Thursday, January 24, 2019

மதுரையனந்தா  --  சும்மா யோசிக்கையிலே!!!


வாழ்க்கையில்  வெற்றி தோல்வி என்பது இல்லை... நாம் எந்த அளவிற்கு முயற்சிகள் செய்தோமோ அந்த அளவிற்கு பலன்கள் கிடைக்கின்றன. அவ்வளவுதான்


உண்மை கசக்கும்... பொய்கள் இனிக்கும் இப்ப தெரியதுதா உலகிலேயே இந்தியர்கள் ஏன் அதிக அளவு சுகர் பேஷண்டாக இருக்கிறார்கள் என்று?

இன்றைய மக்களுக்கு தேவை உண்மைச் செய்திகள் அல்ல அழகான பொய்ச் செய்திகள்தான் அவர்களின் தேவையாக இருக்கிறது.
 


முன்பு ஒரு காலத்தில் மனைவி உப்புமா செய்து கொடுத்தால் என்ன உப்புமாவா என்று எரிச்சலுடன் கேட்கும் நாம் கால சக்கர சுழற்சியில் நாம் இன்று செய்யும் உப்புமா நமக்கு தேவாமிர்தமாக இருக்கும் நேரத்தில்  மனைவி நம்மை பார்த்து கேட்பது என்ன உப்புமாவா என்றுதான்




நீங்கள் நல்லது மட்டுமமே செய்து கொண்டிருந்தாலும் அதிலும் குற்றம் கண்டுபிடிப்பவர்கள் இந்தியர்களாகவே இருப்பார்கள்


கருத்து வேறுபாடுகள் உள்ள யாரிடமும் நட்பு பாராட்டலாம் ஆனால் சங்கிகள்/பக்தால்ஸ் கூட நட்பு கொண்டு இருப்பது கொடிய விஷத்தன்மை கொண்ட நாகத்திடம் கொண்டிருப்பது போலத்தான்... அது ஒரு நாளவது நிச்சயம் உங்களை கொத்திவிடும்#ஜாக்கிரதை மக்களே


சங்கிகள்/பக்தால்ஸ் கூட மட்டும் விவாதம் பண்ண வேண்டாம்.காரணம் அவர்கள் சொன்ன பொய்களை அவர்களே உண்மை என்று நம்பி நம்மிடம் பேசிக் கொண்டிருப்பார்கள்

பொய்களை சத்தம் போட்டு பேசினால் அது உண்மை என்று நம்புபவர்கள் சங்கிகள்/பக்தால்ஸ்  மட்டுமே


நம்மை சுற்றியுள்ள உலகத்திற்கு ஒரு முகம் . நம் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு முகம்.. அடுத்து யாருக்குமே தெரியாத நம்முடைய உண்மையான முகம்.. இந்த முகம் நமக்கு மட்டுமே தெரியும்.... இப்படி பல முகங்களை அணிந்து கொண்டு வலம் வரும் நேரத்தில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகளாகத்தானே இருக்க முடியும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : தூங்கும் முன் யோசித்தால் இப்படித்தான் யோசிக்க வருகிறது

4 comments:

  1. ஹா ஹா ஹா நம்ம ஞானி, அமுதசுரபி அப்பாவி புலியூர் பூஸானந்தாவுக்குப் போட்டியா மதுரையனந்தாவா!! பூஸாந்தா வந்தார்னா உங்ககிட்ட பௌன்ட் ஸ்டெர்லிங்க்ல ஒரு பெரிய தொகையே ரெஜிஸ்ட்ரேஷனுக்கு அவங்க செக் கிட்ட கொடுக்க சொல்லப் போறாங்க...

    கீதா

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் முகமூடி
    அணியாது அகத்திலேயே
    மூடி போட்டிக் கொள்ளும் கலையை
    அனைவரும் கற்றிருக்கிறார்கள்
    ஆகையால் நீங்கள் சொல்வது போல
    அகத்தின் அழகு முகத்தில் தெரிய
    நிச்சயம் வாய்ப்பில்லைதான்

    ReplyDelete
  3. உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் பலரும் முன் வாய்ப்பல் தெரிய கடைவாய்ப்பல்லால் கடித்துக் கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.