Saturday, August 6, 2016



சென்னையில் மிக குறைந்த  கட்டணத்தில்  சிறந்த ஓட்டல் மேலாண்மை படிப்பு


சென்னையில் மிக குறைந்த  கட்டணத்தில்  சிறந்த ஓட்டல் மேலாண்மை படிப்பை  தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது இதற்காக விண்ணப்பிக்க வேண்டியு கால அவகாசாம் மிக குறைந்த அளவில் இருப்பாதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் 316 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் விருப்பம் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்



இது பற்றி  தினமலரில் வந்தசெய்தி பலருக்கும் பயன்படும் என்பதால் இங்கு வெளியிடுகிறேன்


----------------------------

தனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், 'ஓட்டல் மேனேஜ்மென்ட்' படிப்பை, 185 ரூபாய் கட்டணத்தில், அரசு ஐ.டி..,யில் படிக்கலாம். 45 வயது வரை யாரும் சேரலாம் என, அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள, அரசு ஐ.டி..,யில் மட்டும், ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில், இதற்கு, 3 லட்சம் ரூபாய் வரை, கட்டணம். ஆனால், 185 ரூபாய் கட்டணத்தில், இங்கு படிக்கலாம்.

இதுகுறித்து, கிண்டி, அரசு ஐ.டி.., முதல்வர் ஹேமலதா கூறியதாவது:

ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு இருந்த, 125 இடங்கள், 316 இடங்களாக உயர்ந்துள்ளன. ஓராண்டு படிப்பில், 9,000 ரூபாய் சம்பளத்தில், 'அப்ரன்டிஸ்' என்ற, பணியிடை பயிற்சி தரப்படும். கட்டணம், 185 ரூபாய்தான். மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்தும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்கு உட்பட்ட, ஆண், பெண் சேரலாம்.

இங்கு பயிற்சி பெற்ற, 326 பேர், பிரபல ஓட்டல்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இலவச உணவு, விடுதி வசதி உண்டு. இதுபோன்று, 16 விதமான தொழில் பயிற்சிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆக., 29 முதல், 31 வரை, வடசென்னை ஐ.டி..,யில் நடக்க உள்ளது.

இதற்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம், ஆக., 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94449 02522, 98411 12566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நானும் இதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ள தகவல்களை பலரும் பகிரவேண்டும் அப்போதுதான் யாராவது அதை படித்துவிட்டு பயன் பெறுவார்கள்

      Delete
  2. பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ள தகவல்களை பலரும் பகிரவேண்டும் அப்போதுதான் யாராவது அதை படித்துவிட்டு பயன் பெறுவார்கள்

      Delete
  3. நல்ல பயனுள்ள தகவல். குறித்துக் கொண்டுவிட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கஷ்டப்படுவர்களுக்கும் துளசி சாரின் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கும் இதை தெரியப்படுத்தலாம்

      Delete
  4. பயனுள்ள தகவல்... நானும் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.