Thursday, April 16, 2015



avargal unmaigal maduraitamilguy மதுரைத்தமிழன்
கசக்கும் உண்மைகள்


இந்த பேஸ்புக்கில் சில விஷயங்களை நீங்கள் தொடர்ந்து கவனித்து இருக்கலாம்....

அதில் ஒன்றுதான் கோவில் படங்களைப் போட்டு..... கோபுரத்தின் கீழோ... படிக்கட்டில் அமர்ந்தோ ஈ என்று இளித்தவாறு போட்டோ எடுத்து போடுவது.....

அதுவரை அது பரவாயில்லை.....

அவ்விதம் போட்டோ போடுகிறவர்கள் தம்மை தொல்லியல்துறை வல்லுநராகக் காண்பித்துக் கொண்டு (சில அறநிலைய புத்தகங்கள், தொல்லியல் புத்தகங்களைப் படித்துவிட்டு...!!) தாம் சென்ற கோவிலைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவது!!.....

அவதூறு பரப்பினாலும் பரவாயில்லை. யாரும் நம்பமாட்டார்கள்.... இவர்களிடம் உள்ள முக்கிய பிரச்சனைக்கு வருகிறேன்....


1. எங்காவது பஸ் நுழைய முடியாத இடத்தில் இருக்கிற கோவிலுக்கு கொழுத்துப் போய் தன் நண்பர்களுடன் செல்வார்கள்....

2. போட்டோவை வளைத்து வளைத்து எடுப்பார்கள். (கேமராவை வெளிநாட்டில் உள்ள உறவினர் வாங்கித்தந்ததாக இருக்கும். இல்லையேல் தான் வாங்குகிற அதிக சம்பளத்தை என்ன செய்வது என்று தெரியாமல் வாங்கினதாக இருக்கும்!! அல்லது இருக்கவே இருக்கிறது... கேமரா செல்!!)

3. அந்த ஊரில் உள்ள சிறு ஓட்டலில் சாப்பிடுவார்கள். தாம் பட்டினத்தில் இருந்து வருவதைக் காண்பித்துக் கொள்ள பில் தொகையைவிட அதிகமாய் தந்து ஓட்டல் முதலாளிகளுடன் அலவளாவுவார்கள்....

4.கோவிலை தரிசிக்க செல்லுவார்கள்.

5. மூடி இருக்கும் கோவிலை திறக்கச் சொல்ல குருக்கள் வீட்டிற்குப் போவார்கள். அங்கு அவரது மனைவி இருந்தால் அவள் வந்து திறப்பாள். அர்ச்சனையும் செய்வாள்.... மகள் இருந்தாலும் அஃதே!! மகன் இருந்தால், "அப்பா அந்த கோவிலுக்கு போயிருக்கார்... இனிம சாயந்திரம்தான் திறப்பார்.... இதான் எங்கப்பா நெம்பர்.... அடுத்த தடவ போன் பண்ணிட்டு வாங்க!!" என்பான்!!

6. குருக்கள் இல்லை!! என்றதும், இவர்களுக்கு அந்த கோவிலின் அழகும், நித்யபூஜை நடக்கவில்லையே!!? என்ற ஏக்கமும் பெரிய அளவில் தாக்கி.... பேஸ் புக்கில் பதிவிடுகிற போது.... குருக்களுக்கு உள்ளூரில் வீடு, அரிசி, புண்ணாக்கு என சகல வசதி செய்துகொடுத்தும் அவர் கோவிலில் இருப்பதில்லை.... என்னே ஒரு கேவலம்.... ஆண்டவனை இப்படி தண்டிக்கலாமா!!? என்று வெம்புவார்கள்....

7. வெம்புவதோடு நிறுத்தாமல் அந்த கோவிலின் பெருமையை கூட்டிச் சொல்லி... மிக அருமையான ஆலயம்.... கவனிப்பார் அற்று பாழ்பட்டு கிடக்கிறது.... அங்குள்ள துர்க்கையின் சிலை வெகு அற்புதமாய் இருக்கும்.... கோவிலின் பின்புறம் கவனிப்பாரற்று இரண்டு சிலைகள் (ஒன்று சண்டிகேசராய் இருக்கலாம்!! இன்னொன்று அதிபத்த நாயனாராக இருக்கலாம்!!) இருக்கின்றன..... என்று மொஹஞ்சதாரோ ஹரப்பா மற்றும் எகிப்து சென்று மண்ணை நோண்டியவர்கள் மாதிரி எழுதுவார்கள்....

8. 4-5 பேராய் ஊர் சுற்றிய மேற்படி நபர்கள்.... இந்த பேஸ்புக்கில் அழிந்து வரும் ஆலயங்கள்.... என்றோ.... கோவில் தரும் ஆன்ம சிந்தனை!! என்றோ..... இந்து ஆலயங்களைப் பேணுவோம் என்றோ க்ரூப் ஏற்படுத்தி.... தாம் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் பதிந்து... தம் இஷ்டத்திற்கு எதையாவது எழுதி..... அதில் நம்மையும் இணையச்சொல்லி வற்புறுத்தி, நம் ஒப்புதல் இல்லாமலே அதில் நம்மை இணைப்பார்கள்.!!

இம்மாதிரியும், இதைவிட கூடுதலாகவும் செயல்படுகிறவர்களுக்கு என் கேள்வி இதுதான்....

1. சொந்த ஊரை விட்டு நீங்கள் உங்கள் தகப்பனார் அல்லது தாத்தா காலத்தில் பட்டினத்திற்கு பிழைக்கப் போய்விட்டு.... சொந்த ஊர் பாசத்தில் கோவில் மீது பழியைப் போட்டு ஊர் சுற்றி.... இப்படி நடந்துகொள்வது நியாயமா!!?

2. சொந்த ஊரில் பெரிய வீட்டில் இருந்து உங்கள் முன்னோர் ஏதோ ஒரு பிழைப்புக்காக (சர்வைவல்!!?) ஒரு ரூம் அட்டாச்டு டாய்லட்... என்று பட்டணம் போன நீங்கள்.... பட்டணத்தில் உள்ள கோவில் பக்கம் போகாமலும், அது குறித்த அகழ்வாராய்ச்சியையும் வெளியிடாததன் மர்மம் என்ன!!?

3. என்ன குறை இருந்தது என்று கும்பகோணம், மாயவரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி முதலிய ஊர்களை விட்டு பட்டணம் போய் சீரழிந்தீர்கள்!!? அந்த பட்டண வாழ்வில் உங்கள் முன்னோர் கண்ட பலன் என்ன!!?

4. அருமையான ஊரையும் விசாலமான வீட்டையும் விட்டு விட்டு (விற்று!?) பட்டனத்தில் ஒண்டுக்குடித்தன வாழ்வை விரும்பி, மஹா கேவலமான வாழ்வை பட்டினத்தில் வாழ்ந்த உங்கள் தாத்தா/ தகப்பன் களது செயலைப் பற்றி அகழ்வாராய்ச்சி செய்ய துப்பு உண்டா!!?

5. பிராம்மணர்கள் தமது சொந்த ஊரை, வீட்டை விட்டு போனதும், "ஐயோ.... எங்க ஊர்ல அக்ரஹாரம் எவ்ளோ பெருசு தெரியுமா.... கிட்டு சாஸ்திரிகள் எங்காத்துக்கு பக்கத்தாம்தான்!!.... விஸ்வநாதன் வக்கீல் எங்காத்துக்கு எதிர்த்தாம்தான்.... ஏன்..... ஜட்ஜு வரதாராஜ ஐயர் எங்க தாத்தாவோட ஷட்டகர்!!.... எங்க வீடு எவ்ளோ பெருசு தெரியுமா.... ஒரு தெரு நீட்டுக்கு இருக்கும்.... அத தவிர தோட்டம் வேற.!!?... இப்ப என்னடான்னா.... அத்தன எடத்துலயும் துலுக்கனுங்க வந்துட்டாங்க....தேவருங்க வந்துட்டானுங்க...." என்று கூவுகிறீர்களே... அவர்களுக்கு வீட்டை விற்றது நாங்களா... நீங்களா!!?

6. சொந்த ஊர் பாசத்தில் உள்ளூர் கோவிலைப் புறக்கணித்து கிராமம் கிராமமாக பூர்வீகம் என்று சுற்றுகின்றீர்களே.... அங்கு உங்கள் தாத்தாவைப் போல பிழைப்புக்காக (சர்வைவல்!!?) அந்த ஊர் குருக்கள் போனால் மட்டும் உங்களுக்கு அடிவயிற்றில் ஆசிட் ஊற்றியது போல வருந்துகின்றீர்களே.... ஏன்!!?

7. பட்டினம் போனது பிழைப்புக்காக. ஒழுங்கு மரியாதையாக உங்கள் குடும்பத்தினரை பட்டினத்தை விட்டு எங்கும் அனுப்பாதீர்கள். கிராம வாழ்க்கை கசக்கிறது என்று போனபிறகு.... அதே கிராம வாழ்க்கை இனிக்கிறது.... இப்படி இருக்கனும்.... அரசாங்கம் இப்படி நடத்தனும்... உள்ளூர் மக்கள் அப்படி வாழனும்....என்று திட்டமிட உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது!!? ஒழுங்கு மரியாதையாய் பட்டின எல்லையை தாண்டாதீர்கள்.!!

இன்னமும் கேட்பேன். சிந்தித்து தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டால்!!?

அந்த பயம்தான். இத்தோடு நிறுத்துகிறேன்.!!



இந்த பதிவை பேஸ்புக்கில் எழுதியவர் லலிதா நாராயணன். இவர் மனதில் பட்டதை பட்டென்று சொல்லிச் சென்றுவிடுவார். மிக எளிமையானவர். ஆனால் இவர் எழுத்தில் ஆத்திரம் கனலாக சுழன்று வரும். அவரின் அனுமதியோடு இந்த பதிவை வெளியிடுகிறேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments:

  1. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  2. த ம +
    எங்கே பிடிச்சீங்க...
    சிரித்துகொண்டே படித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. இதை எழுதிய லலிதா நாராயணன் உங்ளைப் போல பேஸ்புக்கில் நான் கண்டு எடுத்த நண்பர்

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  5. இது வெளிநாடு போனவர்களுக்கும் பொருந்துமா? வெளிநாட்டில் இருந்து அது சரி இது பிழை என கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    ReplyDelete
  6. drogba.....இது எல்லோருக்கும் பொருந்தும். சர்வைவல் என்ற காரணத்தைக் காட்டி கீழான பிழைப்பு பிழைக்கும் நகரவாசிகள் எல்லோருக்கும் பொருந்தும். எல்லா ஜாதியினருக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. மோடி சரியில்லை என கருத்துக்கூற இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசிப்போருக்கு சற்றும் அருகதையல்லதானே?

      Delete
    2. இந்த பதிவை எழுதியவர் யார் அவர் என்ன சொல்ல வ்ருகிறார் என்று புரிந்து கொண்டு பதில் அளியுங்கள் நண்பரே....

      Delete
    3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
    4. நண்பரே பட்டிணத்திற்கு சென்றவருக்கு வருவது இரத்தம். அமெரிக்காவிற்கு தக்காளி சட்ணியா?

      Delete
    5. நான் அவரின் கருத்தை உங்கள் பக்கத்தில் படித்தால் கேட்டேன்

      Delete
    6. //இது வெளிநாடு போனவர்களுக்கும் பொருந்துமா? வெளிநாட்டில் இருந்து அது சரி இது பிழை என கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?//
      திரு.Drogba நியாயமான கேள்வி சிந்திக்க வைத்தது.நன்றி.
      சுஹாசினி சொன்னது கருத்து சுதந்திரத்துக்கான மறுப்பென்றால், லலிதா நாராயணன் சொன்னது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மிரட்டல்.

      Delete
  7. நல்ல கேள்விகள். கிராம வாழ்க்கை அற்புதம் நகர வாழ்க்கை நரகம் என்று சொல்வோம் ஆனால் சொந்த ஊர் போனால் அடுத்த நாளே திரும்பி வ்ந்துவிடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  8. அறச்சீற்றம்தான்.. மாற்றம் என்பது மானுடத் தத்துவம். எனக்கும் கிராமத்தை விட்டு வந்தது ரொம்பக் கஷ்டமாகத்தான் (மனதுக்கு) இருக்கிறது. நமக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு இன்னொன்றா? இன்றைய நிலையில் படித்தவர்கள் ஊரை விட்டுக் கிளம்பிவிடுகிறோம். அப்பறம் ஊரை யார் பார்த்துக்கொள்வார்கள் (பழைய நடைமுறைகளை.. கோயில் முதற்கொண்டு).. இதற்குத்தான், 'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்று நம் முன்னோர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

    ReplyDelete
  9. லலிதா நாராயணன் பட்டணம் போறவர்களை கேலி செய்கிறார். அவர் பார்வையில் சீமைக்கு போனவங்க பட்டணம் போனவங்களைவிட பல மடங்கு குற்றவாளிகள். உங்களைச் சொல்லவில்லை ம தமிழன். என்னைத்தான் சொல்றேன். I cant argue against that. I would plead guilty there.

    Now, let us look at drogba's perspective..

    பட்டணத்தில் குப்பை கொட்டும் ட்ருக்பா லஞ்சம் ஊழல் என்னும் சகதியில் தினந்தோரும் உருண்டு எழுபவர். கிராம வாழ்க்கையைவிட 100 மடங்கு. சீமைக்குப் போன நான் என்னுடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையில் 0% லஞ்சம் ஊழல் இல்லாமல் வாழ்கிறேன். That's the difference between drogba's and my life . Other than that who is better? I would say NOBODY. Everyone is a hypocrite including DROGBA and Lalitha Narayanan! They always look at other's ass as they could not see their own!

    ReplyDelete
    Replies
    1. Varun, How can you say that i am corrupted? Do u kno where i live at the moment and where was i before? I was in UK more than 6 years and now I'm in Singapore (Which is one of the less corrupted countries in the world). Y r u saying i am hypocrite? Do u kno me personally or did i do something to u.

      I am here to share my thoughts. I m here to argue regarding the subject. I am not here to guess others personal life and make nonsense comments.

      If you have any positive or negative thoughts regarding my comment I am ready to argue. I can be wrong too.

      To Madurai Thamilan,
      Don't you feel that he is personally attacking me and going out of subject. How can he say that i am hypocrite and corrupted? He says I look others ass!! What an offensive.

      Delete
  10. Varun, as I said earlier I DO NOT need to explain my personal life here. It is unwanted to others that y I am in Singapore. I am coming to this blog to express my opinion.

    BTW i am not criticizing America.

    look at the point 7.

    //
    7. பட்டினம் போனது பிழைப்புக்காக. ஒழுங்கு மரியாதையாக உங்கள் குடும்பத்தினரை பட்டினத்தை விட்டு எங்கும் அனுப்பாதீர்கள். கிராம வாழ்க்கை கசக்கிறது என்று போனபிறகு.... அதே கிராம வாழ்க்கை இனிக்கிறது.... இப்படி இருக்கனும்.... அரசாங்கம் இப்படி நடத்தனும்... உள்ளூர் மக்கள் அப்படி வாழனும்....என்று திட்டமிட உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது!!? ஒழுங்கு மரியாதையாய் பட்டின எல்லையை தாண்டாதீர்கள்.!!
    //
    drogbaApril 17, 2015 at 10:37 PM
    இது வெளிநாடு போனவர்களுக்கும் பொருந்துமா? வெளிநாட்டில் இருந்து அது சரி இது பிழை என கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
    drogbaApril 18, 2015 at 10:43 PM
    மோடி சரியில்லை என கருத்துக்கூற இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசிப்போருக்கு சற்றும் அருகதையல்லதானே?

    Avargal UnmaigalApril 18, 2015 at 11:04 PM
    இந்த பதிவை எழுதியவர் யார் அவர் என்ன சொல்ல வ்ருகிறார் என்று புரிந்து கொண்டு பதில் அளியுங்கள் நண்பரே....

    drogbaApril 18, 2015 at 11:11 PM
    நண்பரே பட்டிணத்திற்கு சென்றவருக்கு வருவது இரத்தம். அமெரிக்காவிற்கு தக்காளி சட்ணியா?

    அமெரிக்காவை பற்றி நான் கேட்டது மதுரை தமிழனிடம்! நான் வெளிநாட்டினர் என எனது முதல் commentல் கூறியிருந்தேன். எனக்கு அமெரிக்கர்களை விமர்சிக்கும் எந்த நோக்கமும் இல்லை. அது உங்களை பாதித்திருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் கருத்து கூற இல்லை.

    நான் சிங்கப்பூரில் மறைந்து வாழவும் இல்லை. நீங்கள் கூறுவது போல் நான் நயவன்சகனும் அல்ல.
    நான் BLOG எழுதுபவனும் அல்ல. comment மட்டுமே எழுதுபவன். அதனால் எனது profileஐ update ஆக வைத்திருக்கவில்லை. தயவுசெய்து என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    To Madurai Thamilan,
    உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே.
    hope u will follow it

    ReplyDelete
  11. Drogba: You are such a sensitive guy!!!! I think everyone in the world is hypocrite. You want to be an exception?? You need to learn to take thing easy!

    ReplyDelete
  12. Just doing business by spreading hatred on one community. Aren't you and lslitha ashamed?

    Taru

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.