Friday, May 26, 2017

பன்னீர் செல்வத்தை சந்திக்கும் மோடி எதிர்கட்சி தலைவரான என்னை சந்திக்க மறுப்பது ஏன்?- ஸ்டாலின்

மதுரைத்தமிழன் : தன் கட்சியாளரான பன்னீரை மோடி கட்சியின் வளர்ச்சி குறித்து பேச சந்திக்கிறார் அதுதப்பா தளபதியாளரே

அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன்'-ரஜினி


மதுரைத்தமிழன் : எல்லாப் பணமும் எனக்கே வேண்டுமென்ற சுயநலம்தானோ ரஜினியை இப்ப பேச வைக்கிறதோ

பாஜ கொள்கையோடு ரஜினி ஒத்துப் போகிறார். அவர் பாஜவுடன் இணைந்து செயலாற்றுவது நல்லது - தமிழிசை
மதுரைத்தமிழன் : சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று என்பதுதான் பாஜக கொள்கை அதோடு ஒத்து போகிறாரா ரஜினி

தேசிய கட்சியில் ரஜினி இணையமாட்டார். தனிக்கட்சி தொடங்குவதே நல்லது. - காங்கிரஸ் திருநாவுக்கரசர்.
மதுரைத்தமிழன் : ரஜினி தேசிய கட்சியில் இணையமாட்டார் ஆனால் தேசிய கட்சியான காங்கிரஸ் லோக்கல் கட்சியுடன் மான ரோஷம் இல்லாமல் இணைந்து கொள்ளும்தானே..அதனால்தான் இப்படி ஒரு அட்வைஸா

தாங்கள் செய்ய பாவத்திற்காக பிராயசித்தமாக திமுகவினரை வைத்தே கோயில் குளங்களை தூர்வாற வைத்து விட்டான் இறைவன் - தமிழிசை

ஆனால் மோடி அரசு செய்யும் பாவத்திற்கு பிராயசித்தமே இல்லை என்பதை தமிழிசை சொல்லமல் விட்டது ஏன் ? அதுமட்டுமல்லாமல்
உங்களை போல உள்ளவர்களை பெற்று விட்டதற்காக உங்கள் பெற்றோர்கள் பிராயசித்தம் செய்யாமல் போய்விட்டார்களே

தமிழ்நாட்டில் "சிஸ்டம் கெட்டுப் போயிருக்கு - ரஜினி
மதுரைத்தமிழன் : அவர் சொல்லும் சிஸ்டம் 50 வருட திராவிட ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதைத்தான். அதை தைரியாக நேரடியாக சொல்ல தைரியம் இல்லாமல் இருக்கீங்கே கபாலி .ரஜினியின் கொண்டை வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது


பரிகாரம் செய்யவே ஸ்டாலின் குளங்களை தூர் வாருகிறார் - பொன் ராதாகிருஷ்ணன்#

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: இங்கே வாழ்க்கை சற்று பிஸியாக இருப்பதால் முன்பு போல உடனடியாக பதிவு போட முடிவதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் போடுகிறேன் உங்கள் வருகைகைக்கும் ஆதாரவைற்கும் நன்றி

22 comments:

  1. ஸ்டாலின் சிறந்த நிர்வாகியாமே..

    ReplyDelete
    Replies
    1. ஏதோ ஜோக்க் அடித்திருக்கிறார் ஹீஹீ

      Delete
  2. ரஜினிக்கு சரியான சாட்டை அடி !
    சம்பாதிக்க நினைப்பவரை கட்சியில் சேர்த்துக்க மாட்டாராம் ,இதை எப்படி கண்டுபிடிப்பாராம் :)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ பகவான் ஜி என் குடுமப்தினர் மட்டும்தான் தவறாக சம்பாதிக்க மாட்டார்கள் என்று ரஜினி சொல்லி குடும்பத்தினர் அனைவருக்கும் கட்சியில் நல்ல போஸ்டிங்க் கொடுத்துவிடுவார் அதற்குதான் இப்படி ஒரு அறிக்கை

      Delete
  3. கேள்விக்கான தங்கள் பதில்கள்
    அனைத்தும் அருமையோ அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  4. அனைத்தும் செம பன்ச் பதில்கள்

    ReplyDelete
  5. இப்போதெல்லாம் எங்களுக்கு ஏற்றதுபோல் பதிவே போடமாட்டேன் என அடம் புய்க்கிறீங்களே ஏன்ன்?:)

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஆதிரா. இப்பலாம் அண்ணி பூரிக்கட்ட எடுக்குறதில்லை போல

      Delete
    2. ரஜினி ஃபார்முலாலாம் எக்ஸ்பயரி ஆகி ரொம்ப நாளாச்சு

      Delete
    3. அதிரா நீங்க தேம்ஸ் கரைல இருந்து பாடுங்கோ!!! அப்போ மதுரை கண்டிப்பா தூக்கத்துல எழுந்து ஓடுவார்!!! மாமி பூரிக்கட்டையை தூக்குவாங்க....பதிவு வெளியாகும்!!..

      கீதா

      Delete
    4. அதிரா தேம்ஸ் நதிக்கரைல ரீ, சமோசாவோட உண்ணாவிரதம் இருக்கீங்கதானே!!?? மதுரை அரசியல் பதிவா போடுறாரு வேற பதிவு போடணும்னு....ஏஞ்சல், ஸ்ரீராம், ராஜி, கீதா எல்லாரும் உங்க கட்சில சேர்ந்தாச்சு!!!

      கீதா

      Delete
    5. @அதிரா உங்களுக்கு ஏற்றாற் போல என்றால் கொஞ்சம் வெயிட்டான பதிவுகளாகத்தான் போட வேண்டும் அப்படி போட்டால் என் தளம் அந்த வெயிட்டை தாங்குமா என்ரு சந்தேகமாக இருக்கிறது

      Delete

    6. @ராஜி அண்ணி பூரிக்கட்டையை எடுக்கவில்லை என்பதில் உங்களுக்கு இவ்வளவு வருத்தமா?

      Delete
    7. @கீதா என்ன நீங்க இவ்வளவு மோசமான கொடுமைக்காரியாக இருக்கீங்க.... அதிரா பாடினால் தேம்ஸ் நதிக்கரையோரம் வசிப்பவர்கள் நதியில் விழுந்து தற்கொலை பண்ணிக் கொள்வார்கள் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா?

      Delete
  6. ஒரேயடியாக அரசியல் பதிவுகள் போர் அடிக்கின்றன மதுரை... பதில்களை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க,,,,அரசியல் பதிவுகள் இல்லாமல் வேறு சில நல்ல பதிவுகள் இட முயற்சிக்கிறேன்... நேரம் செலவ்ழித்து நல்ல பதிவுகள் போட்டால் அதற்கு ஏற்ப வரவேற்பு கிடைப்பதில்லை அதனால் சில சமயங்களில் "மனம் சோர்ந்துவிடுகிறது" ஆனால் அரசியல் பதிவுகள் இட்டால் அதற்கு மிக அமோக வரவேற்பு இருக்கிறது

      இருந்தாலும் உங்களின் வேண்டுகோளுக்கினங்க அரசியல் தவிர்த்த பதிவுகள் கண்டிப்பாக இடுகிறேன்

      Delete
  7. மதுரை! உங்க பதில் பத்தி எல்லாம் கேட்கணுமா என்ன?!!! எல்லாமே நல்லாத்தான் இருக்கு...ஆனாலும்...ஆனாலும்....வேற பதிவுகள் போடுங்க மதுரை...

    கீதா

    ReplyDelete
    Replies

    1. உங்களுக்கு நான் மனைவியிடம் பூரிக்கட்டையால் அடிவாங்கியது பற்றி பதிவுகள் இட்டால் ரொம்ப் சந்தோஷம் போலிருக்கிறது ஹும்ம்ம்ம்ம்ம்

      Delete
  8. அதிரா, ஏஞ்சல், ராஜி எல்லாரும் கேட்டுக்கன ஒரு ரகசியம் சொல்லுறேன்...மதுரை சகோ ஒரு வேளை பூரிக்கட்டை அடி வாங்கிருப்பாரோ??!!!அதான் அதை மறைக்க பிஸினு கொஞ்ச நாள் முனாடி சொல்லிட்டுப் போனாரு... பாருங்க தடால்னு என்ன குறும்பு செஞ்சு பூரிக்கட்டை பறந்திச்சுனு பதிவு வரும் பாருங்க...நான் சொல்லறது சரிதானே? என்ன சொல்றீங்க மதுரை சகோ??!!!ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. செப்டம்பர் வரை கொஞ்சம் பிஸியாக இருக்கும் இருந்தாலும் என்னால் முடிந்த வரை பதிவுகள் இடுகிறேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.