Monday, September 12, 2016



10 மில்லியன் பார்வைகளை பெற்று வளர்ந்து வரும் தமிழ் வலைத்தளம்


எனது தளமான அவர்கள்...உண்மைகள் என்ற தளம் 6 ஆம் ஆண்டை தாண்டி நடை போட்டு வருகின்றது.  இது மிக பிரபலமான தளம் இல்லை என்ற போதிலும் இந்த தளத்தில் வந்த ஹிட்டுக்கள் என்ற பார்வையின் அளவு மூன்று மில்லியன்களை தொடவிருக்கின்றது. இங்கு வரும் செய்திகளை நான் கூகுல் ப்ளஸில் சிறிய சிறிய செய்திகளாக இட்டு வருகிறேன். அங்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டிவிட்டது என்று கூகுல் ப்ளஸின் கணக்கு  சொல்லுகிறது. இதை எனது பதிவுகளுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு என்று எடுத்து சிறிது மகிழ்ச்சி அடைகிறேன். அந்த மகிழ்ச்சியை எனக்கு தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..பெரிய ஜாம்பவான் பதிவர்களுக்கிடையே நானும் சிறு மீனைப் போல உலாவி வருவதிலும் ஒரு சிரு மகிழ்ச்சிதான்


சாதாரண பதிவராக இருந்து பல செய்திகளை பகிர்ந்து வரும் என்னை பிரபல பதிவராக நீங்கள் என்னை ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்



அன்புடன்
மதுரைதமிழன்

26 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே... நீங்கள் ஒரு பிரபல பதிவரே .. மில்லியன் கணக்கில் வருவோரை வைத்தே அது தெரிகின்றது.

    வெற்றி நடையை தொடர்ந்து போடுங்கள்..

    ReplyDelete
    Replies

    1. அப்ப நான் உங்கள் ஊருக்கு வந்தால் கட் அவுட் வைப்பீங்களா? கட்சி ஆரம்பிசிடலாமா? நீங்கதான் பொருளார். பொருளாளர் என்றால் கணக்கு வழக்கு பார்ப்பவர் என்று நினைத்து கொள்ளாதீர்கள் கட்சி வளர பொருள் உதவி தருபவரைத்தான் நான் பொருளாளர் என அழைக்கிறேன்..... என்ன எதுக்கு இப்ப இப்படி ஒட்டம் எடுக்குகிறீர்கள்

      Delete
  2. உங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வால் ஏராளமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறீர்கள்.வாழ்த்துகள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. முரளிதரன் உங்களின் ஆதரவிற்கும் பாராட்டிற்கும் நன்றி.. ஆமாம் நீங்க எழுதாம ஏன் ஸ்டிரைக் செய்கீறீர்கள்

      Delete
  3. Replies
    1. நன்றி அம்மா என்று சொன்னால் எனக்கு அவ்வளவு வயசாச்சா என்று சண்டைக்கு வருவீர்கள் அதனால் மிக நன்றி அபயா அருணா என்று சொல்லி செல்லுகிறேன்

      Delete
  4. அன்றாட நிகழ்வுகள் குறித்து
    ஒரு தீர்க்கமானப் பார்வை
    நேர்மையான உண்மையான
    நகைச்சுவையுடன் கூடிய
    வரம்பு மீறாத விமர்சனம்
    தொய்வு இன்றி அன்றாடம்
    கருத்தைப் பதிவு செய்யும் வேகம்
    இவைகள் எல்லாம் தங்கள்
    பக்கப் பார்வை தமிழ்வலையுலகில்
    முதன்மையாய் இருக்கச் சாத்தியமாக்கி இருக்கிறது
    சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார் மிகவும் நன்றி. ஒருவரை பாராட்டுவது என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் அடுத்தவரை எப்படி தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும்கலையை அறிந்தவர் நீங்கள். அதனால் உங்களை வலைபதிவர்களின் 'குரு' என அழைப்பதில் சந்தோஷம் கொள்கிறோம் மீண்டும் எனது நன்றிகள்

      Delete
  5. மனமார்ந்த வாழ்த்துகள்...
    மதுரைத் தமிழா...

    ReplyDelete
  6. சாதிச்சவங்க அடக்கமாத்தான் இருப்பாங்களாம் -உங்கள மாதிரி.
    நா சொல்லலிங்க, நம்ம வள்ளுவர் சொன்னார்.
    பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து - குறள்.
    வாழ்த்துகள், தொடருங்கள், தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னும் சாதிக்கவே இல்லை அதனாலதான் இப்படி சொல்லி பீத்திக்றேன் சாதிக்கும் உங்களை போல உள்ளவர்கள்தான் மிகவும் அடக்கமாக இருக்கிறீர்கள்

      Delete
    2. இத..இத..இதத்தான் அடக்கம்னு சொல்வாங்க சாமியோவ்...!

      Delete
    3. உங்களிடம் இருந்துதான் அடக்கத்தை கற்று கொண்டேன் ஆகையால் இனிவரும் நாட்களில் உங்களை போல அடக்கமாக இருக்க கற்றுகொள்கிறேன் தலைவரே

      Delete
  7. பத்து மில்லியன் அடேங்கப்பா , வாழ்த்துக்கள் தலைவா .

    ReplyDelete
    Replies
    1. கிழக்கு சீமைக்கும் மேற்கு சீமைக்கும் நீங்கள்தான் என்று தலைவர்... அதனால வாழ்த்தை மட்டும் ஏற்றுக் கொண்டு தலைவர் பதவியை நீங்களே தொடருங்கள் நன்றி தலைவரே

      Delete
  8. தினசரி ஒரு பதிவுக்கே நாக்கு தள்ளி விடுகிறது !கணக்கு வழக்கு இல்லாமல் பதிவுகளை துணிவுடன் எழுதும் உங்கள் கடமை உணர்ச்சிக்கு என் ராயல் சல்யூட்!

    ReplyDelete
    Replies
    1. பதிவர்களிடையே நகைச்சுவை கிங்காக திகழும் உங்களுடன் போட்டியிட முடியுமா என்ன? அமெரிக்கா எனக்கு வழங்கி இருக்கும் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி எழுதி வருகிறேன் இந்த சுதந்திரம் எல்லோருக்கும் கிடைத்தாலும் அதுமட்டுமல்ல யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தாலும் இப்படி துணிச்சலாக எல்லோராலும் எழுத முடியும்

      Delete
  9. வாழ்த்துகள் மதுரைத் தமிழன்! நீங்கள் எப்போதுமே பிரபல பதிவர்தானே அதில் என்ன சந்தேகம்?!!!பல்சுவைப் பதிவுகளில், நகைச்சுவை, நையாண்டி, துணிச்சல் என்று கலக்கும் உங்களுக்கு இத்தனைப் பார்வை கிடைத்திருப்பது வியப்பே இல்லை!!!!!! இன்னும் அதிகம் அதிகம் பெற்று எப்போதும் பிரபல, எல்லோர் மனதிலும் இடம் பெற்ற செல்லப் பதிவராக வலம் வர மனமார்ந்த வாழ்த்துகள்!!

    கீதா: இது இருவரும் சேர்ந்து சொன்னதாக்கும்....நீங்க பாட்டுக்கு துளசியமட்டும் கண்டுகிட்டுப்போகக் கூடாது ஆமாம் சொல்லிப்புட்டேன்...!!!

    ReplyDelete
    Replies
    1. நான் பூரிக்கட்டை பிரபலம் என்றுதான் நினைத்து இருந்தேன் ஆனால் இப்பபொழுதுதான் நான் உங்கள் மனதில் பிரபலமாக தெரிந்திருக்கிறேன் என்று... நன்றி கீதாம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

      Delete
  10. வாழ்த்துக்கள் நண்பரே, தங்களின் அடக்கமும், பதிவில் இழையோடும் நகைச்சுவையும், அன்றைய செய்திகளை அன்றே பதிவாக தரும் வேகமும் இன்னும் பல உயரங்களுக்கு தங்களை கொண்டு செல்லும்.
    சிகரம் தொட வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. எனது அடக்கத்திற்கு காரணம் என் மனைவி தன் கையில் வைத்திருக்கும் பூரிக்கட்டைதான் காரணம் என்பதை பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். சிகரத்தை தொட விரும்பவில்லை காரணம் தொட்டுவிட்டால் அதன் பின் வாழ்க்கையில் சுவராஸ்யமாக இருக்காது தொடாமல் இருக்கும் வரைதான் சுவராஸ்யமாக இருக்கும் அதனால் தொட முடியாத சிகரத்தை நோக்கி என் பயணம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்

      Delete
  11. வாழ்த்துக்கள்! இன்னும் பல மில்லியன்களை தொட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பல மில்லியன்களை பெற முயற்சி செய்கிறேன்

      Delete
  12. மனம் நிறைந்த வாழ்த்துகள் மதுரைத் தமிழன். நீங்கள் பிரபல பதிவர் தான் - இதில் சந்தேகமே வேண்டாம்......

    தொடர்ந்து பதிவுகள் எழுதி மேலும் புகழ் பெற வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. போங்க வெங்க்ட் நீங்க நல்லாவே கிண்டல் பண்ணுறீங்க....பிரபலமானவர் என்றால் உங்களை போல தரமாக எழுதி மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பவர்கள்தான் பிரபலங்கள் நானெல்லாம் லோக்கல் ரெளடி போல சவுண்ட்தான் பெரிசாக இருக்கும் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.