Sunday, September 18, 2016



ராம்குமார் Vs சங்கராச்சாரியார்

சிறையில் இருந்த #ராம்குமார் தற்கொலை செய்ய வசதி செய்து தந்தவர்கள் காஞ்சியில் உள்ள பெரியவர் சிறையில் இருக்கும் போது இது மாதிரியான வசதிகள்  செய்துதரப்படாதது ஏன்?

#ராம்குமார் சாவில் மர்மம்னு இன்னும் யாரும் ஆரம்பிக்கலை காரணம் இது சிறைத்துறை அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை  என்று மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது



தவறுகளுக்கு தண்டனையை  நீதிபதிகள் அறிவிக்கும் முன்னர் சிறை அதிகாரிகள் நிறைவேற்றுவதுதான் தமிழகத்தின் இன்றைய டிஸைன் #ராம்குமார் சிறையில் தற்கொலை

பாதுகாப்பான சிறைக்குள் ஒருத்தனால் தற்கொலை செய்யும் வசதி தமிழக சிறைத்துறையில் மட்டும் செய்து தரப்பட்டு இருக்கிறது #ராம்குமார் தற்கொலை

தமிழக அதிகாரத்தின் கோரக் கரங்களை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது. வருங்காலத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இப்படி  நிகழலாம். ராம்குமார் கொலையாளியா இல்லையா என்கிறதெல்லாம் இரண்டாம் பட்சம். சிறை பாதுகாப்பானது என்கிற பொய்யை எத்தனை நாள் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?

ராம்குமாரின் ஆவியையும் தற்கொலை செய்ய வைக்கும் திறமை தமிழக அதிகாரிகளிடம் உண்டு


இனிமேல் கர்நாடக தமிழர்களை பற்றி நாங்கள் பேச போவதில்லை காரணம் எங்களுக்கு ராம்குமார் தரற்கொலைப் பற்றி பேசவே நேரம் இருக்காது # இப்படிக்கு டமிலர்கள்


தமிழகத்தில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது என்று எதிர்கட்சிகள் இனிமேலாவது குறை சொல்லாமல் இருக்கவேண்டும் #ராம்குமார் சிறையில் உள்ள மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை

ராம்குமார் மரணம் குறித்து உயர்மட்ட நீதி விசாரணை வேண்டும். #கொலை செய்ய உத்தரவு இட்டவர்களுக்கு நீதி விசாரணையை எப்படி முடிக்க வேண்டும் என்று தெரியதா என்ன? போங்க்ய்யா போய் வேற வேலையைப் போய் பாருங்க

அம்மா சசிகலா புஷ்பா நீ எங்க தங்கி இருந்தாலும் வயர்  இல்லாத ரூமில் தங்கும்மா இல்லைன்னா நீயும் ராம்குமார் மாதிரி வயரை கடித்து தற்கொலைன்னு செய்தி வர சான்ஸ் அதிகம்மா

எல்லையில செத்த 17 பேருக்கு தமிழக அரசியல் கட்சிகள் கூட இத்தனை பேட்டி கொடுக்கல ஆனால ஜெயில்ல செத்த ஒரு பையனுக்கு இவ்வளவு ஒப்பாரி

ராம்குமார் பல்லால் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீஸுக்கு எப்படி தெரியும். அவன் தற்கொலை செய்வதை அவர்கள் பார்த்து கொண்டிருந்தார்களா என்ன?



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. BRO AN EXAGGERATED REPORT TAMILNADU POLICE HAS NO NEED TO ELIMINATE RAMKUMAR FROM THE WORLD YOU CAN CALL IT AN INEFFICIENT INCOMPETENT CORRUPT POLICE ,,,,,,,

    ReplyDelete
  2. புதிய செய்தியாக இருக்கிறதே...இன்னும் பார்க்கவில்லை உங்கள் செய்தி பார்த்துத்தான் தெரிந்தது...ம்ம்ந்டக்கலாம் தான் நீங்கள் இங்கு சொல்லியிருப்பது போல்..

    ReplyDelete
  3. மர்மம் நிறைந்திருகிறது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.