Thursday, May 5, 2016



(எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம் ) தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது  தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்க்க வேண்டிய பதிவு 


கலைஞர் ஜெயலலிதா மற்ற தலைவர்களும் பார்க்கபடிக்க வேண்டியது இது. என் மனதை மிகவும் பாதித்த வீடியோ க்ளிப்.  மனது மட்டுமல்ல இதயமும் இந்த வீடியோ க்ளிப்பை பார்க்கும் போதெல்லாம்  இன்னும் அழுது கொண்டிருக்கிறது

தன் சுயநலத்தை மட்டுமே மனதில் கொண்டு  தாய் நாட்டை சுரண்டும் மனிதர்களை சரித்திரங்களில் மட்டும் நாம் பார்க்கவில்லை .இப்போது நாம் கண் எதிரிலேயே காண்கிறோம். வானத்தில் இருக்கும் நட்சதிரங்களை போல லட்சமாய் கொட்டிக் கிடக்கும் சுயநலவாதிகள் மத்தியில் லஜ்ஜை இல்லா லட்சிய பொதுநல வாதிகள் வளர்வது அபூர்வம்..அப்படிபட்ட சுயநலமில்லாத  ஒருவரின் வாழ்க்கை சம்பவமே கிழேயுள்ள வீடியோ க்ளிப். இதை இந்த கால மனிதர்களும், தங்களை மக்களின் தலைவன் என்று சொல்பவனும் ஒரு தடைவையாவது சுய அறிவோடு இதை பார்க்க வேண்டுகிறேன்.



இதை பார்த்த பின் உங்களின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணிர் வருமானால் இன்னும் உங்கள் இதயம் முற்றிலும் சுயநலத்தால் பாதிக்கபடவில்லை என்று கருதலாம்.

இனிவரும் காலத்திலாவது சுயநல அரசியல் ஜாம்பவான்களின் ஆசைப் பேச்சுக்களை நம்பி இளைஞர்களான நாம் சோரம் போகாமல், சிந்தித்து, செயற்பட்டு சமுதாயத்தின் விடிவுக்காக சுயநலமில்லாமல் பொதுநலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்


அன்புடன்
மதுரைத்தமிழன்
இதை படிக்காம விட்டிருந்தீங்கள் என்றால் கண்டிப்பாக படித்துவிட்டு செல்லுங்கள்


3 comments:

  1. கொடூரம். பார்க்கவும் மனமில்லாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல் இறுதிப் பகுதியைப் பார்த்தேன்.

    ReplyDelete
  2. மனதைத் தொட்ட காணொளி.

    ReplyDelete
  3. இறுதி பகுதியை பார்த்ததும் என் கண்ணில் வடியும் கண்ணீரை என்னால் தடுக்க முடியவில்லை...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.