Tuesday, July 3, 2018

avargal unmaigal
திருடு போகும் வரை தான் கடவுளாம்.


தமிழகத்தில் கோவில் சிலைகள் திருட்டு போனதற்கு எந்த ஜீயரும் ஏன் இன்னும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கவில்லை...


வெளிநாட்டு மோகம் தமிழக சாமிகளையும் வீட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள 7000 சாமிகள் கள்ளத்தனமாக வெளிநாட்டுக்கு தப்பி  ஒட்டம்



தமிழக கோயிலில் உள்ள சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டன. இனிமேல் பகதர்கள் சாமி கும்பிட விசா எடுத்து வந்தால்தான் உண்டு


தமிழகத்தில் இருந்து கடத்தப்படாத சாமி எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என்று  செய்திகள் வந்தால் ஆச்சிரியப்படுவதற்கில்லை


தமிழக மக்களின் கோரிக்கைகளை சாமிகள்  செவி கொடுக்காதற்கு காரணம் கோயிலில் இருக்கும் சாமிகள் எல்லாம் போலி சாமி சிலைகள்தான்


தமிழ் பாட டெஸ்டில் சிவனும் பெயிலானார்.அதை அறிந்துதான்  சிவனுக்கு தமிழ் தெரியாது. என்று ஜக்கி வாசுதேவ் சொல்கிறார் போல


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. இந்த நிகழ்வுகள் வெகுகாலமாக இறை நம்பிக்கையை அவநம்பிக்கை ஆக்குவது உண்மைதான்.

    ReplyDelete
  2. //திருடு போகும் வரைதான் கடவுளாம்//

    சரிதான். திருடு போன கடவுள் மீட்கப்படும்போது வெறும் சிலை ஆகிவிடுகிறது. 'கடவுள் மீட்கப்பட்டார்' என்று செய்தி போடாமல் 'சிலை மீட்கப்பட்டது' என்றுதானே போடுகிறார்கள்!

    ReplyDelete
  3. கடவுளும் பணம்பார்க்க உதவுகிறாரோ

    ReplyDelete
  4. எந்த திருடனும் தன் வீட்டில் திருடு போனால் கம்முன்னு தான் இருப்பான்! இல்லை திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி தான் கம்முன்னு தான் இருப்பான்!

    Disclaimer:
    இந்த மறுமொழிக்கும் எந்த ஜீயருக்கும் குருக்களுக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்!

    ReplyDelete
  5. உண்மையான கருத்து . ..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.