Monday, April 23, 2018

@avargal unmaigal
ராமர் பெயர் சொல்லி மோடி செய்வது ஆன்மிக அரசியலா அல்லது அயோக்கியதனமான அரசியலா?

இந்த பிரபஞ்சத்தை இயக்குபவர் இந்து கடவுளான விஷ்ணு அவர் தனது ஏழாவது அவதாரமாக ராம அவதாரம் எடுத்து இந்த உலகத்தில் நுழைகிறார். இந்த அவதாரம் விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாக கருதப்படுகிறது

தசரதர் மற்றும் கௌசல்யா ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்தார், அவர் மரியாதா புருஷோத்தம் ராமர் அல்லது நல்லொழுக்கத்தின் இறைவன் என்று அறியப்படுகிறார். இறைவன் விஷ்ணு ராம வடிவில்  அவதரிததது இருப்பது போல் , ​​அவரது மனைவியான லக்ஷ்மி சீதாவாக அவதரித்து, அவர் ராமரின் மனைவி ஆனார்.


தர்மம் மற்றும் தார்மீக நெறிமுறைகளின் கொள்கையுடன், ராமர் தனது சொந்த மக்களால் தனது வாழ்நாள் முழுவதிலும் கடுமையான சோதனைகள் மற்றும் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, அவரது தந்தையின் கௌரவத்தை காப்பாற்றுவதற்காகவும், அவர் தனது பேரரசை கைவிட்டு, கேள்வி கேட்காமல் காட்டில் ஆண்டுகள். பதினான்கு ஆண்டுகள் சிறையில் கழித்தார் அவரது மனைவியும் சகோதரருமான லக்ஷ்மணா அவருடன் பதினாங்கு ஆண்டுகள் வசித்தனர்

 இலங்கை அரசரான ராவணனால்  சீதா கடத்தப்பட்டார். சீதாவைத் தேடச் செய்து, ராமன் வனரஸர்கள் (குரங்குகள்), ஹனுமான் , லக்ஷ்மணன் மற்றும் வீரர்களுடன் ராவணனுக்கு எதிராக கடுமையான போர் நடத்தி ராவணனின் அழிவுக்கு வழிவகுத்தார், இந்த வெற்றி தீமைக்கு எதிராக கிடைத்த நல்லது என்று அறியப்படுகிறது. அவரது சிறைவாசத்தை முடித்தபின், ராமர் அயோத்திக்குத் திரும்பினார், பேரரசராக நியமிக்கப்பட்டார், ராம ராஜ்யத்தை நிறுவினார், இது மகிழ்ச்சியின் காலம், செழிப்பு, சமாதானம், கடமை மற்றும் நீதி என அழைக்கப்பட்டது.


ராமார் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வழிநடத்திச் சென்றார், அதானல் மக்கள் அவரை  தங்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டனர்  அவர் ஒரு சிறந்த மனிதன். அவரது தைரியம், தன்னிறைவு, விசுவாசம் மற்றும் மதிப்புகள் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக ஊடுறுவி வணங்கப்பட்டன,. அப்படிபட்ட  ராமரிடம் இருந்து கற்றுக் கொள்ள  வாழ்க்கை பாடங்கள் உள்ளன.

@avargal unmaigal

1. வாக்குறுதியை மதித்து செயல்பட வேண்டும்

சொன்ன சொல்லை காப்பற்றுவதுதான் ராமயனத்தில் ராமர் நமக்கு எடுத்து சொல்லும் ஒரு முக்கியமான செய்தி. அதில் நாம் சொன்ன சொல்லை காப்பாற்ற எந்த பிரச்சனையை எதிர்கொண்டாலும் சரி என்ன விலை கொடுத்தாலும் சரி அதனை காப்பாற்ற வேண்டும் என்பதுதான். தசரதன்  தனது மனைவியான கைகேயிக்கு அளித்த வாக்குறுதியை காப்பற்ற தனது மூத்த மகனான ராமரை பரத்துதான் அடுத்த மன்னர் என்று அறிவிக்க செய்து அதன் பின் வனவாசத்திற்கு காட்டுக்கு அனுப்பிவைத்தார். ராமரும் தந்தைக்கு வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வேறு எந்த வித சிந்த்னைகளும் எழாமல் தந்தைக்கு வாக்குறிதி கொடுத்து அதன்படியே நடந்து வந்தார்



ஆனால் ராம நாமத்தை சொல்லி ராமரை பூஜிக்கும் நம்ம பாரத பிரதமர் சொன்ன வாக்குறிதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார் அப்படிபட்டவர்  நிச்சயம் ராம பக்தராக எப்படி இருக்க முடியும்

2, மனைவியிடம் விசுவாசமாக இருங்கள்.


ராமர் வனவாசம் சென்ற போது அவர் கூட சென்ற சீதாவை ராவணன் கடத்தி சென்ற போது இதயம் உடைந்த ராமர் ராவணனுடன் போர் தொடுத்து மனைவியை மீட்டு வந்தார், அப்படி மீட்டு வந்த சீதாவின் மீது சந்தேக கேள்வியை எழுப்பின போது அவரை தீக்குளிக்க செய்து மனைவி களங்கமற்றவள் என்பதை நிலை நிறுத்தி தன் வாழ்க்கை பயணத்தை அவருடன் மீண்டும் தொடங்கினார்..


ஆனால்  ராம நாமத்தை சொல்லி ராமரை பூஜிக்கும்  மோடியின் மனைவியை யாரும் கடத்தவில்லை அவர்தான் விட்டு சென்றார். சரி அப்படி விட்டு சென்ற அவர் ராஜ்யத்தை ஆளும் நிலைக்கு வந்த பின்னாவது கூட்டி வாழ்க்கை நடத்துவ்துதானே ராமரை பூஜ்ஜிக்கும் அவருக்கு ஒரு தகுதி ஆனால் அதிலும் ராமரின் வழியை பின்பற்றாமல் ராமரின் பக்தராக அவர் எப்படி இருக்க முடியும்


3. ஒரு மென்மையான & இரக்கமுள்ள மனித மனிதராக இருங்கள்


வனவாசம் செய்தாலும் அங்கு ராமர் மிக எளிமையான மனிதராகவே வாழ்ந்தார், தனக்கு பசித்த போது சப்ரி என்ற பெண் கடித்து சுவைத்த பழத்தை முக கோணாமல் வாங்கி தின்று தன் பசி தீர்த்தார அது போல இலங்கைக்கு பாலம் கட்டும் போது பலரும் அதற்கு உதவினார்கள் அப்போது சிறு அணிலும் அதற்கு உதவியை பார்த்த ராமர் அதை தன் கையில் எடுத்து தடவி கொடுத்தார்,மேலும் நம் வாழ்வில், நாம் ஒருபோதும் மக்களுக்கு இடையில் ஒருபோதும் பாரபட்சம் காட்டக்கூடாது அல்லது அவர்களது தோற்றத்தால் அவற்றை தீர்த்து வைக்கக் கூடாது. மேலும் விலங்குகளுக்கு நாம் காட்டுகின்ற கொடூரமும் இரக்கத்தின் செயலிலிருந்து தொலைவில் உள்ளது.


ஆனால்  ராம நாமத்தை சொல்லி ராமரை பூஜிக்கும்  மோடியின் செயல்களோ இதற்கு எதிர்மாறாக இருக்கிறது, மோடி மென்மையானவராக இரக்கமிக்கவராக இருப்பதற்கு பதிலாக அப்படி இருப்பது போல நடிக்கிறார். விவசாயிகள் பலர் நாடும் முழுவதும் தற்கொலை செய்த போதிலும் காவிரி பிரச்சனைகளில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்த போதிலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாத இரக்கம்ற்றவராக இருக்கிறார். அப்படிபட்ட இவர் ராம நாமத்தை சொல்லுவது  மகா பாவம்


4 .நீதியின் பூர்வீகம்
தர்மத்தின் பாதையைத் தொடர்ந்து, மரியாதா புருஷோத்தம் ராமர் தனது வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் உண்மையாகவும் நேர்மையானவராகவும் எடுத்துக் கொண்டார்.

அவர் உண்மையாக வெற்றி பெற்று அரியனையில் ஏரும் போது அவர் மனைவியின் மீது சந்தேக முட்களை தூக்கி எறிந்த போது அந்த சந்தேகங்களை களைந்து அரியனையின் புனிதத்தை ராஜ்யத்தின் முன் தனது தூய்மையை நிருபிக்க கொடுரமான சோதனையான அக்னி பரிட்சையில் சீதாவை பங்கேற்க  வைத்து நிருபித்து காட்டினார்


ஆனால்  ராம நாமத்தை சொல்லி ராமரை பூஜிக்கும்  மோடியோ இவைகளில் ஒன்றை கூட செயல்படுத்தவில்லை.. இவரது ஆட்சியில்தான் நீதியை வழ்ங்கும் நீதிபதியின் மேல் சந்தேகம் வந்தாலும் அந்த நீதிபதி தொடர்ந்து நீதி வழங்குவதற்கு பதில் அநிதி வழங்கினாலும் ராமரிம் பெய்ரால் ஆட்சி நடத்தும் மோடி மெளனம் காத்து வருகிறார்



அதுமட்டுல்ல ராம நாமத்தை  சொல்லி ராமரை பூஜிக்கும் மோடியின் பக்தர்களும் மோடியை போலவே இருக்கிறார்கள். இவர்கள் ராம ராஜ்யத்தை பற்றி பேசுவது ராமருக்குதான் இழுக்கு.



ஒரு வேளை ராமர் மனித அவரதாரம் எடுத்து வந்தால் இந்த பதிவில் உள்ள படத்தில் சொல்லுவது போலத்தான் சொல்லி சென்று இருப்பார்



அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. படிக்குறது ராமாயாணம், இடிக்குறது ராமர் கோவில்ன்னு சும்மாவா சொன்னாங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹீஹீ சரியாகத்தான் சொல்லுறீங்க

      Delete
  2. ராமரையும் மோடியையும் ஒரெ தராசில் நிறுத்துவதைக் கண்டிக்கிறேன் ராமர் ஒரு கற்பனைகதா பாத்திரம் ஆனால் மோடியோ ரத்தமும் சதையுமாக நம் முன்னே உலவுபவர் ஒருவரோடு ஒருவரை ஒப்பிடுதல் சரியா

    ReplyDelete
    Replies
    1. ராமரையும் மோடியையும் ஒரே தராசில் நிறுத்தவில்லை... ராமர் பெயர் சொல்லி ஊரே ஏமாற்றுவதைத்தான் இங்கே சொல்லி இருக்கிறேன்

      Delete
  3. என்ன மாதிரியான சமூகத்துல சார் இருக்கோம்? எங்கள் ராமன் சம்பூகன் தலையை கொய்ததைப்போல ராமனின் தற்கால அவாதாரங்களான மோடியும் அமித் ஷாவும் லோயா போன்ற ராமரின் பக்தர்களுக்கு விரோதிகளின் எத்தனை தலைகளை தினந்தோறும் கொய்து ராமராஜ்யத்தை உங்கள் கண்முன்னே நடத்திக்காட்டுறது தெரியாம எப்ப பார்த்தாலும் மோடியவே குத்தம் சொல்லிக்கிட்டு... ச்சை.. ராமன் கூட வாலியை மறைஞ்சு நின்னுதான் தாக்கினான்.. ஆனா எங்க தலைவரு அப்படியா? என்ன சார் ஒரு நேர்மை வேணாம்?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.