Friday, September 30, 2016



அரசியலில்  செல்வாக்கு பெற மோடிமட்டுமல்ல உலகின் பலதலைவர்களும் செய்வது இதுதான்


பாகிஸ்தான் ராணுவமும் சீன ராணுவமும் நம் நாட்டு எல்லையில் வந்து அடிக்கடி கபடி ஆடிட்டு போவதை போலத்தான் இந்திய ராணுவம் இப்போது பாகிஸ்தானில் அல்ல பாகிஸ்தான் நம்மிடம் இருந்து அக்கிரமித்த பகுதிக்குள் போய்விளையாடிவிட்டு வந்து இருக்கிறாங்க... இந்த ஆட்டத்திற்க்காகத்தான் மோடியும் அவரது அமைச்சரவையும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு ஒருவார காலமாக கூடி கூடி ஆலோசனை செய்து இருக்கிறார்கள்..



இந்த அட்டாக் இந்தியாவின் மானத்தை காப்பாற்ற அல்ல மோடியின் வீரத்தை பற்றி எழுப்பிய சந்தேகத்தை தீர்த்து அவரும் வீராதிவீரர்தான் என காண்பிக்க நடத்திய இந்திய ராணுவப் பயிற்சி என்று சொல்லாமே தவிர வேறு ஏதுமில்லை..

இந்த நடவடிக்கை வரும் உபி மாநில தேர்தலை மனதில் கொண்டே நடத்தி இருக்கிறார் என்பதே உண்மை.

இறுதியாக பாகிஸ்தான் மீதான போர் நடவடிக்க எடுப்பது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை. அந்த நடவடிக்கைக்கான காரணம் மோடியின் இழந்து வரும் செல்வாக்கை மீட்பதற்காக இருக்கக்கூடாது. அது இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்ற எடுத்த  முடிவாக இருக்க வேண்டும்.


டிஸ்கி : இந்தியாவின் கெளரவத்திற்காக அல்ல மோடியின் கெளரவத்தை காப்பாற்ற நடத்திய அட்டாக்கினாலவது நமது எதிரியை சுட்டு வீழ்த்தி அவரகள் இருந்த பகுதியை அழித்த நமது ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

மனதிற்கு சந்தோஷம் தந்த ஒரு காணொளி



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. வாலாட்டிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானை அடித்திருப்பதில் அரசியல் என்பதை விட நம் இந்திய ராணுவத்தைப் போற்றுவோம்...

    ReplyDelete
    Replies
    1. அடிச்சது பாகிஸ்தான் ல ன்னா சரிதான். ஆனா இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் ல.

      Delete
  2. bro this is mot the time to critizise our prime minister

    ReplyDelete
    Replies

    1. சகோ மோடி நம்ம பிரதமர் இல்லை உங்க பிரதமர் எங்க தலைவர் இப்போதைக்கு ஒபாமா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.