Wednesday, March 29, 2017

avargal unmaigal
மனைவிகிட்ட இப்படியெல்லாம்வா பேசுவாங்க


கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நான் என் குழந்தையின்  பெட் ருமிற்கு சென்று  அவள் பெட்டில் படுத்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம் அந்த சமயத்தில் ஆபீஸில் இருந்து லேட்டாக வந்த என் மனைவியும் அங்கே வந்தாள்  எங்கள் வீட்டு நாய்குட்டியும் அந்த பெட்டிற்கு ஜம்பு பண்ணி வந்தது. வெள்ளிகிழமை இரவு என்பதால் நீண்ட நேரம் பேசி அரட்டை அடித்து கொண்டிருந்தோம்.


அப்போது என் மனைவி திடீரென்று ஒரு வெடியை தூக்கி போட்டாள்.. இப்படி மூன்று பேரும் தினமு இப்படி பேசி படுத்து தூங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றாள். அதை கேட்ட எனக்கு கரண்ட் ஷாக் அடித்து தூக்கி போட்டது போல இருந்தது. என் பெண் டாடி இது என்ன கொடுமை என்று அலறினாள்


இதை பார்த்த என் மனைவி நீங்கள் எல்லாம் மனுஷ பிறவியே இல்லை. மனுஷங்கனா எல்லாம் ஒன்றாக சேர்ந்து தூங்கணும் நீங்கள் எல்லாம் என்ன பிறவியோ என்றாள்.



அதை கேட்ட என் வாய் சும்மா இருக்குமா என்ன?


உடனே என்ன உனக்கு எல்லாம் கூட ஒன்று சேர்ந்து தூங்கனும்தானே அதுதானே உனக்கு வேண்டும் என்றேன்


அவளும் ஆமாம் என்று மிக ஆச்சிரியத்தோட நான் நல்ல ஐடியா தரப்போகிறேன் என்று வாயைப் பிளந்து உடகார்ந்து கொண்டிருந்தாள்.

நான் அவளிடம் சிரிக்காமல் அப்படியென்றால் நீ பேசமா ஹாஸ்பிடலில் போய் படுத்துக்கோ அங்கதான் எல்லோரும் எப்போதும் படுத்து இருப்பாங்க என்றேன்


அதை கேட்ட அவள் உள்பட என் குழந்தையும் சிரித்து மகிழ்ந்தனர்... ஆனால் அதன் பின் தாந்தான் என் மனைவிக்கு உறைத்தது நான் அவளை கிண்டல் பண்ணுகிறேன் என்பது....


அது புரிந்து அவள் பூரிக்கட்டையை தூக்குவதற்குள் நான் அந்த இடத்தை விட்டு ஜூட்டாக பறந்துவிட்டேன் . நல்ல வேளை வெள்ளிகிழமை இரவு என்பதால் பாருக்குள் நுழைந்து ஒழிந்து கொண்டேன் அங்குதான் என் மனைவி உள்ளே நுழைய மாட்டாள்.



டிஸ்கி:: எங்கள் வீட்டில் நான் என் மனைவி மற்றும் குழந்தை ஒவ்வொருவரும் தனி தனி பெட் ரூமில்தான் தூங்குவோம் யாரவது நண்பர்கள் வீட்டிற்கு வந்து தங்க நேர்ந்தால் மட்டுமே அவர்களுக்கு ரூமை ஒன்று ஒதுக்கி கொடுப்பதால் அன்றுமட்டும் சேர்ந்து தூங்குவோம் அல்லது என் மனைவி அல்லது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மட்டும் என் பெட்டிற்கு வருவார்கள்.  மற்ற சமயங்களில் என் பெட்டில் வலது புறம் என் நாய்குட்டியும் இடது புறம் என் லேப்டாப் மட்டும் தினமும் என்னுடன் சேர்ந்து தூங்கும் அனுமதி பெற்று இருக்கிறது .: இப்படி தனியாக படுப்பதால்தான்  தினமும் இப்படி பதிவுகள் எழுதி உங்களை சாக அடிக்க முடிகிறது....ஹீஹீ

கொசுறு :



அன்புடன்
மதுரைத்தமிழன்

31 comments:

  1. பதிவு இப்படித்தான் வருகிறதா ?

    ReplyDelete
  2. நீங்க உங்க மனைவியின் ஆசையை கெடுக்கக்கூடாது அதனால் நீங்க உங்க மனைவி மகள் அப்புறம் உங்க நாலுகால் பையன் எல்லாரும் ஒண்ணா தூங்குங்க

    மை மைண்ட் வாய்ஸ் (இவர இப்படியே விட்டா சீக்கிரமா 2000 பதிவு எழுதிடுவார் அதனால் வேற வழியில்லை இப்படியாவது உசுப்பி விடுவோம் )

    ReplyDelete
    Replies
    1. வீக்கெண்டில் எல்லோரும் சேரந்து டிவி பார்த்துவிட்டு டிவி முன்னால் தரையில் பெட்சீட் போட்டு எல்லோரும் ஒன்றாகத்தான் தூங்குவோம் இப்படி சேராமல் தூங்குவது வாரநாட்களில் மட்டுமே...


      நான் இப்படி பதிவு எழுதாமல் இருக்க அதிரா வாயில் வேல் குத்தி முருகனுக்கு காவடி எடுக்க போறேன் காளியமமன் முன்னால் தீயில் நடக்க போறேன் என்று வேண்டிக் கொள்ளக்கூடாது என்பதுதான் எனக்கு இப்ப உள்ள கவலை ஹிஹீ

      Delete
    2. புரிந்தது புரிந்தது ட்றுத் ட ரகசியம் புரிந்தது... இதுதானா 1701 இன் ரகசியம்... நானும் யோசிச்சேன்ன் சமையலும் செய்து எப்படித்தான் இப்படி டக்குப் பக்கெனப் போடுகிறாரோ என:)..

      என்னாது அதிரா வாயில் வேல் குத்துவதோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் நடக்காது... நான் நேர்த்தி வைக்கப் போறேன்ன்.. ட்றுத் வீட்டு மாமிக்கு.. ஒரு மாதம் ஹொலிடே கிடைக்கோணும் என வேலையிலிருந்து:)..

      Delete
    3. மாமிக்கு ஹாலிடே என்றால் எங்களால் வீட்டிலே நிம்மதியாக இருக்க முடியாது ஹும் பாவிங்க இப்படியா மதுரைத்தமிழனுக்கு சோதனை வரணும் என்று நினைப்பீங்க

      Delete
    4. இவ்ளோ நாள் தெரியாமப்போச்சே !! கூட்டு பிரார்த்தனைக்கு ரெடியாகுங்க மக்களே

      Delete
    5. ஏஞ்சல் நான் ரெடி....ஹிஹிஹி

      கீதா

      Delete
  3. சாப்பாடு? அதையாவது சேர்ந்து சாப்பிடுவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. இரவு சாப்பாடு மட்டும் எல்லோரும் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டு சாப்பிடுவோம்... இப்படி நாங்கள் தூங்குவதற்கு காரணம் என் மனைவி ஐடியில் மேனேஜ்மென்ட் பொறுப்பில் வேலை செய்வதாலும் அது மட்டுமல்லாமல் Off Shore ப்ராஜெக்டை ஹேண்டில் பண்னுவதாலும் இரவு நேரத்தில் அவர்களோடு போனில் பேசிக் கொண்டு வேலை செய்வார் அந்த நேரத்தில் எந்த சத்தமும் வரக் கூடாது அது போல நான் நெட்டில் இருக்கும் போது பதிவு எழுதும் போது அது எவ்வளவு நேரமாக இருந்தாலும் என்னை தொந்தரவு ப்ண்ணக் கூடாது அது போல குழந்தை அவள் ஹோம் வொர்க்கை செய்யும் போது அவளை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணக் கூடாது என்பதால்தான் இப்படி தனிதனியாக தூங்குவது இப்படித்தான் இங்கே எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக போய் கொண்டிருக்கிறது

      Delete
    2. மனம்தான் அனைத்துக்கும் காரணம்... சந்தோசமாக வாழ்வதுதான் முக்கியம் மற்றும்படி எல்லாம் அவரவர் செளகரியத்தைப் பொறுத்ததே..

      Delete
    3. அதுசரி மேலே பிளக் அண்ட் வைட்டில் இருக்கும் படம் உங்களிருவரின் படம்போல இருக்கே:) ஹா ஹா ஹா:)

      Delete
    4. கீதாஆஆஆஆஆஆ கொஞ்சம் ஓடிக்கம்:).. அந்த ஏதோ டூப் ட படம் இருக்கு எனச் சொன்னீங்களே..:) அதைக் கொஞ்சம் அடுத்த கதைப் போஸ்ட்டில போடுங்கோ:)

      Delete
    5. //மேலே இருக்கும் படம் உங்களிருவரின் படம் போல இருக்குதே//


      ஆஹா நான் அவ்வளவு இளமையாகவா இருக்கிறேன் ஹீஹீ அது சரி அது எப்படி எங்கள்து படம் என்று கண்டுபிடித்தீர்கள் ஒரு வேளை அந்த படத்தில் இருக்கும் பெண் கோபப்படுவதை வைத்துதானே கண்டு பிடித்தீர்கள் அப்படி இல்லையென்றால் உங்களால் இப்படி சொல்லி இருக்க முடியாது அல்லவா

      Delete
    6. கீதா ரொம்ப நல்லவங்க அவங்க என் படத்தை எல்லாம் ரீலீஸ் பண்ணமாட்டாங்க காரணம் அவர்கள் என் படத்தை போட்டால் அனைத்து தமிழ் பெண்களும் பைத்தியமாக அலைவார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்

      Delete
    7. ஆவ்வ்வ்வ்வ் வந்துவிட்டது வந்துவிட்டது உண்மை வெளிவந்துவிட்டது, அது தன்னுடைய படம்தான் என்பதை ஒத்துக்கொண்டிட்டார்ர் பப்ளிக்கில் வெள்ளைப் பேப்பரில் சைன் பண்ணிட்டார்ர்ர்ர், அஞ்சு இந்தப் பேப்பரை பத்திரமா அந்த மோதிரம் வச்சுப் பூட்டிய பெட்டியிலேயே வச்சுப் பூட்டி விடுங்கோ கீதாட்டக் கொடுப்போம்ம்ம்ம்:).

      Delete
    8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....என்ன பெருமை பாருங்க அதிரா ஏஞ்சல் இந்த மதுரைக்கு...அவரைப் பார்த்து எல்லாரும் பைத்தியமா அலைவாங்களாம்....ச்சே இந்த போஸ்ட் எப்படி மிஸ் ஆச்சு...சூடா வந்து கும்மி அடிக்க முடியாம போச்சு...ஹும்...இந்த இங்க சம்மர் ஆச்சா கரன்ட் ரொம்பவே லொள்ளு ஸோ நெட்டும் அப்பப்ப கோச்சுக்குது....

      கீதா

      Delete
    9. அதிரா ஏஞ்சல் இருங்க இப்ப அங்க பூரிக்கட்டை பறக்கற டைம் ஆயிடுச்சு....ரொம்ப நாளாச்சுல அதான்....பாருங்க பூரிக்கட்டை போஸ்ட் வரும்...மாமி பாத்துக்கிட்டேதான் இருக்காங்க மதுரை லொள்ளு தாங்கலினு...

      கீதா

      Delete
  4. பொறாமையாய் இருக்கிறது
    எங்களுக்கு அந்தக் கொடுப்பினை கிடையாது

    ReplyDelete
    Replies

    1. இந்த வயதில் நீங்கள் சேர்ந்து தூங்குவதுதான் நல்லது.....பொறாமை எல்லாம் படக் கூடாது இளம் வயதிலும் (கல்யாணம் ஆன ) வயதான காலத்திலும் சேர்ந்துதான் தூங்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் இருவரும் வேலை வேலை என்று இருப்பதால் அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் நிம்மதியாக தூங்க வேண்டும் அப்படி செய்தால்தான் அடுத்த நாள் எனர்ஜிடிக்காக வேலை செய்ய இயலும்

      Delete
  5. Now I get the picture
    why Boorikkattai flies

    ReplyDelete
    Replies
    1. நான் அடுத்து போடலாம் என்று நினைத்து இருக்கும் பதிவை போட்டால் பூரிக்கட்டை அல்ல அருவாளே பறக்கும் என நினைக்கிறேன் கண்டிப்பாக போடுவேன் காரணம் துணிந்தவனுக்கு தூக்குமேடை கண்டு பயம் இல்லை

      Delete
    2. ப்ளீஸ் ப்ளீஸ் உடனே உடனே செய்யுங்க ..டிலே செய்யவேண்டாம்

      Delete
    3. கரீக்டா சொன்னீங்க கஸ்தூரி...

      கீதா

      Delete
    4. ஆஹா! இப்பதான் கமென்ட் போட்டுட்டு வந்தேன் அடுத்து பூரிக்கட்டை போஸ்ட் வரும்னு.....இங்க வந்தா அருவாளே பறக்கும்னு...மதுரய போட்டுட்டாரு...அஹஹஹ்

      கீதா

      Delete
  6. அஆவ் !! நான் ஒரு விஷயத்தை சொல்லாம போயிட்டேன் ..ஆமா மாமி போட்டிருக்கிற டிரஸ் கலர் எனக்கு தெரில அதென்ன அவ்ளோ அழகான பெண்ணை கருப்பு வெள்ளை ல போட்ருக்கீங்க

    ReplyDelete
    Replies

    1. படத்தில் இருக்கிற பெண்ணை மாமின்னே முடிவு பண்ணிடீங்க சரி சரி உங்க நினைப்பை கெடுக்க வேண்டாம் அதனால் அந்த பெண்ணை பார்த்தால் சொல்லுங்க மதுரைத்தமிழன் அந்த பெண்ணை மாமியாக்கி வீட்டில் நல்லா வைச்சு காப்பாற்றுவான் என்று ஹீஹீ

      Delete
    2. படத்துல இருக்கற மாமியும் ரொம்ப அழகா இருக்காங்க ஏஞ்சல்.....மதுரை கமென்டுக்கு லாஸ்ட் லைன் பாருங்க ஏஞ்சல் அதான் அருவா பறக்கப் போகுது இந்நேரம் பறந்துருக்கும்....அடுத்த பதிவு ரெடியாருக்கும்...மதுரை ஆஸ்பத்திரில கட்டுகளோட படுத்துருக்கறா மாதிரி படத்தோட....ஹிஹிஹி

      கீதா

      Delete
  7. அது சரி...
    தனிமை படுக்கையால்தான் பதிவும் அரட்டையும் அரங்கேறுதோ...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.