Monday, September 21, 2015



அரசியலில் தோல்வியை தழுவிய தலைவர் நடிக்க முயற்சி

தமிழ் திரையுலகம் தவறவிட்ட நடிகர் மீண்டும் மக்கள் மத்தியில் நேரடியாக நடித்து மக்களை கவர வருகிறார். இப்படி இவர் நடிக்க ஆரம்பித்தற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது தமிழக மக்களுக்கு அரசியல் வாதிகள் என்றாலே மோசமானவர்கள் என்ற நினைப்பு. ஆனால் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு மோசமாக இருந்தாலும்,  அவனது நடிப்பை பார்த்து அவனை தெய்வமாக கருதி வழிபட துவங்கி, அவர்களை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் நானும் நடிக்க வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து தலைவனாக ஆக முடிவு செய்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அதற்காக நான் நடிக்கும் படம் ''நமக்கு நாமே"
அந்த படத்தை பார்த்து என்ன ஆதரிக்க வேண்டுகிறேன்.....




வழக்கமாக திரைவிமர்சனம் எழுதும் யாரும் இந்த படத்தைப்பற்றி விமர்சனம் செய்யவில்லை படம் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறது?


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. அவரும் என்னென்னமோ செய்து பார்க்கிறார் சி,எம் ஆக முடியவில்லை! வீட்டிலேயே சகுனிகள் இருந்தால் அவரும் பாவம் என்ன செய்வார்?

    ReplyDelete
  2. சிந்திக்க வேண்டிய நடிகர்)) கதிரைக்கு போட்டி அதிகம்தான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.