Sunday, May 21, 2017

#Rajinikanth #Tamilnadu #Politics #Satire #avargal_unmaigai
Rajinikanth Tamilnadu Politics Satire
நாட்டு நடப்பும் மரண கலாய்ப்பும்

வயசான காலத்துல தமிழக அரசியலில் குதித்து தமிழக அரசியலை சீர் செய்வேன் என்பதும் 66 வயசுல கல்யாணம் பண்னி மனைவியை மிகவும் சந்தோஷமாக வைத்து கொள்வேன் என்று சொல்வதும் ஒன்றுதான்.புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி


பேசாமல் எடப்பாடியும் பன்னீர் செல்வமும் மோடியை அதிமுகவின் நிரந்தர  பொது செயலாளராக  தேர்ந்தெடுத்துவிட்டால் பிரச்சனை ஏதும் இருக்காதே




#modi #avargal_unmaigal
Modi meet
ரஜினி தமிழக அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாராம்  வரட்டுமே ஆசைபடட்டுமே ஆனால் அவர் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பதை பொதுமக்கள்தானே முடிவு செய்ய முடியும்


தமிழனை தமிழன்தான் ஆளணும் என்று முட்டாள்தனமாக பேசாமல் தமிழர்களை ஒரு நல்லவன் ஆளணும் என்று குரல் கொடுங்கடா புண்ணாக்குகளா


ஆவியைக் கண்டு பயப்படுவது போல், தமிழகத்தில் காவியைக் கண்டு பயப்படுகின்றனர்- தமிழிசை #

ஆவியை விட காவி ரொம்ப டேஞ்சருண்ணு அவங்களூக்கு தெரிஞ்சிருக்கும் போல அதனால்தான் இந்த அளவு பயம் போல

தமிழக பிரச்சனைகளை பற்றி பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். -பன்னீர் செல்வம்

அடப்பாவமே பன்னீர் செல்வம் தமிழக முதல்வர் இல்லை என்பது மோடிக்கு தெரியவில்லையா அல்லது பன்னீர் செல்வம் இன்னும் தன்னை தமிழக முதல்வராக நினைத்து வலம் வருகிறாரா?


ரஜினியின் அரசியல் வருகை இப்படித்தான் இருக்கிறதோ?


நூறு ரூபாய்  டிக்கெட்டை  தன்னோட படத்துக்காக ரெண்டாயிரம் மூவாயிரம்னு விற்பனை செய்த யோக்கியன் சொல்லுறார் இங்க சமூகத்துல சிஸ்டம் சரியில்லன்னு சொல்ற அந்த நல்ல மனசு யாருக்கு வரும்

நீதிபதி கர்ணன் மறைவு இருப்பிடம் தெரியாமல் போலீஸ் திணறல் - செய்தி

கண்ணாமுச்சி ஏனடா கர்ணா



அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. 85 வயதுக்கு மேல் காங்கிரசை விட்டுப் பிரிந்து பாஜகவில் இணைந்த எஸ் எம் கிருஷ்ணா நினைவுக்கு வருகிறார்.

    ReplyDelete
    Replies
    1. அத்வானியே காணமல் போய்விட்ட பிறகு கிருஷ்ணா எல்லாம் எந்த மூலைக்கு...

      Delete
  2. காணொளி....ஹஹஹஹஹ்ஹஹ்ஹஹ்ஹ் ஐயோ முடிலைப்பா...உங்க நக்கல் உட்பட...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா அதிகம் சிரிக்காதீங்க் அப்புறம் வயிறு சுளுக்கிட போது.....அதன் பின் என்மேல கேஸ் ஏதும் போட்டுவிடப் போறீங்க

      Delete
  3. காணொளி சூப்பர்.எங்கிருந்துதான் புடிச்சீங்களோ. ரஜினி பாத்தா நொந்து போய்டுவார்

    ReplyDelete
    Replies
    1. முரளி முன்பு நெட்டில் பார்த்து என் கணணியில் சேமித்து வைத்திருந்தேன் சடனாக ஞாபகம் வந்தது இந்த பதிவு எழுதும் போது அதனால் அதை இங்கே பதிவிட்டு இருக்கிறேன். இப்போது பார்த்தால் அதை பார்த்த வேறு யாரோ ஒருவர் அந்த ஆளின் உருவத்தின் மீது ரஜினி என்று பெயர் பொட்டு சிறிய அள்வில் வைரலாகி என்னிடமே மீண்டும் வந்து இருக்கிறது இப்போது.....பார்க்க வேண்டியவர்கள் நிச்சயம் பார்த்து இருப்பார்கள் ஹீஹீ

      Delete
  4. சரியா சொன்னீங்க ..பச்சை மஞ்சள் கருப்பு தமிழன்னு புலம்பாம ஒரு நேர்மையான நல்லவர் நொடிக்கு நொடி மாற்றி பேசும் குணமற்ற ஒருவர் நாட்டை ஆளட்டும்

    றோஸ் வாட்டர் :) மே பி செலக்டிவ் அம்னீஷியா

    ReplyDelete
    Replies
    1. நல்லவர் ஒருவர் வருவார் ஆனால் அதற்கு முன் நாம் மிக அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும்

      Delete
  5. நமக்கு தெரிஞ்ச அளவுக்கு புண்ணாக்குகளுக்கு தெரியலையே தலைவா...

    ReplyDelete
    Replies
    1. அதனாலதான் அவர்களை புண்ணாக்கு என்று சொல்லுகிறோம்

      Delete
  6. ஹஹஹஹ் செம நையாண்டி மதுரைத் தமிழன். அதுவும் விடீயோ, பனீர், நீதிபதி கர்ணன் கமென்ட்ஸ் சூப்பர்

    கீதா: கண்ணாமூச்சி ஏனடா கர்ணா//ஹஹஹஹ்ஹ் ஐயோ இதையும் படிச்சுட்டு செமையா சிரிச்சிட்டேன்...அன்னிகு இந்தக் கமென்டைப் போட விட்டுப் போச்சு...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.