Saturday, May 13, 2017

#modi @avargal_unmaiga;
மோடியின் கையில் சிக்கி தவிக்கும் ஜனநாயகம்

சமுக ஆர்வலர் இளங்கோ கல்லணை தன் பேஸ்புக்தளத்தில் எழுதி வெளியிட்ட பதிவு ( Elango Kallanai ) பலருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு  ஷேர் செய்யப்படுகிரது

நன்றி இளங்கோ கல்லணை

அரவிந்த் கேஜரிவேல் மேல் திருட்டுப் பட்டம் சுமத்தி உள்ளே தள்ள முயல்வார்கள் என்பது நான் முன்பே கணித்தேன். இந்திய தேர்தல் கமிசன் முன்னரே இது போல வாக்கு எந்திரங்களை மோசடி செய்ய முடியாது என்று சவால் விட்டது. அப்போது ஆந்திராவைச் சேர்ந்த ஹரிபிரசாத் வெமுறு மற்றும் வி வி ராவ் அடங்கிய ஒரு குழு மகாராஸ்ட்டிர மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களைக் கொண்டு ரிமோட் மூலமே மோசடி செய்ய முடியும் என்று நிரூபித்தது.

டெக்னிக்கல் துறையைச் சேர்ந்த ஹரிபிரசாத் பல முறை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். மென்பொருள் பொறியாளரான நண்பர் ஹரி அப்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவருடைய பாஸ்போட் முடக்கப்பட்டிருந்தது. அவர் அவ்வப்போது அமெரிக்க சென்று தன்னுடைய நிறுவனப் பணிகளில் ஈடுப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் பயங்கரவாதத் தொடர்புகள் என்று அரசு மிரட்டியது. தேர்தல்கள் ஒழுங்காக நடக்கவில்லை என்பதை அந்தக் குழுவுடன் பணிபுரிந்த போதே நான் உணர்ந்தேன். தேர்தல் ஆணையாளர்கள் பலரும் மழுப்பலாகச் சொன்னார்கள். முதலில் அந்த எந்திரம் அரசு பயன்படுத்தும் எந்திரமே இல்லை என்று சாதித்தார்கள். பின்னர் மகாராஷ்டிர போலீசை வைத்து வழக்குப் பதிவு செய்தார்கள். அந்த வழக்கில் இவர் மேல் திருட்டு குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் ஒரு உயரதிகாரியின் துணையோடு தான் நண்பர் தன்னுடைய திறனை காண்பிக்க முன்வந்தார்.

பலமுறை தேர்தல் கமிசனர் முன்னர் நிரூபிக்கத் தயாராக இருந்த போது அவர்கள் அதற்கு சமாளிக்கும் விதத்தில் பதில் சொன்னார்கள். ஆனால் வி வி ராவ் விடாமல் கடிதங்கள் எழுதிய பின்னர் ஒப்புக் கொண்டார்கள், அதுவும் எப்படி வாக்கு எந்திரங்களை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்யக் கூடாது என்கிற கட்டுப்பாடுகளுடன். அதற்கும் ஒப்புக் கொண்டு செய்து காட்டினார். பின்னர் வழக்கு வேண்டாம் சமாதானமாகப் போகலாம், வாக்கு எந்திரங்களின் தரத்தை உயர்த்த உங்களைப் போன்ற ஆட்களை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று குரேசி வாக்களித்தார். இந்த சம்பவங்களை மட்டுமல்ல, சுஜாதா போன்ற அபத்தமான ஆட்களின் வாக்கு எந்திரம் பற்றிய வாக்குறுதிகளும் பொய்யென நிறுவியது அந்தக் குழு.

நான் அந்தக் குழுவின் ஆய்வு முடிவுகளை பின்தொடர்ந்தபடி இருந்தேன். அதை முன்வைத்து தமிழினியில் மிகப்பெரிய கட்டுரை ஒன்றையும் எழுதி வெளியிட்டேன்.

2009 தேர்தலில் காணாமல் போன வாக்கு எந்திரங்கள் எத்தனை தெரியுமா? 76. சேதாரப்படுத்தப்பட்ட எந்திரங்கள் மட்டும் இருநூறுக்கு மேல். முதலில் வாக்கு எந்திரங்கள் பாதுக்காப்பான இடங்களில் இல்லை. உள்ளேயும் அவை பாதுகாப்பானவை அல்ல. அதை நிரூபிக்க முயன்றால் உங்கள் மீது திருட்டு வழக்குப் பாயும். அரவிந்த் கேஜ்ரிவால் மேல் பாய்ந்தது அத்தகைய வழக்குத் தான்.
இன்றும் சொல்கிறேன் மக்களாட்சி என்கிற பெயரில் தேர்தலே நடக்காத ஒரு சூழலில் தான் நாம் இருக்கிறோம். இதில் வெற்றி தோல்வி என்பது முன்னரே முடிவு செய்யப்படுகிறது என்பதை நினைக்கையில் அச்சமாக இருக்கிறது.

நாட்டில் உள்ள ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் இதை பொது விவாதமாக ஆக்க வேண்டும்.

அந்தக் கட்டுரை இணையத்தில் இல்லை. வேண்டுவோர் வாங்கிக் கொள்ளலாம். நம் நாட்டில் தேர்தல் ஒரு கூத்து . அதை நெறிப்படுத்த குரல்கள் பலமாக ஒலிக்க வேண்டும் 49O விற்கு வாக்களிக்கிறேன் என்று ஜனநாயகத்தின் அடிப்படைத் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறோம். பலநாடுகளில் தடை செய்யப்பட வாக்கு எந்திரத்தை நாம் கட்டிக் கொண்டு அழுகிறோம் ஏனென்றால் ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. தேர்தலே நடக்காத தேசத்தில் நீதி அல்லது ஊடக தர்மம் மட்டும் நிலைக்குமா என்ன? கேஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதுவே கூட இந்தியாவில் அரசியல்த் திருப்பமாக இருக்கக் கூடும்.

மோதி போன்ற ஒரு முரட்டு மூடனின் கைகளில் சிக்கியுள்ள அரசின் நிறுவனங்கள் சிதறி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்களுடைய ஆட்சியை அதிகாரத்தை நோக்கிய முதலடியே, தேர்தலை சீர்செய்வது தான்.


படைப்பு : இளங்கோ கல்லணை


டிஸ்கி : நண்பர்களே  த்ற்போது எனக்கு நேரம் அதிகம் கிடைக்கவில்லை என்பதால்  என்னால் முன்னால் போல பதிவுகள் இடமுடியவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போது நான் எழுதுகிறேன் அதுவரை நான் படித்த செய்திகளில் எனது தளத்திற்கு ஏற்ற செய்திகளை இங்கு வெளியிடுகிறேன். தங்களது தொடர் ஆதரவிற்கு நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. திருட்டுத்தனங்கள் எப்படி எல்லாம் நடக்கின்றன....நம் நாட்டை நிலையை நினைத்தால்....அச்சமாகவும்...பரிதாபமாகவும்.....இருக்கிறது....

    ReplyDelete
  2. அனைவரும் அறியும்படியாக
    அவசியமான பதிவினை
    தங்கள் தளத்தில் வெளியிட்டது
    மனம் கவர்ந்தது

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. எப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் மோடி வந்தாரோ அப்போதே அவர் ஒரு சாராரின் எண்ணங்களுக்குத் துணை போகிறார் என்பது தெரிகிறது இந்த நாட்டை இருப்பதாகச் சொல்லும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனது மின்னூல்கள் கிடைத்ததா

    ReplyDelete
  4. இளங்கோ கல்லானை அவர்களை நீயா நானா விவாதங்களில் பார்த்திருக்கிறேன். தான் ஒரு சகல கலாவல்லவர் என்று நிருபிக்க முயற்சித்துக் கொண்டிருப்பார்.பல சமயங்களில் அவரது விவாதம் உளறல்களாகத் தான் இருக்கும். மோடியின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை பெரும்பாலோரின் கருத்துதான் எனது கருத்தும்.
    நான் இந்த பின்னூட்டத்தில் கூற விரும்புவது வாக்கு பதிவு இயந்திரத்தைப் பற்றி மட்டுமே. கரணம் அதைக் கையாண்ட அனுபவம் உண்டு என்பதால். 2009 மற்றும் அதற்கு முந்தைய தேர்தல்களில் வாக்கு சாவடிகளில் Presiding Officer ஆக பணியாற்றி இருக்கிறேன். எனக்குத் தெரிந்து EVM tampering செய்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.தொடக்க நிலையில் இருந்து வாக்கு எண்ணப்படும் வரை பல்வேறு நடைமுறைகள் அனைத்து கட்சி ஏஜெண்டுகளின் முன்பாகத் தான் நடைபெறும். வாக்குப் பதிவுக்கு முன்பாக மாதிரி வாக்குப் பதிவு நடத்திவோட்டுகளையும் எண்ணிக் காண்பிப்போம். ஐயம் இருப்பின் இரண்டு மூன்று முறைகூட mock poll நடத்தப்படும்.வாக்குப் பதிவின்போது பேப்பர் சீலில் அனைத்து ஏஜெண்டுகளும் PRO ம் கையெழுத்திட வேண்டும் . இதன் வாரிசு எண் வாக்க்பதிவு இயந்திரத்திண் எண் உள்ளிட்ட விவரங்கள் ஒவ்வொரு ஏஜென்டுக்கும் வழங்கப்படும். ஓட்டு எண்ணிக்கையின் போது இவை சரியாக உள்ளதாக என்பது உறுதி செய்யப்படும். பேப்பர் சீலை அகற்றாமல் TAMPERING செய்ய முடியாது. இது கிழிந்திருந்தாலோ இயந்திரத்தில் வரிசைஎண்ளில் மாற்றம் செய்தாலோ ஆட்சேபனை தெரிவிக்கலாம். அந்த இயந்திரத்தில் ஒட்டு எண்ணிக்கையை நிறுத்தக் கூட செய்ய முடியும். ஒரு வேளை இயந்திரங்களில் மற்றம் செய்ய வேண்டுஎனில் அசாதாரண தொழில் நுட்ப அறிவு தேவைப்படும். அனால் ஏது மின்றி படிக்காதவர்கள் கூட வாக்கு சீட்டு நடைமுறையில் முறை கேடுகள் செய்ய முடியும்.வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் எளிய நடை முறை இருக்க சிக்கலான இயந்திரத்தில் மூலம் செய்வதில் லாபம் ஏதும் இருக்க முடியாது. ஒவ்வொரு கட்சியும் தோற்கும்போது வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது குறை கூறுவது வழக்கம்.இதனை எல்லா கட்சிகளுமே செய்திருக்கின்றன.சார்வாதிகார இராணுவ ஆட்சிகளில் மட்டுமே இவை சாத்தியம். எந்தக் கருவியாக இருப்பினும் மேம்படுத்துதல் அவசியமானது. தேர்தல் கமிஷனும் இயந்திரக் குறைபாடுகளை அலசி ஆராய்ந்து சரி செய்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை
    என் வலைப் பக்கத்தில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முரளி உங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி...... உங்களின் கருத்தில் சிறிது மாறுபடுகிறேன் காரணம் எலக்ட் ரானிக் மெசினில் என்ன வேண்டும் என்றாலும் மாற்றம் செய்யலாம் வெளி உலகு அறியாமல் அதனுள் வைக்கும் சிப்'ல் பல புரோகிராம் எழுதி வைத்து இந்த டைமில் இருந்து இந்த டைம் வரை எப்படி செய்லபட வேண்டும் என்று கூட நாம் மாற்றி அமைக்கலாம் அதிகாரம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்யலாம்..... நீங்கள் பில்டு ஆபிஸ்ராக செயல்பட்டு இருக்கலாம் ஆனால் அந்த மெமிசின் எப்படி செயல்படுகின்றது என்று மேல் அதிகாரிகல் சொன்னதை மட்டும் நீங்கள் சோதனை செய்து இருப்பீர்கள் ஆனால் மெசினில் எப்படி காமாண்ட்களை பெற்று அது செயல்படுகிறது என்று அதனுள் இருக்கும் தொழில்னுடபம் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நான் கருதுகிறேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.