Sunday, December 7, 2014



புத்தன் vs உத்தமன் - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்

புத்தனை போற்றும் இந்த உலகம்

இந்த உத்தமன் மதுரைத்தமிழனை போற்றுவதில்லை

புத்தனுக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில்
ஆனால் இந்த மதுரைத்தமிழனுக்கு ஞானம் வந்ததோ பேஸ்புக் தளத்தில்தான்

ஆசையை துற என  சொல்லி வாழ்ந்தான் புத்தன்
ஆனால் ஆசையெல்லாம் புதைத்து விட்டு வாழ்கிறான் இந்த மதுரைத்தமிழன்

புத்தன் சொல்லி சென்றதோ வாழ்க்கை தத்துவங்களை
ஆனால் இந்த மதுரைத்தமிழன் பதிவிட்டு செல்வதோ நகைச்சுவை தத்துவங்களை

புத்தனுக்கோ உலகம் முழுவது பல லட்சம் பாலோவர்கள்
ஆனால் இந்த மதுரைத்தமிழனுக்கோ நூற்றிக்கணக்கில் மட்டுமே

அதனால் மக்களே இந்த நவீனகால புத்தனை அவரது https://www.facebook.com/avargal.unmaigal பேஸ்புக் தளத்தின் வழியாக பாலோவர்களாக இணைத்து ஆதரவு தர வேண்டுகிறேன். அப்படி இல்லைன்னா இந்த மாதிரியான மொக்கைகள் தொடரும்


டிஸ்கி: குழந்தையை தமிழ் கற்க அனுப்பி வைத்துவிட்டு அவள் வரும் வரைக்கும் காரில் அமர்ந்து மழையை ரசித்து பார்த்த போது மண்டையில் உதித்தவைகள் தான் இந்த கிறுக்கல்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments:

  1. தொடர்ந்துட்டா போச்சு! ஆனா உங்க மொக்கைகள்தானே?!! எங்களுக்கு பிடிச்சுருக்கு!

    ReplyDelete
  2. அடுத்த முறை பாப்பாவை கிளாஸ் ல விட போகும்போது தயவு செய்து லேப்டாப் போ, அல்லது டேபிலட்டோ எடுத்துட்டு போங்க பாஸ்:((( ஆனா ஒரு விஷயத்தை பாராட்டனும் இப்போ யோசிக்கவெல்லாம் தொடங்கி இருக்கிங்களே!!!!!!

    ReplyDelete
  3. நீங்க இப்படி தொடர்ந்து மொக்கையா போட்டு சாவடிசாலும் நான் அந்த பக்கம் வரமாட்டேன் பாஸ். ஏன் என்றால் அங்க வந்த இன்னும் பல மொக்கைகளை சந்திக்கவேண்டிவருமே:)))

    ReplyDelete
  4. அவர்கள் உண்மைகள வலைதளத்தில் மதுரைத்தமிழனை போற்றினால்..... உலகம் போற்றியது என்றுதானே அர்த்தம்....மொக்கைகள் தொடர்ந்தால் உலகம் எப்படி போற்றும்....................

    ReplyDelete
  5. எப்போதே தொடர்ந்து விட்டேனே...!

    ReplyDelete
  6. பேஸ்புக்கிலும் நீங்க போடுற மொக்கைகளை படிக்கசொல்றீங்களே, புத்தரே, எங்களை இந்த மதுரைத் தமிழனிடமிருந்து காப்பாற்று.

    ReplyDelete
  7. அதான் இணைச்சுருக்கோம்ல....ஆதரவு தர்ரோம்ல....

    ReplyDelete
  8. ரசித்தேன் மதுரைத் தமிழரே..... :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.