Thursday, October 27, 2016



avargal unmaigal
வங்கி பணியாளரை விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு ஜெயலலிதாவை விமர்சிக்க தைரியம் உண்டா?


 Nov 25, 2015 ல் இணையத்தில் வெளியான ஒரு வங்கி (பெண்) ஊழியர் மெதுவாக வேலை செய்யும் வீடியோவை ஜெயமோகன் இப்போது வெளியிட்டு அந்த ஊழியரின் செயல்பாட்டை கடுமையாக திட்டி இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்



ஜெயமோகனின் ஜால்ராக்கள் ஜெயமோகனின் வார்த்தைகள் ஒரு ஊழியரைச் சாடவில்லை... ஒட்டுமொத்த அரசு வங்கி ஊழியர்களின் செயல்பாட்டால் எழுந்த தார்மீக கோபமே என்று சப்பை கட்டுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் தவிர, அரசு வங்கி வாடிக்கையாளர்களை, அதன் ஊழியர்கள் நடத்தும் விதத்தை பார்க்கும்போது, ஜெயமோகன் திட்டியது லட்சத்தில் ஒரு பங்குதான் என்றும் சொல்லுகிறார்கள் மேலும் அந்த ஊழியர் பெண் என்பதால், இதில் பெண்ணியம் அது இது என்று பேச வேண்டியதில்லை. ஜெயமோகன் விமர்சித்தது ஒட்டுமொத்த வங்கி பணியாளர்களின் செயல்பாட்டையே. என்று சொல்லி கடைசியாக ஜெ.மோ. வார்த்தைகள் தடித்திருக்கலாம்.. ஆனால் அவரது ஆதங்கம், கோபம் நியாயமே என்றும் சொல்லுகிறார்கள்!



சரிப்பா ஜெயமோகனும் அவரது அடிவருடிகளும் சொல்வது நியாயம் என்று எடுத்து கொள்வோம். ஒகே வா இந்த நியாயவாதிகளிடம் ஒரு சிறு கேள்வி அதற்கு முடிந்தால் சரியான பதில் சொல்லுங்கள்


இந்த பெண்மணி வேலை செய்யாமல் இல்லை செய்கிறார் ஆனால் அவர் மெதுவாக செய்கிறார் அவ்வளவுதானே இது என்ன பெரும் குற்றமா ?இப்படி நடப்பது வங்கி துறையில் மட்டுமா? மனதை தொட்டு சொல்லுங்கள்  மற்ற அரசு துறைகளில் இப்படி எல்லாம் நடக்கவே இல்லையா என்ன? அரசு ரிஜஸ்டர் ஆபிஸ்,பாஸ்போர்ட் அலுவலகம், ஆதார் அட்டை பெறும் இடம். பிஃஎப் ஆபிஸ் லைசன்ஸ் வாங்கும் இடம் போலீஸ் ஸ்டேஷன் இப்படி பல இடங்களை உதாரணமாக சொல்லாம். இங்கு எல்லாம் நீங்கள் சென்ற உடனே வேகமாக எல்லா வேலைகளும் முடிந்துவிடுகிறதா என்ன?

அப்படி எல்லா இடமும் இப்படி மெதுவாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்க ஏதோ ஒரு பெண்மணி உடல் நலக் குறைவின் காரணமாக மெதுவாக பணியாற்றி தன் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.  அவர் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி அவரால் முடிந்ததை செய்து சம்பாதிக்கிறார் அவர் ஒன்றும் அநியாய வழியில் ஏதும் சம்பாதிக்கவில்லைதானே

சரி அந்த அம்மாவை கேள்விகள் கேட்க ஆண்மை உள்ள உங்களுக்கு நம்ம தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் குழந்தை போல மெதுவாக நடந்துதானே பணியாற்றினார். அப்ப அவரை பார்த்து இப்படி மெதுவாக செயல்படுகிறாரே அவருக்கு எதற்கு முதலமைச்சர் பதவி என்று துணிச்சலாக கேட்க வேண்டியதுதானே? எங்க அப்படி கேட்டால் உங்கள் ஆணுறுப்பை கட் செய்து நடமாடவிடுவார் என்ற பயத்தால்தானே பொத்திகிட்டு இருந்தீங்க. அப்படி பொத்திகிட்டு இருந்த நீங்க ஒரு சாமன்ய மனுஷி செய்யும் போதுமட்டும் பொங்குகிறீர்களே? போங்கடா பொட்டை பசங்களா?

பொத்திகிட்டு வேலையை பாருங்கடா


அன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments:

  1. இப்படி உசுப்பேத்தி ஜெ பற்றி எழுதவைத்து ஆசானை ஒன்பதாவது ஆளாக உள்ளே தள்ளப் பாங்குறீங்களே?!

    ReplyDelete
    Replies
    1. உசுப்பேத்தல நண்பரே நாட்டில் எவ்வளவோ அநியாயங்கள் நடக்கும் போது பிரபல எழுத்தாளர் என சொல்லப்படுபவர் இப்படி சிறு விசயத்திற்கு பொங்கி எழுதுவது சரியல்ல சறுக்கி விழுந்துவிட்டார் ஜெயமோகன் இந்த விஷயத்தில்

      Delete
  2. true ji
    no media had the guts to ask tamil nadu C.M why she had convened press conference for the past five years.
    but they would surround karuna sit by his side some very close also and pester karuna to answer press ...

    ReplyDelete
    Replies
    1. மீடியா கேட்கவில்லை என்றால் என்ன நண்பரே அதற்குதான் சமுக வலைத்தளம் நம் கையில் இருக்கிறதே அதை நாம் பயன்படுத்தி அவதூறு எழுதாமல் நியாயமான கேள்விகளை தட்டிக் கேட்கலாம்தானே

      Delete
  3. Arumaiya kelvi keteenga sir. Paavam indha amma. She might not well. So only. We need to adjust. Let she do the work without any mistake. We have go be polite and respect her age.

    ReplyDelete
    Replies

    1. அந்த வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது அந்த அம்மாவின் உடல் நலத்தில் ஏதோ பிரச்சனை என்று சாதாரண மனிதர்கள் நமக்கே அது புரியும் போது பல விஷயங்களை விமர்சனை செய்யும் ஜெயமோகனுக்கு இது கூட புரியவில்லையா என்ன?இது கூட புரியவில்லை என்றால் இவர் மற்ற பிரச்சனைகளை பற்றி விமர்சனம் செய்வதில் என்ன நியாயம் இருந்துவிடப் போகிறது

      Delete
  4. எழுத்தாளர் ஜெயமோகன், மெதுவாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு வங்கிப் பணியாளரின் வீடியோவைப் போட்டு அதுகுறித்து ‘தேவாங்கு’ எனும் பெயரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். இதுகுறித்து டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அது பரவலாகப் பகிரப்பட்டு, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், வங்கிப் பணியாளரை தேவாங்கு என்றும் ஒருமையில் விளித்து எழுதியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த வங்கிப் பணியாளர் குறித்து, தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் பிரேமலதா ஷிண்டே என்றும் அவர் பக்கவாதத்தாலும் இருமுறை ஹார்ட் அட்டாக்காலும் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. தன்னுடைய விடுப்பு காலம் அனைத்தும் சிகிச்சைக்காக முடிந்துவிட்டநிலையில், அவர் வேறு வழியின்றி வங்கிப் பணிக்குத் திரும்பியதாகவும் பிப்ரவரி 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் அதுவரை வங்கிக்கு வந்துபோக வங்கித் தலைமை உதவி செய்திருப்பதாகவும் தெரிகிறது. கணவர் இறந்துவிட்ட நிலையில், பிரேமலதா தன்னுடைய சிகிச்சைக்காக பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்.

    பிரேமலதா மெதுவாக பணிபுரிவதால் அதை ஈடுகட்டும்விதமாக வங்கி மற்றொரு கவுண்டரை திறந்துவைத்துள்ளது. இதை அறியாமல் ஏதோ பொதுத் துறை வங்கி ஊழியர்களே மெத்தனமாக இருப்பதாக காட்ட இந்த வீடியோவை எடுத்து போட்டிருக்கிறார் ஹர்ஷ்த் கோட்கே என்பவர்.

    எழுத்தாளர் ஜெயமோகன், ‘தேவாங்கு’ என்ற பதிவை நீக்கியிருக்கிறார்.
    (நன்றி: thetimestami)

    ReplyDelete
    Replies

    1. பகிர்விற்கு நன்றி இளங்கோசார். ஜெயமோகன் அந்த பதிவை நீக்கியது சரி ஆனால் அப்படி தாம் தவறாக எழுதியதற்கு மன்னிப்பு கேட்டால் அவர் நல்ல மனுஷன் இல்லையென்றால் மலத்தை விட கீழ்தரமான மனிதர்தான்

      Delete
  5. பேஸ்புக்கில் ஜோசபினோ பதிந்த கருத்தும் அதற்கு நான் அளித்த பதிலும்

    J P Josephine Baba இந்திய வங்கிக்கு போனால் உங்களால் விமர்சிக்காதிருக்க இயலாது

    DDeej Durai வங்கிகளின் மொத்த செயல்பாடுகள் அப்படி இருக்கின்றன என்றால் இந்த பெண்மணியை மட்டும் வீடியோவாக போட்டு அதை தரக் குறைவாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் சகோ?

    J P Josephine Baba உங்கள் கருத்தில் நியாயம் உள்ளது

    ReplyDelete
  6. அந்த பெண்மணி மெதுவாகத்தான் வேலை செய்கிறார் முகத்தை கூர்ந்து கவனியுங்கள் ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வு இது எலலா மனிதர்களுக்கும் உள்ளதுதான்.

    சமீப காலமாக அரசு இயங்கி வருகிறதா ? ஆனால் சம்பளம் மட்டும் விழுகிறதே....

    பல அலுவலகங்களில் வேலை நேரத்தில் கணினியில் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கின்றார்களே.... அதை என்ன செய்வது ?

    தங்களது கோபத்தில் நியாயம் இருக்கின்றது தமிழரே...

    த.ம.2

    ReplyDelete
  7. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  8. பெரிய (??!!) மனுஷனின் சின்னப்புத்தி

    ReplyDelete
  9. யாராவது ஆ(ச)சானவாய் பொத்தி இருக்க சொன்னால் நல்லது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.