Monday, December 5, 2016



இலை உதிர்ந்துவிட்டது Tamil Nadu Chief Minister J Jayalalitha dead

பிழைக்க வேண்டும் என்றுதான் எல்லோர் மனதும் விரும்பியது ஆனால்.....இலை உதிர்ந்தது உதிர்ந்ததுதான்  புதிய இலைதான் உதிர்க்குமே தவிர அதே இலை மீளமூடியாது என்பதுதான் கடவுள் வகுத்த நீதி அதை உணர்ந்து அடிதடி கலவர்ம் இல்லாமல் க்யூபா அதிபர் இறந்த போது அந்நாட்டு மக்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி  நடந்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். அதுதான் ஜெயலலிதாவிற்கு நாம் அளிக்கும் கெளரவம் அதை தவிர்த்து வேறு ஏதும் செய்தாலும் அது அவரின் புகழுக்கு இழுக்குதான் ஏற்படுத்தும்.


ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்


அரசியல் எதிரிகளை எல்லாம் வீழ்த்தி கொண்டு வந்தவர் எமனிடம் போராடி தோற்றுதான் போனார்

ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் வாழ்வு பலருக்கு பாடம். 




ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

டிஸ்கி : மக்களின் உணர்வுகளோடு விளையாடும் அதிகாரவர்க்கம் #shame on tamilnadu/India

ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது  என்று வெளிப்படையாக இருந்திருந்தால் மக்களின் உணர்ச்சிகள் கட்டுபடுத்தப்பட்டிருக்கும் அதே நேரத்தில் மக்களும் மற்றவர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதை விடியோ மூலமாகவோ அல்லது சிறு சிறு தலைவர்களை அருகில் பார்க்க அனுமதி கொடுத்திருந்தால் அவருக்கு மன உற்சாகம் கிடைத்து பிழைக்க வாய்ப்புக்கள் உண்டு. மேலும் ரத்த சொந்தங்கள் அருகில் இல்லாமல் பிணம் தின்னும் கழுகுகள்தான் அவரை சுற்றி வந்துள்ளன. இதுமாதிரியான் கொடுமையான நிகழ்வு வேறு யாருக்கும் வந்துவிடக் கூடாது

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. அசாதாரண சூழலில்அதிமுகவினரின் பொறுமையை பாராட்டியே ஆக வேண்டும். படிப்படியாக மக்கள் மனதை தயார் படுத்தி உரிய நேரத்தில் செய்தியை அறிவித்து எந்த அசம்பாவிதமும் இன்றி,சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்திய அரசுக்கும் காவல் துறையினருக்கும் நன்றி கூற வேண்டும்

    ReplyDelete
  2. சிறிய அளவில் குழப்பம் ஒன்று மாலை 5.30க்கு ஏற்பட்டாலும் உடனே கட்டுக்குள் கொண்டுவந்து மிக மிக அமைதியான முறையில் இறுதிச் சடங்குகள் வரை முடிந்தன சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் அரசையும் பாராட்ட வேண்டும்....ஆழ்ந்த இரங்கல்கள்

    டிஸ்கி அருமை பாடலும் ரைட் சாய்ஸ்..

    ---இருவரும்..

    ReplyDelete
  3. பதிவின் சோகத்தை பாடல் குறைத்துவிட்டது. இதுதானே நியதி. அந்த 75 நாள்கள் நீங்கள் கூறியதுபோல மனதை அதிகம் வருத்திவிட்டது.

    ReplyDelete
  4. ஆடி அடங்கும் வாழ்க்கையடா.... ம்ம்ம்ம்...

    ஆழ்ந்த இரங்கல்கள். பல விதத்தில் பலராலும் தொல்லைகளை அனுபவித்து இப்போது அனைத்திலிருந்தும் விடுதலை. தமிழ் மக்கள் பலருக்கும் இது பெரிய இழப்பு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.