ன மோடிதான் இந்தியப் பிரதமர் என்று நம் பத்திரிக்கைகள் கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.