Thursday, August 2, 2018

சுகமான பயணத்திற்கு ஏர் இந்தியா


ஏர் இந்தியா விமானங்கள் சமீபகாலமாக மீடியாக்களில் பேசப்படுகின்றன...ஆனால் அந்த பேச்சுக்கள் நமக்கு பெருமையை தரக் கூடியதாக இல்லை..ஏர் இந்தியா இந்திய அரசினால் நடத்தப்படுகிறது அதன் செயல்பாடுகள் இந்திய அரசின் செயல்பாட்டுக்களை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது...பயணங்களில் விமானப்பயணம் என்பது இன்னும் பிரஸ்டிஜ் பயணமாக கருதப்படுகிறது.. ஆனால் ஏர் இந்திய விமானப்பயணம் அதை தகர்த்து சமத்துவ பயணமாக மாற்
முயற்சிக்கிறது

மோடியின் ஆட்சியில் விமானப்பயணமும் சாதாரண அரசு பஸ்பயணம் போல ஆக்கி வருகிறது... அதன் விளைவாகவே சமீப காலங்களில் ஏர் இந்தியா விமானங்களில்  மூட்டைபூச்சிகளுக்கு  பிஸினஸ் க்ளாசில் இலவசமாக பயணிக்க அனுமதி அளித்து இருக்கிறார் மோடி.

மோடியின் இந்த திட்டதை ஆண்டி இண்டியன்கள் எதிர்த்து வருகிறார்கள்... இவர்கள் எப்படி எதிர்த்தாலும் இந்த திட்டத்தில் இருந்து மோடி அரசு பின் வாங்கப் போவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறது..

அதன் விளைவாக பல ஏர் இந்தியா விமானங்களில் மூட்டை பூச்சிக்கள் இப்போது அதிகமாக இருக்கிறது

மேலும் விபரமாக படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்
Passenger Tweets Pic Of Bedbug Bites, Took Air India US To Mumbai Flight 

 Air India Flight With 200 Passengers Delayed By 9 Hours. Reason: A Rat

சரி இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நாட்டின் மூலையில் ஏதாவது நல்லது நடந்தால் அது மோடியால்தான் நடந்தது என்று முட்டு கொடுப்பவர்கள் இதற்கு மட்டும் பேசாமல் இருந்தால் எப்படி?

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. கதவில்லாத ஏர் பஸ் விடலாம்ன்னு இருக்கு, புட்போர்ட்ல போக வசதியா இருக்கும்ல

    ReplyDelete
  2. மூட்டைப்பூச்சி என்பது ஏதாவது குறியீடோ!

    ReplyDelete
  3. உண்மை டவுண் பஸ்ஸின் நிலைதான்...

    ReplyDelete
  4. டிஜிட்டல் இந்தியால இப்புடிதான் இருக்கும்...

    ReplyDelete
  5. இந்தியால பஸ்ல ஃப்ரீயா யோகட் கொடுப்பாங்களா! ;) ஒரே ஒரு தடவை தான் பயணம் செய்தோம். அப்படி இருந்தன அனுபவங்கள். மறக்கவே முடியாது. என் சீட்டின் வழியை மறித்தபடி நின்ற பயணி ஒருவர், என்னை "வழியை மறிச்சுட்டு நிக்காம கடந்து முன்னால போங்க," என்றதோடு பயணம் ஆரம்பம். ;) பயண நடுவில் திடீரென்று ஒரு யோகட் கிண்ணம் என் தோளுக்கு மேலாகப் பறந்து முன்னால் தரையில் சொத்தென்று விழுந்தது. யாரும் சுத்தம் செய்யக் காணோம். விமானப் பணிப்பெண்கள் உட்பட அனைவரும் அதை மிதித்து மிதித்து நடந்தார்கள். இப்போது நிலைமை மாறி இருக்கும் என்று நினைத்தேன். ;(

    ReplyDelete
  6. ஏர் இந்தியா நிறுவனம் திரு மொரார்ஜி தேசாய் காலத்தில்தான் அரசுடைமை ஆக்கப் பட்டது என நினைக்கிறேன் , திரு டாடா அவர்கள் அதன் பின் பல முறை அதன் சில குறைகளைப் பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார்

    ReplyDelete
  7. Actually he was removed from the chairmanship of Air India and not Nationalised.
    Tata continued as chairman of Air-India till 1978, when his services were unceremoniously terminated by then Prime Minister Morarji Desai.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.