Sunday, February 21, 2016



இன்று என்னை அதிரவைத்த மரணச் செய்தி(கண்ணீர் அஞ்சலி.)

இன்று எனது தோழியைப் போல பழகும் சகோதரி ஜோஸபின்பாபா (வலைத்தள பதிவர்) அவர்களின் கணவர் மரணித்துவிட்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ந்துபோனேன். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை. பேஸ்புக்கில் மூலம் இதை அறிந்த நான் அவர்களுக்கு வேண்டாதவர் யாரோதான் இப்படி வதந்தியை கிளப்பி இருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால்  அது வதந்தி அல்ல உண்மைதான் என்று அறிந்துபோது என்  உள்ளம் உண்மையிலே அதிர்ந்தது.



என் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகக் கருதுகிறேன். சகோ ஜோஸபின்பாபாவிற்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்ல? பலவித பிரச்சனைகள் மற்றும் போரட்டங்களுக்கிடையே சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இருந்த இவருக்கு இவர் கணவர் மிக மிக சப்போர்ட்டாக இருந்து உதவி செய்தவர்.அப்படிபட்ட மனிதர் இன்று இல்லையே இன்று நினைக்கும் போது மனம்படும் வேதனைக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது.

ஜோஸபின்பாபா இந்த இழப்பு உங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். என் மனதில் ஏற்படும் வேதனைகளை வார்தைகளால் சொல்ல இயலவில்லை. உங்களுக்கும் உங்களின் பிள்ளைகள் மற்றும்

குடும்பத்தாருக்கும் இறைவன் தான் இதை தாங்கும் சக்தியையும் அதில் இருந்து மீளும் பலத்தையும் கொடுக்கவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.


சில வாரங்களுக்கு முன்பு இவர் எழுதிய நெருங்கிய மரணம் தரும் நெருக்கடி! என்ற பதிவை படித்து உள்ளம் நெகிழ்ந்து போனேன். இப்படி தனது மாணவர்களுக்கு நெருக்கடி சமயத்தில் அவர்களின் இல்லம் சென்று ஆறுதல் அளித்த சகோவிற்கு இப்படி ஒரு துயரம் சிறிதும் ஏற்படும் என கனவில் கூட நினைக்காத போது இன்று அறிந்த செய்தி என்னை மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது 

.

மிக வேதனையுடன்
மதுரைத்தமிழன்
-------------------------

Posted by J P Josephine Baba (பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/thalir.mathi  )


கடந்த நாலு மாதங்களில் என் மூன்று மாணவர்களின் பெற்றோர்கள் நோய் வாய்ப்பட்டும், எதிர்பாராத விதமாகவும் இறந்து விட்டனர்.  குழந்தைகள் எல்லாவகையிலும் தன் பெற்றோரை சார்ந்து இருக்கும் வேளையில் அவர்கள் பெற்றோரை இழப்பது மாபெரும் துயரே.



ஒரு மாணவியின் தகப்பனாரே கவனித்துள்ளேன். தினம் தனது இருசக்கர வாகனத்தில் வந்து தன் மகளை கல்லூரியில்  விட்டு சென்று அழைத்து செல்பவர்.   மதிப்பெண் சாற்றிதழ் பெற்று செல்வதுடன்  மகள் விடையத்தில் மிகவும் அக்கறையுள்ள பொறுப்புள்ள தகப்பனார். மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி நம்பவே இயலவில்லை. அவளை சந்திக்க சென்ற போது  நண்பர்கள் உறவினர்கள் சூழ பாதுகாப்பான சூழலில் இருந்தால் கூட அவள் கண்ணில் இருந்து மாலை மாலையாக வீழ்ந்த கண்ணீர் என்னை வதைத்தது. அதன் பாதிப்பில் இருந்து அவர் குடும்பம் மீண்டு வர ஒரு மாதம் பிடித்தது. 

ஒரு மாணவர் மிகவும் அமைதியானவர், கொடுக்கும் வீட்டு பாடங்களை மறக்காது செய்து வருபவர் சரியாக கல்லூரி நேரம் வந்து பாடங்களை காத்திரமாக கவனித்து குறிப்புகள் எழுதி வைத்து படித்து சரியாக தேர்விலும் கலந்து கொள்பவர்.  புகைப்படகலையில் வேறு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு பெற்றாலும் அதை இயல்பாக எடுத்து கொள்ளும் அமைதியான சுபாவம். இப்படியான இயல்பாகவே பொறுப்பான மாணவர்கள் ஆசிரியர்களுக்கு என்றும் மறக்காத,  விருப்பத்திற்குரிய மாணவர்களாகவே இருபார்.  பகுதி நேரமாக பணி செய்து வரும் மாணவன் என்று அறிந்த போது அவர் பொறுப்புணர்ச்சியில் மேலும்  மதிப்பு சேர்ந்து உருவானது.

அவர் தகப்பனார் கான்சரினால் நோய் வாய்பட்டு இறந்த செய்தி அறிந்து அவர் வீடு தேடி சென்றேன்.  வீட்டின் மூலையில் நெற்றியில் ஒன்றைய் ரூபாய் நாணயத்துடன்  ஓர் கதிரையில் உட்காரும் நிலையில் வைத்திருந்தனர்.  அவர் அம்மா என் கையை பிடித்து கொண்டு கடைசி நேரம் மகனை பார்க்க தான் விரும்பினார். பார்க்காது போய் விட்டார் என்று அழுது புலம்பி கொண்டிருந்தார். என் தம்பி ரொம்ப வருத்தப்படுவான் அவனுக்கு ஆறுதல் சொல்லுங்கள் அவன் அக்கா அழுகின்றார்.  மாணவரை நோக்கினேன் அவனுக்கு ஆறுதல் கொள்ள கூட நேரமில்லை அரசு அலுவலகம் அனுப்புகின்றனர், கடைசி கிரியைக்கான துணிகளை வாங்கி வர கூறுகின்றனர். அவன் அப்போதும் தன் நிலை தவறாது எல்லா கவலைகளையும் மனதில் வைத்து கொண்டு சலனமற்று செல்வதை கேட்டு செய்து முடிக்க தயாராக நிற்கின்றார். 

வேலை, சூழல் காரணமாக நகரங்களை நோக்கி நகரும் போது இது போன்ற துன்ப சூழலில் தனித்து விடப்படும் சூழலே நகர சமூகத்தில் நிலவுகின்றது. யாரையும் கருதலுடன் நோக்கும் மனநிலை இன்று அரிதாகி வருகின்றது என்ற நினைப்பில் நானும் என் பணிக்கு செல்லும் நேரமானதால் உடன் விடை பெற்று வந்தேன்!


இரண்டு வாரம் கூட கடக்கவில்லை எங்கள் மாணவியின் தாயார் நீரழிவு நோயால் இறந்து போனார். ஏற்கனவே தகப்பானார் மூன்று வருடம் முன்பே மரித்து விட்ட நிலையில் ஒரு சகோதரி வேலைக்கு போக, இளையவர் எங்கள் துறையில் படித்து வந்துள்ளார். செய்தி கேள்விப்பட்டதும் காலை 7 மணிக்கு கிளம்பி அவர் ஊர் 8.30 மணிக்கு சென்று சேர்ந்தோம். நான் பயணித்தது எங்கள் வீட்டு காரில் அதுவே ஓர் நெடிய பயணமாக பட்டது. நம் மாணவர்கள் கல்வி கற்க என இவ்வளவு தொலைவில் இருந்து நெடிய பயணம் மேற்கொண்டு வருகின்றனரே என்பதை நினைக்கவே மலைப்பாக இருந்தது. அவர்கள் வகுப்பறையில் சிரிப்பதும் சேட்டைகள் செய்வதையும் கடந்து ஓர் கடினமான சூழலில் இருந்தே வருகின்றனர் என்பது வருந்த செய்தது.

பொதுவாக நான் மாணவர்களிடம் ஓர் குறிப்பிட்ட இடைவெளி வேண்டும் என்றே ஏற்படுத்தி கொண்டே என் பணியை செய்து வருகின்றேன். என்னை கண்டதும் என் மாணவி என் மடியில் கிடந்து அழுதது மறக்க இயலவில்லை. இளம் மகள்களுக்கு இருந்த ஒரே உறவு அம்மாவையும் இழந்ததை அவர்களால் தாங்க கொள்ள இயலாது அந்த காலை வேளையில் அவர்கள் கதறி கதறி அழுதது என் நெஞ்சயை அடைப்பது போன்று உணர்ந்தேன். “அம்மா உன்னை விட மாட்டோம் … நீ உயிரோடு வா நீ சாகவில்லை” என அழுத போது அவர் அம்மா முகம் உறங்குவது போலவே தோன்றினது. ஆஸ்பத்திரியில் நோயாளி இறந்தார் என்று அறிந்ததும் முழு பணவும் கட்டிய பின்பே உடலை கொடுத்துள்ளனர். இது போன்ற அவசரத்தேவைகளுக்கு கடன் பெற நம் சமூக சூழலில் கந்து கட்டிகாரர்கள் தவிற யாரும் முன் வருவதில்லை என்பதும் காலக்கொடுமை.


என் அம்மாவிடம் வந்து பேசின பின்பு தான் என் மனத்துயரம் ஓரளவு ஓய்ந்தது. இந்த வயதிலும் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு பொழுதும் அம்மாவின் நினைவுகள் வராது இருப்பதில்லை. இந்த குழந்தைகளை எண்ணி துயர் பீறிட்டு எழுந்தது. ஒரு புறம் தாயை பல ஆஸ்பத்திரிகளில் வைத்து வைத்தியம் செய்த கடன், படிப்பு செலவு, எல்லாம் தானாக நோக்க வேண்டிய சூழல். எல்லாம் நினைக்க நினைக்க மலைக்க வைத்தது. இருப்பினும்  என் மாணவி விரைவில் கல்லூரி வந்து சேரவேண்டும் என  மன முகந்து இறைவனை வேண்டி கொண்டிருந்தேன்.

தேவையான மன உறுதியை, நம்பிக்கையை வார்த்தையால் கொடுக்க முயல்கின்றோம் ஆனால் செயல்வடிவத்தில் உதவ கையாலாகாத நிலையில் தான் என்னை போன்ற ஆசிரியர்கள் உள்ளனர் என்பது மனதை நெருடுகின்றது. வெறும் வார்த்தைகளால் ஆறுதல் கூறி ஓர் வகையில் நாம் ஏமாற்ற தான் செய்கின்றோம் என்ற எண்ணம் வதைக்கின்றது. ஆசிரியை பணி என்பது வெறும்  புத்தகங்களோடு மட்டுமான அறிவாற்றல் சார்ந்த பணி மட்டுமல்ல  உயிருள்ள மனிதர்களிடம் நம் மனித நேயத்தை செயல்வடிவத்தில் காட்ட வேண்டிய பணி. பல பொழுதும் ஏமாற்றமே  மிஞ்சுகின்றது.

இளைஞசர்கள்  இந்த சமூகத்தை மிகவும் நேர்மறையுடன் மிகவும் நேசத்துடன் நோக்குகின்றனர். இந்த சமூகத்தை பற்றிய  உண்மையான பிரஞ்சை உண்டு.  சகமனிதன் மேல் அதீத அன்பு உண்டு என்று அவர்கள் முதல் பருவத்தில் வருப்புகள் எடுக்கும் போதே கண்டு நெகிழ்ந்துள்ளேன்.  ஆனால் சூழலின் நெருக்கடி இளம் மனிதர்களை மாற்றம் செய்து விடும் என்ற ஆதங்கமும் என்னை துன்புற செய்கின்றது. அவ்வகையில் தான் உதவி என்று நாடிய போது என் முதல் வருட மாணவர்கள் நாங்கள் உள்ளோம் என என்னுடன் சேர்ந்து   செயலாற்ற நினைத்தனர்.  அதுவெல்லாம் ஓர் கனவு என்றதும் நான் நொறுங்கி போய் விட்டேன். ஆனால் பெரியவர்கள் எவ்வளவும் வேதனைப்படலாம் நொறுங்கலாம் தளரலாம் ஆனால் இளம் தளிர்கள் வாடக்கூடாது என்று மட்டுமே என்னால் இப்போது நினைக்க முடிகிறது.

56 comments:

  1. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. ஜோஸபின் குடும்பத்திற்கு தாங்க கூடிய சக்தியை இறைவன் தரட்டும் என பிரார்த்திப்போம்

      Delete
    2. நன்றி நண்பா http://josephinetalks.blogspot.com/2016/06/blog-post_12.html

      Delete
  2. அதிர்ச்சியான செய்தி. வலைப்பதிவர் சகோதரி ஜோசபின் பாபாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜோஸபின் குடும்பத்திற்கு தாங்க கூடிய சக்தியை இறைவன் தரட்டும் என பிரார்த்திப்போம்

      Delete
  3. Replies
    1. ஜோஸபின் குடும்பத்திற்கு தாங்க கூடிய சக்தியை இறைவன் தரட்டும் என பிரார்த்திப்போம்

      Delete
  4. Replies
    1. ஜோஸபின் குடும்பத்திற்கு தாங்க கூடிய சக்தியை இறைவன் தரட்டும் என பிரார்த்திப்போம்

      Delete
    2. நன்றி வணக்கங்கள்.

      Delete
  5. ஏங்க நிஜமாவா சொல்றிங்க? எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்குங்க.. ஜோஸப்பின் ஒரு முறை எங்கிட்ட போன்ல பேசி இருக்காங்க.. ஆனா அவங்க நெம்பரை நான் சேமித்து வைக்கவில்லை.. நல்ல சிந்தனையாளர், எழுத்தாளர் அவங்க பதிவை அவ்வப்போது வாசிப்பேன். வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. என்னாலும் முதலில் இதை நம்ப முடியவில்லைதான் ஆனால் ரத்தினவேல்சார் இதை பேஸ்புக்கில் உறுதி செய்து இருந்தார். அதை பார்த்தபின்தான் நம்பினேன். இல்லையென்றால் அதை வதந்தி என்றே கருதி இருப்பேன். இப்போது கூட அது வதந்தியாக இருந்துவிடக் கூடாதா என்றுதான் என் மனம் ஏங்குகிறது.

      Delete
    2. நன்றி வணக்கங்கள்.

      Delete
  6. மனசு என்னவோ போல் இருக்கு.. இயற்கையின் கொடுமைகள் ஏன் இப்படி?

    ReplyDelete
    Replies

    1. கடந்த ஆறுமாதங்களாக மாதம் ஒரு முறை என்று தமிழகத்தில் இருந்து எனக்கு நெருக்காமானவர்களிடையே இருந்து மரண செய்திகளாகவே வந்து என் மனதை நொறுக்கி கொண்டிருக்கிறது, கடந்த வருட இறுதியில் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்ற போது மிகவும் கவலைக்குள்ளானேன் ஆனால் கவலையை வெளிக்காட்டாமலே யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே போட்டு மறுகிதான் போனேன். ஆனால் கடவுளின் ஆசியால் எல்லாம் நல்லபடியாக ஆகிவீடடது......இன்று இந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனேன்

      Delete
  7. மிகவும் வருந்துகிறேன். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. மிக சந்தோஷமான நல்ல குடும்பம் சார்......அவர் இல்லாமல் தோழியாகிய சகோ எப்படி வாழ போகிறார் என்று நினைக்கும் போது மனம் மிகவும் கஷ்டப்படுகிறது.....நாம் என்ன வார்த்தைகள் சொன்னாலும் அது அவருக்கு ஆறுதல் தராது என்பதுதான் உண்மை...காலம்தான் அவர் மனதை ஆற்றும்.

      Delete
  8. உங்களோடு நானும் அவர்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன்!காலம்தான் அவர்கள் மனப் வலியை மாற்றமுடியும்!

    ReplyDelete
    Replies
    1. மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
  9. truly sorry to hear of the loss of Josephine's husband .
    May the love of God ,family and friends comfort her during these difficult days..
    heartfelt condolences..

    ReplyDelete
    Replies
    1. மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
    2. நன்றி வணக்கங்கள்.

      Delete
  10. எங்களையும்....

    அவர் ஆன்மா சாந்தியடையவும்
    சகோதரிக்கு இந்தப் பேரிழப்பை தாங்கும்
    சக்தியைத் தரவும் ஆண்டவனைப்
    பிராத்திப்போம்..

    ReplyDelete
    Replies
    1. மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
  11. very sad, rip, i dont have words to express, lets wish that she will be bold and active as usual

    ReplyDelete
  12. சகோதரிக்கு எமது இரங்கல்களும்...

    ReplyDelete
    Replies
    1. மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
  13. தன்னைச் சென்ஹவர்களின் சோகத்தையே தாங்க முடியாதவரால் இந்த இழப்பை எப்படித் தாங்க முடியுமோ.. ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த இழப்பு மிகப் பெரிய இழப்புதான்...மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
  14. தனது மாணவர்களுக்கு துன்பம்வந்தபோது ஆறுதல் சொல்ல சென்ற சமூக சிந்தனை கொண்டவருக்கே இப்போது துன்பம் வந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த வருட ஆரம்பத்தில் பெரியவர் ராஜ நடராஜன் மறைவு துயர செய்தியை தொடர்ந்து துயரமாகவே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கடந்த 6 மாதங்களில் நான் நிறைய நட்பு மற்றும் உறவினர்களை இழந்துவிட்டேன் அனைவரும் வயது முதிந்தவர்கள் அல்ல என்பதுதான் வருத்தத்தை தருகிறது

      Delete
  15. துயர் பகிருவோம்

    ReplyDelete
    Replies
    1. மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
  16. எனக்கு அவர்கள் அறிமுகமில்லை என்றாலும், உங்களின் இரங்கல் செய்திபார்த்து அந்தச் சகோதரியின் பதிவும் பார்த்தேன். என்ன ஒரு நல்ல மனம் அவருக்கிருந்தால், தன் பிள்ளைகளைப் போல நேசித்த மாணவியரின் துக்கத்தைப் பகிர்ந்து -அந்தக் குழந்தைகள் மடியில் விழுந்து கதறிய வரிகளை- அவர் எழுதியிருந்ததைப் படித்தபோது நானும் உடைந்து போனேன் . அப்படி அன்புமிக்க அவருக்கே இழப்பென்றால் தாங்க முடியவில்லைதான். அவரது அன்பின் வலிமையே அவரையும் அவரது குழந்தைகளையும் தாங்கக் கூடிய தன்மையைத் தரும். அவர் மீண்டு வரவேண்டும், தொடர்ந்து அவரது குழந்தைகளுக்கான உலகத்திற்காக நல்லபடியாக மீண்டு வாழவேண்டும்.. தங்கள் தளத்தின் வழியாக என் ஆழ்ந்த இரங்கலை அந்தச் சகோதரிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வாழவேண்டிய தேவை இருக்கிறது என்பதே நான் சொல்ல் நினைக்கும் செய்தி.

    ReplyDelete
    Replies
    1. இவரும் நம்ம மைதிலியைப் போல நல்ல சகோதரிதான்... மைதிலியிடம் குறும்புத்தனம் உண்டு. ஆனால் இவர்களிடம் அது கிடையாது...இவரின் எழுத்துக்கள் வலிமை மிகுந்தது. மொக்கை பதிவுகள் எதையும்போடமாட்டார்.... ஊடக்துறையின் பார்வை இவரின் மேல் படவில்லை. அதுபட்டு இருந்தால் மிக சிறந்த ஜர்னலிஸ்டாக பிரகாசித்து இருப்பார்......

      Delete
    2. நன்றி வணக்கங்கள்.

      Delete
  17. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/auditor-killed-in-accident/article8263361.ece

    An auditor was killed in a road accident in Palayamkottai on Saturday.

    Police said S. Sabari Das (45), an auditor from Thirumal Nagar in Palayamkottai, was going to KTC Nagar in his two-wheeler on Saturday morning. When he reached V.M. Chathram, a car hit the bike killing him on the spot. Traffic Investigation Wing police have registered a case

    ReplyDelete
  18. http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/02/20192527/In-PlayankottaiCar-crash-Auditor-death.vpf



    நெல்லை,

    பாளையங்கோட்டையில் ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் ஆடிட்டர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–
    கார்– ஸ்கூட்டர் மோதல்

    பாளையங்கோட்டை திருமால் நகரை சேர்ந்தவர் செல்வ பாபா சபரிதாஸ் (வயது 45). ஆடிட்டர். இவரது அலுவலகம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ளது. இவர் நேற்று காலை வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் கே.டி.சி. நகர் கடைக்கு பொருட்கள் வாங்க புறப்பட்டுச் சென்றார்.

    கன்னியாகுமரி –மதுரை 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். சீனிவாசநகர் பாலத்தை கடந்து கே.டி.சி. நகருக்கு திரும்புவதற்காக முயற்சி செய்தார்.
    ஆடிட்டர் சாவு

    அப்போது அந்த வழியாக வந்த கார், செல்வ பாபா சபரிதாஸ் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். செல்வ பாபா சபரிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விபத்தில் இறந்து போன, செல்வ பாபா சபரிதாசின் மனைவி பெயர் ரோஸ்லின். இவர் பாளயைங்கோட்டை சேவியர் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர்க்காரங்களா? எங்க கல்லூரியில் வேலை பார்ப்பவரா? அதையும் தாண்டி, அவரின், "நெருங்கிய மரணம் தரும் நெருக்கடி" அவரின் நல்ல எண்ணத்தைக் காட்டுவதாக இருந்தது. அவருக்கு இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை, அவரின் கல்லூரி மாணவர்கள் கொடுக்கட்டும்.

      Delete
    2. நெல்லைத்தமிழா நானும் நெல்லை மாவட்டத்தை சார்ந்தவந்தானய்யா. ஆனால் மதுரையில் படித்து வளர்ந்ததால் மதுரைத்த்மிழன் என்ற பட்டபெயர் வைத்து கொண்டேன்.. நான் அமெரிக்கா வருவதற்கு முன் ஒவ்வொரு கிறிஸ்மஸ்தினத்தன்று பாளையங்கோட்டை சர்ச்சில் என்னை பார்த்து இருக்க பலருக்கும் வாய்ப்பு இருந்திருக்கிறது

      Delete
    3. நன்றி வணக்கங்கள்.

      Delete
  19. படிக்கும் போதே மனம் கலங்கிறது ....

    இனி வரும் காலத்தில் இறைவன் துணை இருக்கட்டும் ...

    ReplyDelete
    Replies
    1. மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
    2. நன்றி வணக்கங்கள்.

      Delete
  20. மிகவும் வேதனை தரும் செய்தி. நேசித்தவர்களை இழப்பது அதுவும் எதிர்பாராது விபத்தில் பறிகொடுப்பதென்பது மிகக் கொடுமை.. தோழியின் மனக்காயத்தை காலம்தான் ஆற்றவேண்டும். துயரைத் தாங்குவதற்கான மனத்திடத்தை அவர் பெறவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
    2. நன்றி வணக்கங்கள்.

      Delete
  21. வருந்துகிறேன். இரங்கல்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
  22. Hmm! Terrible news! Fatal accident demise is the worst of all and will hurt the family MOST! There are no words to console her and her family! :( My heartfelt condolences to her and her children and her family!

    ReplyDelete
    Replies
    1. இழப்புகள் யாருக்கு வந்தாலும் நம்மிடம் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லைதான் காலம்தான் மனதை ஆற்ற வேண்டும்

      Delete
    2. நன்றி வணக்கங்கள்.

      Delete
  23. தமிழா சகோதரியை அறிமுகம் இல்லை. என்றாலும் தங்கள் பதிவு மனதை என்னவோ செய்கின்றது. சகோதரிக்கு எல்லாம் வல்ல இறைவன் தாங்கும் சக்தியைக் கொடுக்க வேண்டி பிரார்த்திப்போம். அவரது பதிவைப் படித்த பின், இப்படித் தன் மாணாக்கர்களுக்கு மனம் நெகிழ்ந்து இரங்கியவருக்கு அவரது கணவரே இறந்துவிட யார் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியும்?! வார்த்தைகளே இல்லை. என்ன சொல்லித் தேற்ற முடியும். பிரார்த்திக்க மட்டுமெ முடியும். அதுவும் அவர் கணவரது மரணம் சாலைவிபத்து (னீங்கள் கொடுத்திருக்கும் செய்தி - பாளையங்க்கோட்டை..அதுதானே?) என்று அறியும் போது மனம் இன்னும் கூடுதல் வேதனைப்படுகின்றது. சமூகத்தின் மீதும், நமது சட்டங்களின் மீதும் கோபம் வருகின்றது. சாலைவிபத்துகள் பெருகி வரும் குறிப்பாகத் தமிழகம்....மனம் எல்லோருக்கும் பிரார்த்தனை செய்கின்றது.

    சகோதரிக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். இறைவன் அவருக்கு எல்லாவித சக்தியும் கொடுத்து வல்லமை தர பிரார்த்தனைகள். காலம்தான் துயர் துடைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மனம் தளர்ந்து இருக்கும் அவருக்காக நாம் பிரார்த்திப்போம்

      Delete
    2. நன்றி வணக்கங்கள்.

      Delete
    3. http://josephinetalks.blogspot.com/2016/06/blog-post_12.html

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.