Thursday, April 28, 2016

அமெரிக்காவில் இந்த கேக்குதான் இன்றைக்கு மிகவும் பாப்புலரான கேக்கு

தமிழர்கள் இன்னும் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் அதனால்தான் அவர்கள் இன்னும் ஃப்ளாக் ஃபாரஸ்ட் & ரெட் வெல்வெட் என்று அமெரிக்காவில் பெயர் போயே போன கேக்கை பார்த்துவிட்டு ஆஹா ஒகோண்னு புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் இன்றைய தேதியில்  இந்த கேக்குதான் மிக பாப்புலராக இருக்கிறது.

என்ன இதை எல்லாம் உங்களால் சாப்பிட முடியாது ஆனால் என்ன இங்கே பார்த்து ரசித்துவிட்டு போங்கள்..
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இந்த பதிவு நகைச்சுவைக்காக போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த பதிவை நாங்கள் பார்க்கவில்லை என்ற கருத்தை பதிவின் இறுதியில் பதிந்துவிட்டு செல்லுங்கள்.

நோ அட்வைஸ் ப்ளீஸ்

13 comments:

  1. இந்த பதிவை நாங்கள் பார்க்கவில்லை

    ReplyDelete
    Replies

    1. இந்த பதிவை பார்க்கவில்லை என்று நீங்கள் சொல்லுவதைவிட இந்த கேக் எனக்கு பிடிக்காடு என்று சொல்லி சென்று இருக்கலாம். ஆனால் இந்த பதிவை நான் பார்க்கவில்லை என்று நீங்கள் சொன்னதை உங்கள் வீட்டுக்காரம்மா பார்த்துவிட்டால் உங்கள் வீட்டிலும் பூரிக்கட்டை பறக்க ஆரம்பிக்கும் பாவம் நீங்கள் இப்படி வந்து மாட்டிக்கிட்டீங்க

      Delete
  2. இதுதான் நேற்று முக நூலில் ஓடிக் கொண்டிருந்ததா... ஐயே....

    ReplyDelete
    Replies

    1. பலரும் கேக் பற்றி ஸ்டேடஸ் போட்டு இருந்தார்கள் ஆனால் அது எதற்கு என்று மட்டும்தான் புரியவில்லை...ஒரு வேளை கேக் டே என்று புதுசாக கொண்டாடுகிறார்களோ என்று நினைத்தேன் அதன்பின்னர்தான் நண்பர ஆவியிடம் கேட்டேன் அவர்தான் பிரச்சனை இதுதான் என்று சொன்னார். அதன்பின் தோன்றிய பதிவுதான் இது

      Delete
  3. பணத்திமிர்! அம்மணிக்கு கொடுத்தார்களாம்! அகங்காரம்! ஆணவம்!
    பணம் நிறைய செலவு செய்து சாப்பிட்டா? என்ன பெரிய பிஸ்தாவா?
    அல்பனுக்கு பவிஷு வந்தா!

    ReplyDelete
    Replies
    1. பணத்திமிர் என்று சொல்லுவதைவிட சக மனிதர்களை மதிக்க தெரியாத பெண் வடிவில் இருக்கும் பெண். அவரின் தலைவர் ஜெயாவை போலத்தான் இவரும் இருக்கிறார்

      Delete
  4. இந்த பெண்ணை மன்னித்துவிடுங்கள். இப்படி பலர் உலாவுகிறார்கள். இது ஒரு வகை மனப் பிரள்வு.
    சிலசமயம், அந்த நண்பர் இதைப் படித்தால் எனும் அடிப்படைப் பண்பே அற்ற, இதைப் பற்றி அலட்டக் கூடாது.
    அம்மணிகளை இப்படிக் கேவலமாக நடத்துவதால் தான், அவர்களைப் பழச்சாற்றில் சிறுநீர் கலக்க வைக்கிறது. நேற்று இந்த காணோளி முகநூலில் நடமாடியதது. அது நடந்தது மத்திய கிழக்கில்.

    ReplyDelete
    Replies
    1. இவர் தன் குழந்தையை எந்த லட்சணத்தில் வளர்த்து கொண்டிருப்பார். பாவம் தவறான முறையில் வளரும் அந்த குழந்தை

      Delete
  5. பிரெட் இல்லாவிட்டால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று சொன்ன பிரான்ஸ் நாட்டு அரசப் பரம்பரையாக இருப்பார் போல. ரொம்ப ஓவர்.

    நீங்கள் போட்ட கேக் படம் பார்க்கவில்லை. நெசமாத்தான்!

    ReplyDelete
  6. உங்க பதிவைப் பார்த்து எரிச்சல் வந்தால் பக்கத்துல போட்டிருக்கிற செய்தியும் (யார் வீட்டுக்கு விருந்தாளியாக....) அதைவிட எரிச்சல் உண்டாக்குது. விருந்தாளியாக வருகிறவர், கொண்டுவரவேண்டும் என்று அவசியம் கிடையாது, ஆனால் கொண்டுவந்தால் அதை மதிக்கும் பண்பாடு வேண்டாமா? இதை "பணத் திமிர்" என்று சொன்னால், நம்மளை ஒருமாதிரிப் பார்த்தாலும் ஆச்சரியமில்லை.

    ReplyDelete
  7. பாவம் அந்த மனிதர். அன்புடன் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்ததை அவமானப்படுத்தி...அதுவே மோசம் என்றால் அதை வேறு இப்படியா பப்ளிக்கா போடுவாங்க? அந்த மனிதர் இதைப் பார்த்தால் எப்படி வருந்துவார். மனிதநேயம் அற்ற பெண்மணி,,,,பெண் குழந்தை பாவம்...
    தமிழா இப்படித்தான் இங்கு நிறைய பேர் இருக்கின்றார்கள். அதில் பெருமை வேறு பேசுவார்கள்.

    ReplyDelete
  8. பாவம் அந்த மனிதர். அன்புடன் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்ததை அவமானப்படுத்தி...அதுவே மோசம் என்றால் அதை வேறு இப்படியா பப்ளிக்கா போடுவாங்க? அந்த மனிதர் இதைப் பார்த்தால் எப்படி வருந்துவார். மனிதநேயம் அற்ற பெண்மணி,,,,பெண் குழந்தை பாவம்...

    கீதா
    தமிழா இப்படித்தான் இங்கு நிறைய பேர் இருக்கின்றார்கள். அதில் பெருமை வேறு பேசுவார்கள்.

    ReplyDelete
  9. இந்தக் கேக்கும் நல்லாத்தானே இருக்கு....
    அந்த அம்மாவுக்கு இந்தக் கேக் வாங்கிக் கொடுத்தா வேலைக்காரிக்கு பரிசாக கொடுக்காதுல்ல...
    தானே சாப்பிட்டுக்கும்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.