Friday, July 18, 2014



பாடகர் மனோ தரம் தாழ்ந்து செல்வது ஏனோ

நடிகனது தொழில் நடிப்பது அதனால் அவன் என்ன வேஷம் வேண்டுமானால் போடலாம் ஆனால் பாடகரின் தொழில் பாடுவதுதான். பாடும் வரத்தை இறைவன் எல்லோருக்கும் கொடுத்துவிடுவதில்லை அது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரமாக இருக்கிறது. அப்படி பட்ட வரத்தை இறைவனிடம் இருந்து பெற்ற மனோ அதை பயன்படுத்தி புகழ் பெற்ற பாடகராக மக்களின் மனதில் வலம் வந்தார்.


ஆனால் அவர் எப்போது சூப்பர் சிங்கருக்கு வர ஆரம்பித்தாரோ அப்போதில் இருந்து மக்கள் மனதில் இருந்து கிழே போய்க் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் பணம் வேண்டும்தான் அதற்காக தன் தொழிலை கேவலத்திற்கு உட்படுத்ததான் வேண்டுமா என்ன?

எந்த ஒரு பாடகனும் செய்யாத கேவலத்தை சூப்பர் சிங்கரில் கடந்த வாரம் முழுவதும் செய்து இருக்கிறார். பொம்பளை வேஷம் போட்டுதான் பாடிச் ஆடி சம்பாதிக்க வேண்டுமா என்ன? இறைவன் கொடுத்த குரல் வளத்தை இப்படிதான் சந்தி சிரிக்க செய்ய வேண்டுமா?

அதற்கு பதில் உங்களிடம் ஆமாம் என்று வந்தால் உங்களுக்கு மிக அதிக அளவு பணம் சம்பாதிக்கும் வழியை நான் சொலி தருகிறேன்.. அது இதுதான் நீங்கள் அடுத்த தடவை அமெரிக்கா வரும் போது நீங்கள் போட்ட இதே பெண் வேஅத்தை போட்டு இரவு நேரங்களில் நீயூயார்க் தெருவில் நின்று. Ummmmm. Ahhhhhhhhhh என்று முனங்கினால் பணம் தானாக டாலரில் வந்து கொட்டும் அல்லது ஜெண்டில்மேன் க்ளப்பில் இப்படி வேஷம் போட்டு Ummmmm. Ahhhhhhhhhh என்று பாடினாலும் டாலரில் பணம் கொட்டும்

அது விஜய்டிவியில் தரும் பணத்தை விட மிக அதிகம்தான்


என்ன ரெடியா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: இந்த பதிவை நான் போட காரணம் ஒரு நல்ல புகழ் பெற்ற பாடகரை விஜய்டிவி குரங்காக மாற்றி ஆட்டுவித்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில்தான்
http://avargal-unmaigal.blogspot.com/2012/06/blog-post_24.html



26 comments:

  1. Replies

    1. என் மனதில் பட்டதை இங்கே கொட்டிவிட்டேனுங்க...அவ்வளவுதாங்க

      Delete
  2. வெட்கக்கேடு. இந்த உடைகளுக்குன்னு இருக்கும் மரியாதையை கெடுத்துட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. சகோ கிழே உள்ள 2 வது படம் நான் மிக்ஸிங்க பண்ணியது அது 2012 ல் நான் போட்ட பதிவிற்கு இட்ட படம்

      Delete
  3. தங்கள் கருத்தை முற்றும் வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  4. திரு. மதுரைத் தமிழன் அவர்களே..வணக்கம்..

    போட்டியில் கலந்துகொண்டு பாடும் போட்டியாளர்கள் அனைவரும் சிறுவர்கள் என்பதால், அவர்களை உற்சாகப் படுத்த அவர் இம்மாதிரி உடை அணிந்திருக்கிறார்.. இதெல்லாம் பொழுதுபோக்கின் ஒரு அம்சமாகத் தான் நான் பார்க்கிறேன்.. தங்களுக்கு பிடித்தால் ரசியுங்கள்.. இல்லையெனில் சேனலை மாற்றுங்கள்.. அதற்க்காக அவரை கொச்சை படுத்தும் விதமாக பேசுவது.. தவறாகத்தான் தெரிகிறது.. ("தவறு" எனும் வார்த்தையை தவிர்க்கவேண்டும் என நினைத்தேன்.. ஆனால் அதுவே பொருத்தமாய் உள்ளது)

    இதுவே என் கருத்து..

    ReplyDelete
    Replies
    1. உயர் திரு இல. விக்னேஷ் அவர்களே மனோ எனக்கு பிடித்த பாடகர்தான் அவர் வழி தவறும் போது சுட்டிக்காட்டுகிறேன் அவ்வளவுதான். அது போலதான் விஜய் டிவியும் மற்றவர்களை போல அப்படிய் பார்த்துவிட்டு என்னால் போக முடியாது. இது சிறுவர்களை மகிழ்விக்க என்ற உங்கள் கூற்றை என்னால் மட்டுமல்ல யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் சிறுவர்களை மகிழ்விக்கதான் அவர் முக்குகிறாரா முணங்குகிறாரா நல்ல டிவி பாருங்க சார்.

      யாரோ ஒருவன் ஒரு பெண்ணை பலத்காரம் செய்கிறான் அதை பற்றி டிவியில் பார்க்கும் போது இப்படி பலாத்காரம் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி கருத்து சொல்லும் போது உங்களை போல உள்ளவர்கள் வந்து சார் அவர்கள் பலாத்காரம் செய்வதை பார்த்து ரசியுங்கள் இல்லை என்றால் பேசாமல் சேனலை மாற்றிக் கொண்டு உங்கள் வழியில் செல்லுங்கள் என்று சொல்வது போல இருக்கிறது நீங்கள் சொல்வது நண்பரே

      Delete
    2. உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன்.. இது நாள் வரையில் திரு. மனோ அவர்கள் விளையாட்டாகத்தான் அவ்வாறு நடந்துகொள்கிறார் என நினைத்தேன்.. உண்மையில் வேறு காரணம் இருக்குமோ?

      ஆனால்.. உலகிலேயே அனைவரும் வருந்தத்தக்க, மிகவும் அடிமட்ட செயலான பலாத்கார சம்பவத்தை, வெறும் சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுடன் சரிசமமாக ஒப்பிடும் நிலையில் தான் நம் தமிழ் சமுதாயம் உள்ளது என நினைக்கும் போது சற்று வலிக்கிறது நண்பரே..

      சூப்பர் சிங்கர்கள் வேறு, நம் சகோதரிகள் வேறு..




      Delete
  5. விஜய் டீவி சூப்பர் சிங்கர் பார்க்கறதை விட்டு ரொம்ப நாளாச்சு!

    ReplyDelete
    Replies
    1. பாருங்க அப்பதான் பதிவு போட நிறைய விஷயங்கள் கிடைக்கும்

      Delete
  6. அந்த நிகழ்ச்சியில் மனோவைப் பார்த்தவுடனே, அப்படி ஒரு எரிச்சல் ஏற்பட்டச்சு. உடனே வேற நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

    நீங்கள் சொல்வது உண்மை, எல்லோருக்கும் பாடும் வரத்தை இறைவன் கொடுப்பதில்லை தான்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்ப்பது அந்த சிறு குழந்தைகளின் பாடல் திறமைக்காகவே ஆனால் விஜய் டிவிகாரர்கள் நினைப்பது என்னவோ இவர்கள் இந்த மாதிரி கோணங்கி செயல்களால்தான் என்று நினைத்து இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறார்கள்

      Delete
  7. மிக நன்றாகச் சொன்னீர்கள்! நீங்கள் இப்ப குறிப்பிட்டுள்ள இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை...இதற்கு முன்பு போன சூப்பர் சிங்கரிலேயெ அவர் இது போல வேஷம் இட்டு வந்தார் என்பது நினைவு....அப்பொதே அது ரசிக்கும்படியாக இல்லை......இந்த நிகழ்சியைப் பார்ப்பதும் மிக அரிதாகிவிட்டது! விஜய் டிவி ரொம்ப போரடிக்கத் தொடங்கிட்டாங்க......

    ReplyDelete
    Replies
    1. வேஷம் போடுவதை தவறு என்று சொல்லவில்லை ..நீங்கள் சொல்வது போல ரசிக்கத்தக்காதக இல்லை அதைத்தான் சுட்டிக் காட்டுகிறோம். அது அவர்களுக்கு புரிந்தால் சரி

      Delete
  8. மற்ற இரு குயில்களுக்கும் வேஷம் போட்டு விட்டிருக்கின்றீர்களே...மதுரைத் தமிழா விஜய் டிவி காப்பி அடிக்கப் போகின்றார்கள்!

    ReplyDelete
    Replies

    1. விஜய் டிவி காப்பி அடித்தால் கிறிஸ்துவ பாடல்களுக்கான கெட்டப் ரவுண்ட் என்று பெயரிடுவார்களோ?

      இதற்கு முன்னால் நான் எனது பதிவில் நான் ரிமிக்ஸ் செய்த கிராபிக்ஸை நீயா நானா புகழ் கோபிநாத் காப்பி பண்ணி எனது கிராபிக்ஸில் எப்போதும் நான் இடும் அவர்கள் உண்மைகள் என்ற பெயரை மட்டும் அழித்து விட்டு தனது முகநூலில் வெளியிட்டு இருக்கிறார் அவர் எனது பெயரை இருட்டடிப்பு செய்தாலும் அது நான் மிக்ஸ் பண்ணிய கிராபிக்ஸ் என்பதால் நம் படைப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் என்று அறியும் போது ஆச்சரியமாக இருந்தது.

      Delete
  9. காசே தான் கடவுளடா,

    ReplyDelete
  10. ஒருவர் தன் தரத்தை வாழ்நாலள் முழுவதும் காப்பது யாருக்குமே கடினம். மனோ ஒரு காலத்தில் பாடி கொஞ்சம் சம்பாரித்து இருக்கலாம். அதெல்லாம் எத்தனை நாளைக்குத் தங்கும்? "ரெகுலர் இண்கம்" என்பது எல்லா மனிதருக்கும் அவசியம். அதனால்தான் ஹீரோக்கள் வில்லன்களாகி, வில்லன்கள காமெடியனாகிக்கொண்டு தங்கள் தரத்தைக் குறைந்துக்கொள்கிறார்கள்.

    மனோ வை அந்த ஷோ இயக்குனர் ஆடச்சொல்லுகிறார். அதனால் அவர் ஆடுகிறார். YES! he does it for money. He can turn down the offer if MT writes him a check every month to maintain his "dignity". Can you? I can not.

    People accept Sunny Leone these days. Why not mano's ugly costumes??

    ReplyDelete
    Replies

    1. நானெல்லாம் மாடு மாதிரி செக் இழுக்கவும் இங்க பதிவு எழுத மட்டும்தான் பாஸ் லாய்க்கு... நீங்க சொல்லுற செக்கை தொட்டாலே எங்க வீட்டு மாமி பூரிக்கட்டையில் இருந்து உலக்கட்டைக்கு மாறிடுவாங்க..


      பாஸ் நான் எல்லோரையும் மதிப்பவன் அது போலத்தான் மனோ மீதும் எனக்கு மரியாதை உண்டு. விஜய் டிவிகாரகளிடும் உள்ள மோசமான அவர்களது நிகழ்ச்சிகளில் வரும் ஆண்களுக்கு பெண் வேடம் அணிந்து பார்ப்பது அதுதான் அவர்களுக்கு தெரிந்த மக்களை கவரும் வழி என்ற ஒரு கீழ்த்தரமான பழக்கம். அப்படிபட்ட டிவியில் மனோ பெண் வேடம் அணிந்து வருவது இயல்புதான் அப்படி வேஷம் அணிந்து வரும் மனோ மிதும் தப்பு சொல்லவில்லை ஆனால் அப்படி வேஷம் அணிந்து வரும் மனோ உம்ம்ம்ம்ம் ஆஆஆஆ ஊஊஊஊஉ என்று முக்கி முணங்குவது மிக அருவருப்பாக எனக்கு தோன்ருகிறது ப்லருக்கும் தோண்றுகிறது அதனால்தான் இந்த பதிவே. இப்படி நாம் சுட்டிக்காட்டுவதால் அவர் தன் தவறை திருத்தி கொள்ள வாய்ப்பு உண்டாகும்.... அவரால் காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவருக்கு ஜால்ரா தட்டலாம் ஆனால் நாம்தான் யாரிடமும் காரியம் எதிர்பார்த்து செய்யாததால் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுகிறோம்...

      Delete
  11. கேவலம்... இதை மனோ ரொம்ப நாளாகவே செய்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. மனோ செய்கிறார் என்பதை விட பணத்திற்காக மனோவை ஆட்டி வைக்கிறார்கள் இந்த விஜய் டிவிகாரார்கள்

      Delete
  12. பணமா? மானமா? என்றால் பணம் தான் முதலில் நிற்கிறது.

    ReplyDelete
  13. விஜய் டிவியில் இதுபோல் இன்னும் பல கேவலங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன !

    ReplyDelete
  14. பணம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது... இந்த நிகழ்ச்சியை, பொதுவாகவே டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது குறைவு..... எப்போதாவது சானல்களை மாற்றிக் கொண்டிருக்கும்போது பார்ப்பதோடு சரி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.