Wednesday, October 11, 2017


என்ன பெரிய அமெரிக்கா?


என் சகோதாரன் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இரண்டு வாராம் சார்ட் விசிட் செய்தார், அவர் இங்கு வந்து பல இடங்களுக்கு சென்று வந்த பின் அவரிடம் நான் கேட்டேன் நீங்கள் நினைத்து வைத்து இருந்த அமெரிக்காவிற்கும் இப்ப நேரில் பார்த்த அமெரிக்காவிற்கும் என்ன வித்தியாம் என்று கேட்டேன்




அதற்கு அவர் சொன்னார் இங்கு வரும் முன் என்னடா பெரிய அமெரிக்கா சும்மா எல்லோரும் ஆஹா ஒகோன்னு சொல்லுறாங்க என்று நினைத்து இருந்தேன். ஆனால் இங்கு வந்த பார்த்த பின் தான் ஆஹா ஒகோன்னு புகழ்வது சரிதான் என்பதை நேரில் பார்த்து அனுபவித்தேன் என்றார். அவர் பல நாடுகளுக்கு சென்று வந்தவர் வெளிநாடுகளில் வசித்தவர்..அவர் இப்படி சொல்லுவதில் எனக்கும் ஆச்சிரியம். சரி எதை வைச்சு அமெரிக்கா பெட்டர் என்று கேட்டேன்


அதற்கு அவர் இயற்கை வளங்களை எப்படி பாதுகாத்து அழிக்காமல் வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது என்றார் அதனால்தான் பெட்டர் என்று சொல்லுகிறேன் என்றார்


ஆமாம் அது உண்மைதான் அமெரிக்கர்களை நம் ஆட்கள் முட்டாள் முட்டாள் என்று சொல்லி கேலி செய்து கொண்டிருப்பார்கள் ஆனால் அந்த முட்டாள்கள் உலகின் பல நாடுகளின் இயற்கை  வளங்களை அழித்து அதன் மூலம் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் அதே சமயத்தில் தங்களது நாட்டில் உள்ள இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்து கொண்டிருக்கிறார்கள் என்பது நான் கண்டறிந்த உண்மை.


சின்ன சின்ன விஷயங்களிலும் மிகவும் கவனம் செலுத்தி எப்படி எல்லாம் தங்களது இயற்கை வளங்களை சேமிக்கிறார்கள் பாதுக்க்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்கும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை உதாரணமாக தண்ணீர் தட்டுப்பாடு இங்கு கிடையாது என்ற போதிலும் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வாஷிங்க்மிஷின் டிஸ்வாசர் டாய்லெட் போன்றவைகள் மூலம் தண்ணீர் அதிகம் செல்வாகாமல் எந்த அளவீற்கு சேமிக்கலாம் அதற்கு என்ன செய்யலாம் என்று நினைத்து திட்டங்கள் வகுத்து அதை செயல்படுத்துகிறார்கள் அது போல மழை நீர் வேஸ்ட் ஆக்காமல் அதை சேமிக்க நல்ல வழிமுறைகளை செய்து அதை பயன்புடுத்துகிறார்கள். அது போல நினைத்த இடத்தில் நினைத்த பில்டிங்க கட்ட அனுமதிக்காமல் எவ்வளவு நிலம் இருந்தால் அதில் எவ்வளவு இடத்தை உபயோகித்து பில்டிங்க கட்டலாம்  மீதி  இடத்தை எப்படி இயற்கையாக வைத்திருக்க வேண்டும் என்று ப்ளான் பண்ணீ செயல்படுகிறார்கள் பிளாஸ்டிக் பொருட்களை ரீசைக்கலிங்க் செய்கிறார்கள் பல எலக் ட்ரானிக்  குப்பைகளை ரீசைக்கிளிங்கிறாக மற்ற நாடுகளுக்கு அனுப்பி தங்கள் நிலங்களை பாதுக்காக்கிறார்கள் இப்படி பலவற்றை சொல்லிக் கொண்டே இருக்கலாம் நாள் முழுவதும். பதிவு நீண்டுவிடும்மாதலால் இங்கே உள்ள வசிப்பிட படங்களை இங்கே உங்களுக்கு காண்பித்து அதை இந்திய வசிப்பிடங்களுடன் ஒப்பிட்டு காண்பிக்கிறேன் அதன் பின் உங்களுக்கு நான் சொல்லவருவது புரியும்















இப்ப புரிகிறாதா அமெரிக்கர்கள் முட்டாள்களாக நம் கண்ணிற்கு தெரிந்தாலும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் ஆனால் நம்மை மிகவும் ஸ்மார்ட்டாக நினைத்து கொண்டு இருக்கும் நாம் எப்படி நம் வளங்களை அழித்து கொண்டிருக்கிறோம் என்று

கொசுறு :


என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ..


என் வீட்டிற்கு செல்லும் மரங்கள் சூழ்ந்த ரோடு

அன்புடன்
மதுரைத்தமிழன்

26 comments:

  1. நல்லா இருப்பியா மதுர.. தாம்பரத்து நாடு சென்டரில் ஏரி போல எதுவோ இருக்குனு அம்புட்டு பேருக்கும் படம் போட்டு காட்டிட்டியே.. அதையும் துண்டு துண்டா பிளாட் போட்டு வித்துடுவாங்க.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னது சரிதான் போல நான் இந்த பதிவை போட்டு தூங்கி எழுந்திருப்பதற்குள் அந்த ஏறியை ப்ளாட் போட்டு விற்று பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டிடாங்க... என்னா பாஸ்ட்டாக இருக்கிறார்கள்

      Delete
  2. தங்கள் நாட்டை பாதுகாத்துக்கொண்டு எலெக்ட்டானிக் குப்பைகளை வெளிநாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு அனுப்பும் அமெரிக்காவை என்ன சொல்ல! இல்லை, காசுக்காக நாட்டைக் கூறு போடும் இந்திய சுயநல வாதிகளைத்தான் என்ன சொல்ல!!! அமெரிக்காவை வல்லவன் , "நல்லவன்...எனக்கு நானே நல்லவன்"என்று பாடும் நாடு.

    ReplyDelete
    Replies
    1. நாம்சில நேரங்களில் சில விஷ்யங்களில் selfish ஆக இருப்போம் ஆனால் அமெரிக்கர்கள் எப்போது மிக மிக மிக selfish ஆகத்தான் இருக்கிறார்கள் அதுதான் உண்மை

      Delete
    2. Sriram, if someone sells something spurious, why do you buy?

      Delete
  3. உண்மைதான்... எனக்கு அந்த நியூயோர்க் சிட்டியையும் பில்டிங்கையும் மறக்க முடியாது... இலங்கையில் ஒரு அண்ணாவுக்கு இடத்தின் படங்கள் வீடியோக்கள் அனுப்பினேன்... அவர் அனைத்தையும் சிடியில் போட்டு வந்து போவோருக்கு காட்டுகிறாராம்... இத்தனைக்கும் அவரும் பல நாடுகளுக்கு சுற்றியிருக்கிறார்... அமெரிக்கா கனடா பக்கம் போனதில்லையாம்.

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க விபரம் தெரியாதவராக இருக்கிறீங்க நீங்க நீயூயார்க் சீட்டியையும் அதன் பில்டிங்கையும் எடுத்து அனுப்பியதை அந்த அண்ணா சிடியில் எல்லோருக்கும் காண்பிப்பதாக நினைத்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால் அந்த அண்ணாவும் சீடியை பார்ப்பவர் அந்த உயர்ந்த பிலிடிங்கை ஒன்றும் பார்க்கவில்லையாக்கும் அந்த பிலிடிங்க் அருகில் நின்று கொண்டிருக்கும் அழகிய நங்கைகளை பார்த்து ரசித்து கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வந்து இருக்கு...

      நீங்கள் பெயருக்கு ஏற்றவாறு அப்பாவியாகவே இருக்கிறீங்க அதிரா அடுத்த தடவை போட்டோ எடுக்கும் போது பில்டிங்கை மட்டும் போட்டோ எடுங்க அழகிய நங்கைகளையும் சேர்த்து எடுக்காதீங்க

      Delete
  4. ஹ்ம்ம் இன்னும் நிலைமை மோசமாகிட்டே போகுது ..மாதவரம் ஏரியாலாம் ஒரு வீட்டுக்கும் இன்னோர் வீட்டுக்கும் பெரிய இடைவெளியோட இருந்தது அப்படிதான் தாம்பரமும் இருந்தது ஒருகாலத்தில் ..இப்போ நினைச்சும் பார்க்க முடியாது மரங்கள் பச்சை பசுமைலாம் .இவ்ளோ சொல்றோமே அண்ணாநகர் எப்படி இருந்தது ?இப்போ வெறும் பெட்டி பெட்டியா மாடி வீடுங்க ..

    இங்கே இங்கிலாந்தும் தாம்பரமாகும் காலம் தூரத்திலில்லை :( க்ரீன் பெல்ட் பாலிசிலாம் கொண்டாந்தாலும் மக்கள்தொகை அதிகம் ..இருக்க வீடு வேணும்னு எல்லா இடத்திலும் வீடா கட்டி போடறாங்க .
    ரெண்டு வாரமுந்தி லண்டன் போனோம் ..வாழ்க்கை வெறுத்துச்சி அவ்ளோ ஜன நெரிசல் உயரமான கட்டிடங்கள் .இதெல்லாம் பார்க்க மனசுக்கு ஒரு வெறுமைதான் வருது ..
    ஆமா இப்போ மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் எப்படி இருக்கு ?அதுக்குள்ளே மரங்கள் இருக்குமே சாமீ யார் கண்ணிலும் அதெல்லாம் படக்கூடாது ..

    அப்புரம் எல்லிஸ் நகரில் அத்தை வீட்ல விளையாடிட்டிருந்தப்போ ஒரு பையன் என் பொம்மையை பிடுங்கிட்டு அழ வச்சான் ..எனக்கென்னமோ நீங்களா இருக்குமோன்னு ஒரு டவுட்டு :)

    ReplyDelete
    Replies
    1. இப்போது நான் குழந்தைக்காக தற்காலிகமாக குடியிருக்கும் பகுதி உண்மையிலே எனக்கு சொர்க்கமாகத்தான் இருக்கிறது இந்த குடியிருப்பை சுற்றிய பகுதிகள் அனைத்து மிக மிக பசுமையாக இருக்கிறது வீட்டை சுற்றி உள்ள மரங்கள் மிகவும் பழமையான மரங்கள் வீட்டை கட்டும் போது வீட்டிற்கான கட்டிட பகுதியை தவிர்த்து மீதியுள்ள இடங்களிள் உள்ள் மரங்களை ஒன்று கூட வெட்டாமல் அப்படியே பாதுகாத்து இருக்கிறார்கள் மரங்கள் மட்டுமல்ல வீடுகட்டும் பொது வெட்டி எடுக்கப்பட்ட பாறைகளையும் அப்படி ஆங்காங்கஏ வைத்து அழகுபடுத்தி இருக்கிறார்கள் பாறைகள்தானே என்று தூக்கி ஏறியவில்லை நிச்சய்ம் அடித்து சொல்லுகிறேன் இந்த இடம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த பகுதியில் எனக்கு வருத்ததை தரும் ஒன்று உண்டு அதுதான் அடிக்கடி காரில் வந்து அடிபட்டு இறந்து கிடக்கும் மான்கள்தான்


      ஆஹா எனக்கு ஞாபகம் வந்துடுச்சு ...ஓ அந்த பொம்மையை வைச்சு விளையாடிகிட்டு இருந்த குண்டு பொண்ணு நீங்கதானா?

      மெட் ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பக்கம் இன்னும் மரங்கள் இருப்பதாக கூகுல் காட்டுது இனிமே அங்கே மரங்கள் எல்லாம் இருக்காது காரணம் அங்கு மரங்கள் இருக்கிரது என்று நான் பதிவு போட்டுட்டேன் அல்ல அதனால அதை படிச்சவங்க ஒன்று இரவோடு இரவா அதை வெட்டிடுவாங்க

      Delete

    2. என் வீட்டிற்கு செல்லும் பாதையை பதிவில் ஒரு சிறு வீடியோவாக இணைத்துள்ளேன் முடிந்தால் பார்க்கவும்

      Delete
    3. காணொளி பார்த்தேன் ..மரங்கள் சூழ அழகா இருக்கு எங்க வீட்டில் இருந்து நான் canal வழி நடக்கும் பக்கம் இப்படித்தான் ரோட் போகும் ..
      சின்ன ஜீவன்களுக்கு ரோட் க்ராஸ் பண்ணத்தான் தெரியுமா இல்லை சாலை விதிமுறைகள்தான் அறியுமா :(

      என்ன ப்ராப்லம்ன்னா கார் ஓட்டும்போது சடார்னு நிறுத்தவும் முடியாது ..என் கணவர் தினமும் நரி களையும் மான்களையும் பார்ப்பாராம் சில அப்படியே ஹெட்லைட் வெளிச்சத்துக்கு அசையாம நிக்குங்களாம் .நாங்க லண்டனில் இருந்து ரொம்ப தொலைதூரம் அதனால் எப்பவாவது முக்கியமான விஷயம்னா மட்டும் லண்டன் செல்வோம் ..அங்கே மரமேயில்லாம பல இடங்களில் கண்ட காட்சி கண்ணீர் வரவைத்து

      மரங்கள் பாறைகளுடன் உங்க ஏரியா வீடுகள் இருப்பது மனதுக்கு சந்தோஷத்தை தருது ..எங்க பகுதியில் நடக்கும் பொது பார்த்தது ஓபன் லேண்ட் ஒன்றில் இருந்த 8 மரங்களை வெட்டி போட்டிருக்காங்க அறிவுகெட்ட ஜென்மங்க :(

      Delete
    4. லயோலாவும் mcc யும் autonomous ஆக இருக்கும் வரைக்கும் பிரச்சினை இல்லை .இருக்கட்டும் கொஞ்சம் பசுமை நல்லதுதான் .


      // அந்த குண்டு பொண்ணு // கர்ர்ர்ர்ர் :) இல்லையில்லை நீங்க மிஸ்டேக்கிட்டீங்க அது அதிரா பிங்க் பொம்மை வச்சிருந்தது அதிரா குண்டு பொண்ணு.. ஒல்லியா யெல்லோ சட்டை போட்டிருந்தது நான் :)

      Delete
    5. அய்யய்யோ ட்றுத் அமெரிக்காவில எல்லோ இருக்கிறார் எனத் தப்பா நினைச்சுக்கொண்டிருந்தேன்ன்... இது ஏதோ அவ்றிக்கன் காட்டுக்குள் இருப்பதுபோல இருக்கே வீடியோ:).. சரி சரி எனக்கெதுக்கூஉர் வம்ஸ் ... மீ ஒரு அப்பாவீஈஈஈஈ:).

      Delete
    6. குழந்தையில் குண்டா இருப்பதுதான் அயகூ:) மீ குழந்தையில் குண்டு பட் இப்போ:) ஊதினால் விழுந்திடுவேன்:)... ஆனா அஞ்சு பேபில ஒல்லி:)... இப்போ கேய்க்காதீங்க என்னிடம் பிக்கோஸ் மீ ஒரு அப்பாவீஈஈஈஈ:).

      Delete
    7. மதுரை சகோ...இன்னொன்னு பார்க்கணும் இங்க...அமெரிக்கா ரொம்பப் பெரிய நாடு...ஆனா மக்கள் தொகை ரொம்பக் கம்மி...இந்தியா அமெரிக்காவை விடச் சின்னது சைஸ்ல மக்கள் தொகை அதன் பரப்பளவுக்கும் மிஞ்சும் லெவெல்..ஒருவேளை அதான் இந்தியவிலிருந்து அடுத்த தலைமுறையில பலர் அமெரிக்கா கனடா, ஐரோப்பா நு வெளிநாட்டுக்குப் போயிடறாங்களோ....அமெரிக்காவுல பாழாப்போன மருந்துக்குக் குப்பைக் கிடங்கு இந்தியா....இந்தியாவுல ஒரு சில பண முதலைங்க மக்களுடைய பாதுகாப்பு பத்தி சிந்திக்காம பணத்தாசைல வாய் பொளந்து அந்தக் குப்பையை வாங்கிக்குது...அவன் ஏமாத்தறான்...இவன் ஏமாறுகிறான்னு சொல்ல மாட்டேன் கொழுப்பெடுத்து தெரிஞ்சு செய்யும் தவறு...

      கீதா

      Delete
    8. சில பணமுதலைகள் சரி....ஆனால் அவர்களுக்கு அரசு துணை போவதுதான் பிரச்சினை.

      அமெரிக்க சிறுசு; இந்தியா பெருசு என்று சொல்லிக்கொண்டேயிருந்தால் பூனைக்கு மணி கட்டுவது யார்?

      Delete
  5. என்ன முட்டாள்களா அவர்கள் ஏன் முட்டாள்கள் அவர்கள் தான் மற்றவர்களை முட்டாள் ஆக்குகிறர்கள் என்று சொல்லிட்டீங்களே பார்த்து அழுகாச்சியா வருது பொறாமையா இருக்கு :'-( :'-(

    ReplyDelete
    Replies
    1. ஹலோ இப்படி எல்லாம் பொறாமை படக்கூடாது நீங்கள் எல்லாம் ஏரிக்குள்ள வீட்டை கட்டி(போட் ஹவுஸ்) வசிக்கிறீங்களே அதையெல்லாம் நாங்க பார்த்து பொறாமையா படுகிறோம்

      Delete
  6. அமெரிக்கா அத்தனை உசத்தியா?! உங்க பேச்சில் எனக்கு உடன்பாடில்லை. வேணும்ன்னா டிக்கெட், விசா எடுத்து கொடுத்து அனுப்புங்க வந்து பார்த்து சொல்றேண்

    ReplyDelete
  7. அமெரிக்கா ஒரு வேடிக்கையான நாடுதான். அமெரிக்கர்களை குறை சொல்ல, சமீபத்தில் அமெரிக்கர்களான நமக்கு எந்தத் தகுதியும் இல்லை. நம்ம ஊரில் ஆயிரம் பிரச்சினையிருக்கும்போது, நம் வசதிக்கு இங்கே வந்து இந்த "பாவ பூமியில்" வெட்கமே இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அமெரிக்கா, அமெரிக்கர்கள் என்று பேசும்போது அதில் முதல் குற்றவாளி நீங்களும் நானும்தான்.

    உணர்வுப்பூர்வமாக, மனிதனாக, மனிதாபிமானத்துடனும், வாழ்க்கைத் தத்துவம் அறிந்து வாழ்ப்வர்கள் வாழ்வில் "வெற்றியடைவதில்லை". எந்திரம்போல் சிந்தனை பெற்ற மனிதனே வெற்றியடைகிறான்.

    அமெரிக்கா வழி வெற்றியை நோக்கிச் சொல்லும் வழி. வெற்றிக்கு குறுக்கே யார் வந்தாலும் "இந்த எந்திரம்" அதற்கு செய்ய வேண்டியதை செய்யும். நீங்க ஏற்றுக்கொண்டாலும் இல்லைனாலும் நீங்களும் இதில் ஒரு பழுதான எந்திரம்தான். எந்திரமாகவே இருங்கள். ரொம்ப சிந்திக்காதீங்க! எந்திரம் சிந்திக்கக் கூடாது!

    ReplyDelete
    Replies
    1. இயற்கை வளங்களை அழிக்காமல் குடிநீரை வீணாக்காமல் பாதுகாப்பது மனிதாபிமானம், உணர்வுப்பூர்வமானது, மனிதர்களாக வாழ்வதுதான். வெறும் எந்திரமாகச் செயல்பட்டால் இஃதெல்லாம் நடக்கா.

      Delete
  8. இயற்கை வளங்களை அழித்துக் காசு பார்ப்பதில் நமக்கு நிகர் நாம் மட்டும்தான்

    ReplyDelete
  9. நம் வளங்களை நாமே அழித்துக்கொள்கிறோம், பிறர் மூலமாகவும் அழிக்கவிடுகிறோம். வேதனையே.

    ReplyDelete
  10. நீங்கள் நல்லவர் போல அதனால் தானோ உங்கள் வீட்டுக்குப் போகும் வழியில் மழை

    ReplyDelete
  11. தெரியாம என் கமென்ட் அங்கு போயிருச்சு பரவால்ல...

    நம்ம மக்கள் முதல்ல திருந்தணும்...ஊழல் இருக்கும் வரை திருந்துவது ரொம்பக் கஷ்டம்..

    உங்க வீட்டுக்குப் போற வழி சூப்பர்...ரொம்ப அழகா இருக்கு.....அது சரி சகோ உங்க முன்னாடியும் எந்தக் காரும் இல்லை பின்னாடியும் எந்தக் காரும் இல்லை ஆனா இங்க இதை விடச் சின்ன ரோடு எங்க ரோடு...அதுல பின்னாடி ஒரு தொடர்...முன்னாடி ஒரு தொடர்...நடுல சைக்கிள், ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், லாரி, கார்கள்னு இருக்கும்...அப்புறம் எப்படி அமெரிக்காவையும், இந்தியாவையும் கம்பேர் பண்ண முடியும் சொல்லுங்க...ஒன்னு சொன்னீங்க பாருங்க அதை முழுவதும் ஏற்கிறேன்...ஒரு பில்டிங்க் கட்டணும்னா அங்க்ரூல்ஸ்....அது இங்க பில்டின்க் கட்ட எந்த ரூல்ஸும் சிடையாது..பொறம்போக்குல நீங்க கூட வந்து கட்டிட்டு சொந்தம் கொண்டாடலாம்...இவ்வளவு நான் சொன்னாலும், அந்த ஊரில் நான் இருந்தது 9 மாதங்கள் என்றாலும் மிக மிக ரசித்தேன் என்பது உண்மை...

    கீதா

    ReplyDelete
  12. நாங்களும் மரங்கள் வளர்க்கிறோம் - வீட்டுக் குரோட்டன்சுகளில்!
    சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க மதுரைக்காரரே!
    நாங்க அங்க வந்து பாத்தாத்தான் நம்புவோம்!
    அது எங்க இந்த ஜெம்மத்துல நடக்கப் போவுது? பார்ப்போம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.