Wednesday, July 18, 2018

முட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி?

ஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பொழிந்து தமிழகத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பிவிட்டன. அவர் தமிழகத்திற்கு திரும்பி வந்ததும் மழை நின்றுவிட்டன. என்று எடப்பாடி சொன்னதாக செய்தி சேனல்களில் செய்து வந்து இருக்கின்றன..

இந்த செய்தியை படித்ததும் எடப்பாடி தான் பேசுவதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் உளறி இருக்கிறார்.


அட முட்டாளே உன் கூற்றுப்படி ஸ்டாலின் இல்லாததால் இங்கு மழை பெய்து அணைகள் நிரம்பி இருக்கின்றன என்றால் அவர் வராமல் அங்கேயே இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் மழை தொடரந்து அணைகள் நிரம்பி தமிழகம் வெள்ளக்காடாக ஆகி இருக்குமே..

அவர் திரும்ப வந்ததால்தான் மழை நின்றது என்றால் அவர் தமிழகத்திற்கு நல்லதுதானே செய்து இருக்கிறார்.


ஸ்டாலின் நாட்டைவிட்டு வெளியேறினாதான் மழை பெய்யும் என்றால் தமிழகத்திற்கு எப்போது எல்லாம் மழை தேவையோ அப்போது எல்லாம் அவரை அரசு செலவில் லண்டன் அனுப்ப எடப்பாடி உத்தரவு இடுவாரா என்ன?

அடிமைகளுக்கு சிந்திக்கும் அறிவு இல்லை என்பதை மீண்டும் எடப்பாடி நிருபித்து இருக்கிறார்

 ------------------------------------------------------------------------
ஸ்டாலின் லண்டன் போனார்
நிம்மதியாய் இருந்தேன்
திரும்பி வந்தார்
என் சம்பந்தி வீட்டில் ரெய்டு வந்திச்சு
100 கிலோ தங்கம் போச்சு
300 கோடி ரொக்கம் போச்சு
3000 கோடி சொத்து போச்சு
குடும்பத்தில் நிம்மதி போச்சு
குழப்பம் வந்திச்சு

எடப்பாடி புலம்பல் ..................... .........இரணியல் இளையரவி



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. ஹ ஹா இனி ஸ்டாலினுக்கு வெயில் நேரமெல்லாம் லண்டன் தான்.

    ReplyDelete
  2. இதைக்கேட்டு ரசித்து சிரிக்க எடப்பாடியை சுற்றி ஒரு அடிவருடிகள் கூட்டம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.