Sunday, February 25, 2018

@avargalunmaigal
அமெரிக்கனுக்கு புரியாதது  ஆனால் இந்தியனுக்கு  கொஞ்சமாவது புரியும்தானே(நாட்டு நடப்புகளும் கருத்துகளும் )


ஸ்ரீதேவியின் சாவு ஒரு நல்ல சாவுதான்...எந்த வித உடல் நல குறைவுகள் இல்லாமல்......யாரையும் ஏமாற்றி பிழைக்காமல் கடைசிகாலம் வரை மற்ற்வர்களை மகிழ்வித்து மற்றவர்களின் மனதில் நீங்காமல் பதிந்து சென்று இருக்கிறார். செத்தால் இப்படித்தான் சாக வேண்டும்  ஜெயலலிதா போல அல்ல


#ஸ்ரீதேவி நடித்த  English Vinglish படத்தை காட்டிதான் என் மனைவி எனக்கு சாப்பாடு ஊட்டுவார். அதை பார்த்து வாழ்ந்து வந்தவன்தான் நான். RIP

ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மும்பைக்கு செல்கிறாராம் ரஜினி செல்லட்டும் அது தப்பில்லை .ஆனால் தமிழக முதல்வராக வர ஆசைப்படும் அவர், சிலரால் விழுப்புரத்தில் வன்புணர்வு செய்து கொலை செய்த 14 வயது சிறுமியை பார்க்கவோ அல்லது அதை பற்றி அறிக்கைவிடாதது ஏன்? #தமிழர்களே கொஞ்சம் யோசியுங்கள்



தமிழக பிரச்சனைகளுக்கு அறிக்கைகூட விடாமல் முதல்வராக நினைப்பதும் தமிழக மக்களை வண்புணர்வு செய்வது மாதிரிதான்

பிரபலங்கள்(#ஸ்ரீதேவி )வெளிநாட்டில் செத்தால் உடனே பிரேத பரிசோதனை செய்துவிட்டு ஒரு சில தினங்களில் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் ஆனால் பிரபலங்கள் (#ஜெயலலிதா) சென்னையில் செத்தால் #அப்போலோவில் 72 நாட்கள் சிகிச்சை அளித்துவிட்டுதான் பிரேத பரிசோதனை செய்துவிட்டு அனுப்புவார்கள்


#ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கவில்லை ஜெயலலிதா பெயரை சொல்லி ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அம்மா ஆட்சி என்று சொல்லிக் கொண்டி அடிமைகள் ஆட்சி செய்வது போலத்தான் இந்த சிலை கதையும்... விஷயம் அவ்வளவுதானய்யா


ஜெயலலிதா இருந்தவரை பொத்திகிடந்தவர்கள் இப்போது முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது போல மோடி இருக்கும் வரை பொத்திகிடக்கும் இவர்கள் அவர் மறைந்த பின்னர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டாலும் படலாம்... ஆனால் ஆசைபடுவதில் தவறு இல்லை ஆனால் அவர்கள் ஆசைகள் மட்டும்  நிராசைகளாகவே போகும்



பட்டினி பசிக்காக ஒருத்தன் திருடிவிட்டான் என்று அடித்து கொன்ற சமுகம்தான் நாட்டையே சுரண்டிக் கொண்டு பலரை பட்டினி சாவில் தள்ளிக் கொண்டிருப்பவனை தலைவனாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறது # இந்தியாவின் கலாச்சாரமும் பண்பாடும் மக்களுக்கு கற்றுக் கொடுத்தது இவ்வளவுதானா?



வெளிநாடுகளில் இருந்து கறுப்பு பணத்தை பறிமுதல் செய்து இந்தியாவிற்குள் கொண்டு வருவேன் என்று சொல்லி வந்த மோடி இப்ப செய்வது என்னவென்றால் இந்தியாவில் மக்கள் பேங்குகளில் சேர்த்து வைத்த நல்ல பணத்தை நீரத் மோடி போன்றவர்களுக்கு கடனாக கொடுத்து வெளிநாட்டில் பதுக்கி வைப்பதுதான்.#ஜெய்ஹிந்த்


பாலியல் செயலை அல்லது முயற்சியை ஜாதி போர்வைக்குள் கொண்டு வந்து தப்பிக்கும் முயற்சிதான் இது விழுப்புரத்தில் நடந்த கொடுர தாக்குதல்



வெளிநாட்டு நண்பர் ஒருவர் கேட்டார் இந்தியாவின் தெருக்களில் ஆடு மாடு யானைகள் பாம்புகள் போன்ற மிருங்களின் நடமாட்டம் அதிகமாக இன்னும் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன்ஆடு மாடு யானைகள் பாம்புகள் போன்றவைகள் நடமாட்டம் இல்வே இல்லை ஆனால் மிருகங்களின் நடமாட்டம் இப்போது மிக அதிகமாக இருக்கிறது என்று சொன்னேன் அவருக்கு புரியவில்லை நான் இந்தியாவில் வசிக்கும் சில மனிதர்களுக்காகவது நான் சொன்னது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்

கமல் ஸ்ரீதேவின் இறுதி நிகழ்ச்சிக்கு போகவில்லை என்றால் திரை உலகம் அவரை ஒதுக்கிவிடலாம் ஆனால் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தமிழக மக்கள் அவரை ஒதுக்கிவிடலாம்.# அட யார்ரா அங்கே கமலுக்கு அவசர அவசரமாக அமெரிக்காவிற்கு ஒரு டிக்கெட் போடப்பா


இந்திய ஜனாதிபதிக்கு என்ன வேலை என்று யோசித்து கொண்டிருந்தேன். நேற்றுதான் தெரிந்தது நடிகை இறந்ததற்கு மறைவு செய்தி போடுவதுதான் அவர் வேலை என்று

விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில், விதவைத் தாய், மற்றும் அவரது எட்டு வயது மகனையும் அடித்துக்கொன்ற காட்டுமிராண்டி கும்பல், அந்த விதவைத் தாயின் 14 வயது மகளை வல்லுறவு செய்துள்ளது, இந்த கொடூரமான வன்முறை கடுமையான கண்டனத்துக்கு உரியது. ஆனால் அதைவிட நம் தலைவர்களுக்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஸ்ரீதேவி மறைந்ததுதான்.

காவிரி விவகாரம் குறித்து டெல்லி சென்று பிரதமரை விரைவில் சந்திக்க இருப்பதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்
எருமைமாட்டை முதல்வராக்கினால் இப்படித்தான் அறிக்கைவிடும் தமிழக வந்த மோடியிடம் முக்கிய பிரச்சனையை பேசாமல் டில்லி போய்த்தான் காவிரி விசயம் பேசுவேன் என்று சொல்லுவார். இதை இளிச்சவாய் தமிழர்களும் கேட்டு கொண்டிருப்பார்கள்


விழுப்புரம் சம்பவங்களுக்கு  ஒப்பாரி வைக்காத சமுகம்தான் சீரீயா நாட்டின் படுகொலைக்கு ஒப்பாரி வைக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் வந்த என் பதிவுகள்தான் இது படிக்காதவர்கள் படிக்க


2 comments:

  1. சொன்னேன்ஆடு மாடு யானைகள் பாம்புகள் போன்றவைகள் நடமாட்டம் இல்வே இல்லை ஆனால் மிருகங்களின் நடமாட்டம் இப்போது மிக அதிகமாக இருக்கிறது என்று சொன்னேன் //

    ஒரு சில நிகழ்வுகள் இப்படித்தான் நினைக்க வைக்கிறது...குறிப்பாகப் பெண் குழந்தைகள் வன்புணர்வுக்கு உள்ளாவது...

    \\பட்டினி பசிக்காக ஒருத்தன் திருடிவிட்டான் என்று அடித்து கொன்ற சமுகம்தான் நாட்டையே சுரண்டிக் கொண்டு பலரை பட்டினி சாவில் தள்ளிக் கொண்டிருப்பவனை தலைவனாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறது
    //

    உண்மையே....

    ____இருவரின் கருத்தும்

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.