Wednesday, October 21, 2015






avargal unmaigal
'நமக்கு நாமே' சிரிக்க சிந்திக்க

சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம், அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..! அதனாலதான் தேர்தல் வருகிற நேரத்தில் எல்லோரும் சிரியஸாக செயல்படும் நேரத்தில் நம்ம தளபதி நமக்கு நாமே என்று காமெடி திட்டத்தை செயல்படுத்டதி மக்களையும் சோஷியல் பதிவர்களையும் சந்தோஷப்படுத்திவருகிறார்

சிரிக்க :


ஸ்டாலின் அவர்கள் நமக்கு நாமே என்ற விடியல் பயணத்தை துவங்கி தமிழ்நாடெங்கும் சுற்றிவருகிறார். அப்படி அவர் சுற்றி வருகை தரும் பகுதியில் உள்ள ஹாஸ்பிடலில் அவர் வரும் நேரத்திற்கு டாக்டர்கள் எந்த நோயாளிக்கும்  அறுவை சிகிச்சை ஏதும் செய்யாமல் பார்த்து கொள்கிறார்களாம்.காரணம் தீடிரென்று அவர் அங்கு வந்து அறுவைசிகிச்சையை  நானே செய்கிறேன் என்று வந்துவிட்டால் நோயாளியின் நிலமை என்ன ஆவது என்பதால்தானாம்.

avargal unmaigal


சிந்திக்க :

ஸ்டாலின் அவர்கள் நமக்கு நாமே என்ற விடியல் பயணத்தை துவங்கி தமிழ்நாடெங்கும் சுற்றிவருகிற போது விவசாயிகளை பார்க்கும் போது அவர்களோடு சேர்ந்து மண்வெட்டுவதும் நாற்று நடுவதும் டிராக்டர் ஒட்டுவதும் ஆட்டோ ஒட்டுவதும் சிலை செதுக்கவதும் துணி நெய்வதும் இப்படி பல தொழிலாளிகளுடன் சேர்ந்து அவர்கள் தொழிலில் பங்கு பெறுவது போல நடித்து  போஸ் தரும் அவர். வரும் வழியில் சாக்கடை தொழிலாளி சாக்கடையில் வேலை செய்யும் போது அவரும் அந்த சாக்கடையில் இறங்கி வேலை செய்யாதது ஏன்? ஒரு வேலை அது கிழ்சாதியினர் செய்யும் வேலை என்பதால்தானா?

avargal unmaigal

திமுகவில்  இருக்கும் 90% சதவிகித ஹிந்துகளுக்கு விடுமுறை தின வாழ்த்துக்கள் # ஸ்டாலின் #கலைஞர்



அன்புடன்
மதுரைத்தமிழன்.

3 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.