Thursday, December 10, 2015



Ashish Chaudhary, Anusha Natarajan, ChennaiFloods
சென்னை வெள்ளமும் ஹிந்திகாரனின் கோர வெறியும்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு இன மொழி தேசமக்கள் பாதிக்கப்பட்டு வீடு வாசல் சொத்து மற்றும் சொந்தங்களை இழந்து பரிதவித்து நிற்கின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிக்கப்படாத பல்வேறு இன மொழி மத மக்கள் உதவி புரிந்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் ஒரு ஹிந்திகாரன் மக்களிடத்தே பாம்பை போல தன் விஷத்தை கக்கி இருக்கிறான். அந்த விஷப்பாம்மை ஒரு தமிழ் பெண்ணொருத்தி அடித்து துவைத்து போட்டுவிட்டாள். மேலும் அந்த ஹிந்திகாரவிஷப் பாம்பை மேலும் வளரவிடாமல் நாமும் நம்மால் முடிந்த வரை அடித்து துவைத்து மேலும் அது போல ஹிந்திவிஷப்பாம்புகள் பரவவிடாமல் இருக்க நாம் இந்த செய்தியை பரவவிடவேண்டும்.

வெள்ள செய்திகளை பார்த்து கொண்டிருந்த என் கண்ணில் இந்த செய்திபடவே இல்லை.  பதிவர் வே.நடனசபாபதி  பதிவாக பதிந்த பிந்தான் இந்த தகவல் எனக்கு தெரிந்தது. அதன்பின்னே நான் அதை இணையத்தில் பல இடங்களிலும் நாளிதழ்களிலும் வந்து இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இந்த செய்தி வெள்ளச் செய்திகளுக்கிடையே முழ்கி விட்டது போலிருக்கிறது. அந்த செய்தியை நடனசபாபதி அவர்களின் அனுமதி பெற்று இங்கே பதிகிறேன். இதனை நீங்கள் படித்து மற்றவர்களுக்கும் பகிரவும்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

அவரின் பதிவில் வந்தவை இங்கே உங்களுக்காக


சென்னை வெள்ளமும் இந்திவெறியரின் ஆசையும்.
சென்னையில் ஏற்பட்ட பெரும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீட்டை இழந்து நான்கு நாட்கள் குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி, தங்க இடம் இடம் இன்றி, மழையில் மொட்டை மாடியிலும் இன்ன பிற இடங்களிலும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இந்தியா முழுதும் உள்ள நல்ல உள்ளங்கள் சாதி இனம் மொழி கடந்து உதவ முன் வந்திருக்கும்போது, இந்தி வெறியர் ஒருவர் எந்த அளவுக்கு இனவெறியோடு இந்த அழிவை விரும்புகிறார் என்பதை கீழே தந்துள்ளேன்.



Facebook இல் ஆசிஷ் செளத்ரி என்பவர் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் தமிழர்கள் இறப்பதைதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று எழுதியிருக்கிறார். அதற்கு அனுஷா நடராஜன் என்பவர் தக்க பதிலை அளித்துள்ளார். Facebook இல் வந்த அவர் எழுதியிருந்ததையும் அதற்கு அனுஷா நடராஜன் அவர்கல் தந்திருக்கின்ற பதிலையும் அப்படியே கீழே தந்திருக்கிறேன்.


avargal unmaigal
ஆசிஷ் செளத்ரி

''I don't mind if Tamil people die. They never considered
themselves as Indians.''

And then I ask myself. The land who do not accept our
national language and prefer British English more in conversation
to native Indians are asking help from Hindi language people''.


அனுஷா நடராஜன்


'Dear Ashish Chaudhary,

First of all the good news. We ''Tamilians'' made it alive and
stronger than ever. Now for the bad news. Your intellect is even teenier and tinier than the size of your brain. Let me explain why.
1. Hindi is not our National Language. India has many officially
recognized languages.
2. I see you are from Mumbai and that means you are technically not from the Northern part of India.
3. “Hindi language people” is not a thing. Not at least where you come from.
4. The people from the south aka ''Dravidians'' are the real Indians. You guys are immigrants from Persia.(Not to hurt anyone's feelings.) We love you all and will come for your rescue
if and when needed.
5. So we embrace English....Big deal! It helps us become CEOs
of bigger companies around the world. While you are still stuck doing something completely useless on MTV.
And finally! You are brainless... I can tell you this because while you accused us of embracing English you typed both your posts in English... Not too sharp buddy!!...Not too sharp!
Sincerely,
Everyone!


திரு ஆசிஷ் செளத்ரி யின் பதிவுக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் வந்து குவிந்திருக்கின்றன. ஆனால் அவரைப் போன்ற இந்தி வெறியர்கள் இதற்கெல்லாம் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திரு ஆசிஷ் செளத்ரி போன்றோரின் ஆசை நிறைவேறப் போவதில்லை. எனவே நாம் அது குறித்து கவலைப்படவேண்டாம். மேலும் அவரது தணியாத ஆசைக்கு தகுந்த பதிலை அனுஷா நடராஜன் அவர்கள் தந்து விட்டார். எனவே இதை உதாசீனம் செய்வதே நல்லது.

ஆனால் துரதிர்ஷடவசமாக நமது தமிழக அரசின் கல்வித்துறையே இந்தியாவின் தேசிய மொழி இந்தி என நினைத்துக்கொண்டிருக்கிற போது அவர்களை குற்றம் சொல்லி என்ன பயன்?

இது குறித்துஇந்தி நமது நாட்டின்தேசிய மொழியா?  என்று 20-07-2015 அன்று நான் வெளியிட்ட பதிவில் இந்தி நமது நாட்டின் தேசிய மொழி அல்ல அது ஒரு அலுவலக மொழி (Official Language) தான் என்பதை தமிழக கல்வித்துறையினரே அறியவில்லை.அதனால் தான் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்று சமூகவியல் பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டு மாணவர்களை குழப்பியிருக்கிறார்கள் என சொல்லியிருந்தேன்.

எனவே நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள செய்யவேண்டியது அரசின் கடமை. ஆனால் அதை செய்வார்களா என்பது ஐயமே. அதுவரை இது போன்ற பிதற்றல்களை நாம் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

எழுதியவர் வே.நடனசபாபதி அவரது இணையதள முகவரி http://puthur-vns.blogspot.com/2015/12/blog-post.html

5 comments:

  1. எனது பதிவை தங்களது வலைப்பூவில் மறு பதிவு செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. நானும் படித்தேன்!அந்த பெண் கேட்ட கேள்விகள் நியாயமானது தான்!

    இந்த தேசிய மொழி எனும் விடயத்தில் இனியாவது கவனத்தில் கொள்ள வேண்டும்பா! அதே போல் தமிழன் எனின் கறுப்பினம் எனும் ஒரு வித குரோதம் கொளிக்கும் வார்த்தைகளும் வந்து விழுந்தன. செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்யாமலும் கேட்க வேண்டியதை சரியான இடத்தில் கேட்காமலும் இப்படி விடுவதே தமிழன் எங்கே போனாலும் அடி படும் வித்தை இதுவாய் தான் இருக்கும்.

    தைரியமாக தட்டிக்கேட்டமைக்கும் தகுந்த பதில்கொடுத்தமைக்கும்.அனுஷா நடராஜனும்க்கு சல்யூட்.

    அதெல்லாம் சரி இந்தியாவின் தேசிய மொழி தான் என்ன?

    எங்க ஊரில் ஜெர்மன்,இத்தாலி,பிரெஞ்சு மூன்றுமே தேசிய மொழிதான் , அலுவலக மொழிகளும் பெரும்பாலும் மூன்று மொழிகளிலும் இருக்கும், மூன்று மொழிகளையும் இலகுவாக பேச எழுத கற்பதும் இங்கே நடக்கும் விடயம் தான்!

    ஆங்கிலத்துக்கு கொடுக்கும் மதிப்பை தாய் மொழிக்கு கொடுக்காததும் கூட இத்தனைக்கும் காரணமாயிருக்கலாம்!

    ReplyDelete
  3. ம துரை மாப்ளே எனக்கும் சில சமயம் உம்ம மாதிரி மட்டு மல்ல இன்னும் கூட கேவலமா திட்ட முடியும். அவங்க அங்க உக்காந்துகிட்டு இப்படி நம்ம மக்கள கேவலப்படுத்துறது ஒன்னும் புதுசான விசயமில்ல.

    கேவலமான ஆளுங்களுக்காக

    பதில் சொல்லுற நேரத்த இந்துவோ,முஸ்லீமோ,கிருஸ்தவரோ,இன்னும் பிற மத நம்பிக்கை கொண்டவரோ ? அல்லது இல்லாதவரோ..

    எதுவுமே நிரந்தரமில்லை என்பதை நமக்கு உணர்த்தி விட்டு இன்னும் கஷ்டத்திலேயே இருக்கும் மணிதம் எனும் மதத்திற்க்கு உயிரூட்டுவோம் மாப்ள..

    டிஸ்கி : அங்கன இருந்து 1ம் வேணாம் 1 கோடி பூரிப்புகள் வந்தால் சந்தோசம். பூரி தயாரிப்பில் (அடி வாங்கி உதவி ) நண்பர் மறதித் தமிழன் என்ன்று டைட்டிலில் சொல்வோம்...

    ReplyDelete
  4. அவனுக்கும் திரு சொல்லும் நமது பண்பாடு தெரியாத நாய்கள்....விடுங்கள் நம்மை நாம் காப்போம்....

    ReplyDelete
  5. அனுஷா அவர்கள் நாகரிகமாக, "your intellect is tinier than your brain" என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆஷீஸ், மராத்தியைப் பற்றி இவ்வாறு எழுதியிருந்தால் காணாமல் போயிருப்பார். அவருக்கு நிறைய கண்டனங்கள் வந்ததே (திராவிடர்களைத் தவிர மற்றவர்களிடமிருந்து) ஆறுதலளிக்கும் நிகழ்வு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.