Tuesday, April 5, 2016



avargal unmaigal

அதிருப்தி அ.தி.மு.க.,வினர்: வலை விரிக்கிறது தி.மு.க., வலையில் விழுவார்களா?



அதிருப்தி அ.தி.மு.க.,வினர்: வலை விரிக்கிறது தி.மு.க., இது தினமலரில் வந்த செய்தி


இந்த செய்தியை எப்படி கலாய்க்கலாம் என்பதுதான் இந்த பதிவு;




1. அதிருப்தி அ.தி.மு.க.,வினர்: வலை விரிக்கிறது தி.மு.க., அப்ப திமுக சார்பில் போட்டியிட திமுகவில் வேட்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லையா என்ன?


2. இது வரை அதிமுக தலைமையில் இருந்து தொண்டர்கள் வரை மக்களுக்கு சேவை செய்யாத சோம்பேறிகள் சுயநலவாதிகள் ஊழல் கரை படிந்தவர்கள் என்று காறி துப்பியவர்களை வலை விரித்து பிடிப்பதன் மூலம் தாங்களும் அப்படியே என்றுதான் இந்த திமுக தலைமை நினைக்கிறதா என்ன?



3. இப்படி அதிமுகவில் இருந்து போகும் சிறு தலைவர்களை அம்மாதான் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? அப்ப்டி போகிறவர்கள் செய்த தவறுகளை சொல்லி அதனால்தான் அவர்களுக்கு நான் சீட்டு கொடுக்கவில்லை அவர்கள் தண்டிக்கபட வேண்டியவர்கள் அப்படி தவறுகளை செய்தவர்களை அரவனைக்கதான் திமுக விரும்புகிறாதா என்று ஒரே போடாக போட்டுவிடுவார்கள்தானே?

4. அதிமுகவில் கடந்த ஐந்தாண்டுகலாம் தாங்கள் சம்பாதித்ததை அப்படி எளிதாக தூக்கி திமுகவிடம் கொடுத்துவிட்டு தெருவில் போக யார்தான் விரும்புவார்கள். அவர்கள் அதிருப்தியாக இருந்தாலும் அதிமுகாவிலே அமைதியாக இருந்து வேலை செய்தால் அதிமுக நிச்சய்ம் ஜெயித்து வரும் போது அவர்களுக்கு வேறு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்க சான்ஸஸ் அதிகம் ஆனால் அதைவிட்டுவிட்டு திமுகவில் சேர எந்தமடையனாவது முயல்வானா?


5. அதிருப்தி அதிமுகவினருக்கு சீட்டு கொடுத்து அவர்களை கோடி கோடியாக செலவழிக்க வைப்பது ஸ்டாலின் திட்டம். ஜெயித்தால் தனது செல்வாக்கால் இவர்கள் வென்றார்க்ள் என்று சொல்லுவார் அது அவருக்கு லாபம் தோற்றால் பணம் செலவழித்தவர்களுக்கு நஷ்டம் ஸ்டாலினுக்கு அல்லவே



அன்புடன்

மதுரைத்தமிழன்

1 comments:

  1. ஹலோ... இப்படியெல்லாம் நீங்க கலாய்க்க ஆரம்பிச்சா கார்ட்டூன் போடுற எங்க நிலைமை என்ன ஆகுறது. நீங்க நகைச்சுவை பதிவுக்கே போங்க..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.