Friday, May 6, 2016



படித்ததில் என் மனம் கவர்ந்த அட்டகாசமான கவிதைகள்

திரு.செல்வகுமார்  எழுதிய கவிதைகளில் என் மனம் கவர்ந்த சிலவற்றை இங்கு  தந்து இருக்கிறேன் நீங்கள் படித்து மகிழ.....இதை அவரின் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன்..

அனுமதி அளித்த செல்வ குமாருக்கு என் மனம் மார்ந்த நன்றிகள்

 வலைத்தளத்தில் இவர் எழுதும் கடிதமும் மிக அருமையாக இருக்க்கும்
http://naanselva.blogspot.com/




எல்லாமே
இலவசமாய்..
அவர்களுக்குத்
தெரியும்...
வாக்கின்
விலை

உன்
தமிழக
வரைபடத்தில்
கோடுகளாய்
தெரிவது
நதிகள் தானே
என்கிறான்...
லாரிகளின்
தடம்
என்றேன்.
பாலாறும்
தேனாறும்
ஓடுமாமே
என்கிறான்..
செம்பரம்பாக்க நீர்
ஓடியதை
எப்படி
மறக்க
என்றேன்.
தேர்தல்
அறிக்கைகளில்
தெரிவது
என்ன என்கிறான்.
அவர்களின்
தேவை
என்கிறேன்.

தோழர்
என்பவர்
யாரெனக்கேட்டான்.
தப்புசெய்தாலும்...
கூடவே
இருப்பவர்
என்றேன்.
வாக்களிக்க
பணம்
தருவார்களாமே..
என்கிறான்.
கொடுத்து
வைப்பார்கள்..
என்றேன்.
கொள்கை
என்பது
உயிராமே...
அவர்களுக்கு?
ஆச்சர்யப்படுகிறான்.
எழுத்துப்பிழை
என்றேன்.
கூட்டணி
என்பது
எதற்கெனக்
கேட்டான்..
பிரித்துக்கொள்ள
என்றேன்.
சிலரின்
பேச்சுகளும்
செய்கைகளும்
பார்ப்பதற்கு
கேலியாகவும்
பாவமே..
எனத்தோன்றுகிறது..
அவர்களும்
அப்படித்தான்
நினைக்கிறார்கள்
நம்மை

பெருந்தலைவர்களின்
பிரச்சார வாகனத்தில்..
நான்
வேட்பாளர்களைப்
பார்க்கிறேன்..
இந்தப்பூனைகள்
தான்?.


காசுவாங்கி வாக்களிக்காதே
என
எங்களிடம் சொல்லுவதை..
கொடுப்பவர்களிடம்
அழுத்தமாய்
சொன்னால்
என்ன?
அறிவுரை கேட்பதும்..
தவறிழைப்பதும்
நாங்கள் மட்டும் தானா

இனி அவளுடன்
பேசவே கூடாதென.
சபதமெடுத்ததை,
பலமுறை
சொல்லிவிட்டேன்
அவளிடமே.


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. ஒரு குறள் உண்டு தமிழா...

    " ஈன்ற பொழுதில்" எனத்துவங்கும்..

    அதே...அதே.....

    நன்றி....

    ReplyDelete
  2. நல்ல கவிதைகளை அறிமுகம் செய்து ஊக்கப்படுத்தியுள்ளமைக்கு நன்றி சார்...

    ReplyDelete
  3. நன்றியோடு, மூன்று செய்திகள் சொல்லத் தோன்றுகிறது நண்பரே!
    (1) 2012இல் என்னை இப்படித்தான் அறிமுகப் படுத்தினீர்கள்... எனது ஆரம்பகால எழுத்துகளை எடுத்துப் போட்டு இப்படித்தான் அறிமுகம் செய்தீர்கள். அப்போதுதான் ஆயிரக்கணக்கில் என் பக்கங்கள் வாசிக்கப்பட்டன.
    (2) காலம் அறிந்து கூவும் சேவலைக் கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
    (3) பதிவர் விழாப் போட்டியின் கடுமையான விதிமுறைகளை அறியாத சிலர் எனது நண்பர் என்பதற்காக செல்வாவுக்கு முதல்பரிசு தரப்பட்டதாகச் சொல்லப்பட்ட போது அவரும் நானும் சேர்ந்தே காயப்பட்டோம். உண்மையை உலகம் விரைவில் அறியும் என்று மௌனமாகவே இருந்தோம். விழாவின் சிறப்பு விருந்தினர் துணைவேந்தர் சுப்பையா அவர்கள், செல்வாவையும் அறியாமல் அவரது கவிதையே பரிசுபெற்றது என்பதையும் அறியாமலே அந்தக் கவிதையை எடுத்தெடுத்துப் புகழ்ந்து பேச, அருகில் இருந்த நான் இவர்தான் அந்தக் கவிஞர் எனச் சொல்ல, வியந்து போனார் துணைவேந்தர் அரங்கமே அதிர்ந்து போனது . விழாவுக்கு வந்தவர்கள் இதை அறிவார்கள்.. அப்போது கொஞ்சம் ஆறுதலானோம். இப்போது மிகவும் மகிழ்கிறேன். நண்பரே! மிக்க நன்றி. இதுபோலும் அறிமுகங்களை நீங்கள் தொடரவேண்டுமாய் இளைய எழுத்தாளர்க்காக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், வணக்கம்.

    ReplyDelete
  4. அருமையான கவிதை அறிமுகம் ....
    நன்றி நண்பரே...!

    ReplyDelete
  5. அருமையான கவிதையை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. வாவ்!அசத்தல்ப்பா!

    செல்வா சார் கவிதைகள் அனைத்தும் அருமை. அரசியல் கவிதைகளில் ஏதோ பொடியும் பொதுக்கவிதைகளில் வெடியும் வைத்து அன்றாட நடவடிக்கைகளே கவிதைகளாய் நான்கே வரிகளில் அசத்தல் கருத்துக்களை சொல்வதில் அவருக்கு நிகர் அவர் தான். பாராட்டுகள் அவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும்!

    ReplyDelete
  7. அறிமுகப்படுத்தப்பட்டவரை நாங்கள் அறிவோம். அவரது கவிதைகளையும் அறிவோம். இருந்தாலும் தாங்கள் பகிர்ந்துள்ள விதம் சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுகள் உங்களுக்கும், அவருக்கும்.

    ReplyDelete
  8. செல்வகுமார் அண்ணாவின் கவிதைகள் அனைத்தும் அருமை...
    முகநூலில் வாசித்திருக்கிறேன்...

    ReplyDelete
  9. அருமையான கவிதைகளின் அறிமுகம் . நன்றி

    ReplyDelete
  10. குட்டிக் கவிதைகள் என்றாலும் மனதில் நச்சென ஒட்டிக்கொள்ளும் கவிதைகள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.