Saturday, February 18, 2017

ஸ்டாலின் மானம் காக்க தவறிய திமுகவின் உடன்பிறப்புகள்

தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிந்த போது  தனது சட்டையை கழற்றி தளபதியின் மானம் காக்க ஒரு திமுகவினர் கூட முயற்ச்சிக்காமல் சிங்கத்தை தெருதெருவாக அலையவிட்டது மிக மோசம ஏன் கவர்னரை சந்திக்க சென்ற போது கூட அவரின் மானம் காக்க ஒரு சட்டையை தராமல இருந்தது செயல் மிகவும் வருந்ததக்கது, ஏன் திமுக உடன்பிறப்புக்கள் இப்படி சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்

நான் மட்டும் அங்கே இருந்து இருந்திருந்தால் என் சட்டையை கழற்றி தந்து ஸ்டாலினின் மானம் காத்து இருப்பேன்..

தலைவர் பக்கத்தில் எப்போதும் அருகில் நிற்பது துரைமுருகந்தான் அவர் ஓரு வேளை ஸ்டாலின் சட்டையை ஏதோ கடுப்பில் கிழித்து விட்டாரோ என்னவோ


சட்டையை கிழித்துவர்களுக்கு அவரின் வேட்டியை உருவிவிட முயற்சிக்காத போதே அது தன் ஆட்களால் நடத்திய நாடகம் போலத்தான் இருக்கிறது ஸ்டாலினுக்கு கலைஞரை போல நன்றாக நாடகமாட தெரியவில்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி :ஹேய் மேலே உள்ள படத்தை பார்த்து சிங்கம் 4 க்கான சூட்டிங்க் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்

6 comments:

  1. நாடகமாகவே இருப்பினும் இன்று சட்டசபைக்குள் நடந்த கூத்துக்கள் கேவலமானவை.
    இரகசிய வாக்கெடுப்பு நடந்தால் ஜெயிக்க முடியாது என்பது தெரிந்தே 'சிறை'கலா ஆட்கள் அதை மறுத்தார்கள்... சண்டை... அப்புறம் சண்டையில கிழியாத சட்டை இருக்கான்னு ஒரு கெத்து நடை... என கேவலத்தின் உச்சத்தில் போனாலும் தமிழகம் இப்போ மன்னார்குடி மாபியா கையில்... எல்லாம் விதி... தலைவரே விதி...

    இதுல சபாநாயகர் சாதிப் பிரச்சினைக்கு வித்திடுகிறார்... கேவலமில்லையா... இவனுகளுக்காக மக்கள் அடிச்சிக்கிட்டு சாகணும்... நோகாம நொங்கெடுத்து சாப்பிடணும்... அவ்வளவுதான் இவனுக மக்கள் பிரதிநிதியாய் இருப்பதற்கு காரணம்....

    ReplyDelete
    Replies
    1. சட்டசபையில் நடந்ததுமட்டுமல்ல தமிழகத்தில் நடக்கும் அனைத்தும் கேலி கூத்துக்கள்தான் நண்பரே

      Delete
  2. விரைவாக எழுதிவிடுகிறீர் மச்சான்

    ReplyDelete
    Replies
    1. ஆறிய பண்டம் குப்பை என்று அறிந்து இருக்கிறேன் ஹீஹீ

      Delete
  3. மிகவும் கேவலமான நிகழ்வு அதுவும் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நடத்தியக் கேலிக் கூத்து.

    கீதா

    ReplyDelete
    Replies

    1. நல்லவர்களை தேர்ந்தெடுக்காமல் கூத்தாடுபவர்களை தேர்ந்தெடுத்தால் இப்படிதானே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.