Friday, March 31, 2017

ஆதார்கார்டும் கேலி கருத்துகளும்


avargal unmaigal
ஆதார்கார்ட் கட்டாயமில்லை ஆனால் எல்லோரும் கண்டிப்பாக வைத்திருக்கணும்



டேய் என்னடா  எல்லா சாதிக்காரணுக்கும் ஒரே மாதிரி ஆதார்கார்ட் இது ரொம்ப மோசம்டா!

avargal unmaigal
ரஜினியின் எந்திரன் 2 படம் பார்க்க ஆதார் கார்ட் அவசியம்

ஆதார்கார்ட் இல்லாமல் விபச்சாரம் பண்ணுவது குற்றம்

ஆதார்ட்கார்ட் வைத்திருக்கும் விவசாயி கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டால் அவர்களது குடும்பத்திற்கு மத்திய அரசு பண உதவி செய்யும் # இப்படி ஒரு அறிவிப்பு  வராமலா போகும்

ஆதார்கார்டில் இருக்கும் தகவல் டேட்டாக்களை யாரும் திருட முடியாது ஏனென்றால் எல்லா டேட்டாக்களை நாங்களே கார்பொரேட் கம்பெனிகளுக்கு ஷேர் பண்ணிவிடுவோம்

ஆதார்கார்ட்  இல்லாதவன் அரை மனிதன்

பரிட்சையில் இப்படி கேட்டாலும் கேட்காலாம் ஆதார்ட் கார்ட் படம் வரைந்து பாகங்களை குறி? 100 மார்க் கேள்வி


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. ஆதர் கார்டு இல்லாமல்
    பதிவராக இருக்கலாமா?

    ReplyDelete
  2. ஹி..ஹி..ஹி.. ஒருநாள் காந்தப்புயல் ஒன்று வீசப் போகிறது. லோடு தாங்காமல் எல்லாமே அவுட். மறுபடியும் முதலில் இருந்து ...

    ReplyDelete
  3. இவனுக தொந்தரவு தாங்கலை....
    எல்லாத்துக்கும் கார்டு வேணும்ன்னு சொல்றவனுக செத்தவனுக்கு ஆதார்கார்டு காட்டுனாத்தான் எரிப்போம் புதைப்போம்ன்னு நகரங்களில் கொண்டு வரப்போறானுக...
    நம்மள மாதிரி கிராமவாசிக்கு பிரச்சினை இல்லை....
    இவனுக ஆட்டம் எங்கே கொண்டு போய் விடப்போகுதோ தெரியலை... அழிவை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கும் நமக்கு ஆதார்கார்டு எதுக்குங்கிறேன்...

    ReplyDelete
  4. இப்போது தடி எடுத்தவன் எல்லாம் ஆட்டம் ஆடுகிறானே

    ReplyDelete
  5. ஹஹஹஹ் வெங்கட்ஜி ஒரு பதிவில் எழுதியிருந்தது போல் பஸ் ஸ்டான்ட், ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைகளுக்குச் செல்வதற்குக் கூட ஆதார் கேட்டாலும் கேட்பார்கள்.ஹஹ்ஹ்ஹ்ஹ் உங்க ஊர் சோசியல் செக்யுரிட்டி நம்பர் போல இங்க கொண்டுவரப் பாக்குறாங்க போல...ஆனா அதையும் சரியா செய்யணும் இல்லையா...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.