Tuesday, June 24, 2014




மோடியின் உத்தரவால் கேலிக்குரியவர்கள் ஆகும் மத்திய அமைச்சர்கள்

செய்தி :சமூக வலைதளங்களில் பங்கு பெற அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு  புதுடில்லி: பேஸ்புக் மற்றும் டுவீட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை கூடுதல் செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

செயலாளார் : என்ன அமைச்சரே சமூக வலைதளங்களில் பெண்களின் தளங்களுக்கு சென்று அவங்க அழகாக இருக்காங்க அவர்கள் கருத்து அருமை என்று கருத்தும் லைக்ஸும் போட்டு வருகிறீர்கள்?


அமைச்சர் : யோவ் மோடி சாப்தான் சமூகவலைதளங்களில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார் அல்லவா அதானல் தான்

செயலாளார் : ஙே !!!!!!!

செயலாளார் : என்ன அமைச்சரே சமூகவலைதளங்களில் பங்கெடுக்காமல் எப்ப பார்த்தாலும் மக்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்கிறீர்கள் அப்படி செய்தால் உங்கள் பதவி பறிபோகிடும் தெரியுமல்லவா?

மத்திய அமைச்சர் : ஙே !!!!!!!

பாராளுமன்றமா? பள்ளிக் கூடமா?மோடியை டீச்சராக கற்பனை பண்ணி இதை படியுங்கள்

மோடி தலமையிலான அமைச்சரவை கூட்டதில் : எங்க எல்லோரும் உங்க லேப்டாப்பை எடுத்து வந்து சமூகவலைதளங்களில் எத்தனை ஸ்டேடஸ் போட்டீங்க என்று காண்பிங்க?


மேனகா காந்தி :மோடி சாப் மோடி சாப் இந்த அமைச்சர் என்னுடைய கருத்தை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் பண்ணி இருக்கிறார்!

விஜயகாந்த் : மோடி சாப் சோனியா காந்தி ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தா சேர்த்து கொள்ளலாமா இல்லையா?

மோடி : பாத்தீங்களா நம்ம மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி எப்படி தீயா வேலை பார்க்கிறார் அவருக்கு எத்தனை லைக்ஸ் விழுந்திருக்குதுன்னு?
மற்ற அமைச்சர்கள் கோரஸாக: மோடி சாப் அது அவரின் கருத்துக்கு கிடைச்சது அல்ல அவர் பெண் என்பதால் கிடைத்த லைக்ஸ்


அமைச்சர் : மோடி சாப் எதுக்கு என் பதவியை பறிச்சிட்டீங்க?

நீ மதுரைத்தமிழ்ன் பதிவை எல்லாம் படிச்சு அனானி பெயர்ல அவருக்கு ஆதரவா கருத்து போட்டதா சிபிஐ எனக்கு தகவல் தெரிவிச்சிருக்கு அதனாலதான்

பொன் ராதாகிருஷ்ணன் :மோடி சாப் எனது வலைத்தளத்தில் பிரச்சனை சரியாக இயங்கவில்லை அதனால என்னால் பதிவுகள் போட முடியலை..

மோடி :இந்த நொண்டிச் சாக்கு எல்லாம் வேண்டாம் நீங்க திண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு போன் கால் போட்டு இருந்தா ஒரு நொடியில தீர்த்து வைச்சிருப்பார்ல


மோடி :கருத்து ஸ்டேடஸ் போடச் சொன்ன யாருப்பா கவிதையை போட்டது அப்படி செய்தா அடுத்த தேர்தலில் நமக்கு ஒட்டு கிடைக்காது புரிஞ்ச்சுகங்க.


மோடி : இந்த மதுரைதமிழனின் நக்கல் தாங்கலேயே அதை நிறுத்த வழி கண்டுபிடிக்க சொன்னேன்லா யாராவது கண்டு பிடிச்சீங்கள்ளா?

மோடி சாப் அவன் யாருக்கும் பயப்பட மாட்டான் அவனுக்கு பயமெல்லாம் அவன் மனைவிக்கிட்டதான், அவ பூரிக்கட்டையால் அடிப்பது சமுகதளங்களில் பிரபலம் அவங்களுக்கு நம்ம ராணுவத்தை கொண்டு சிறப்பாக டிரெய்னிங்க் கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைக்கிறோம்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. பூரிக்கட்டை அடியையே உங்களால் தாங்க முடியல! இதுல, ராணுவத்துல பயிற்சி கொடுக்கப் போறாங்களா!? மதுரை தமிழா! உன் கதி இனி அதோ கதிதான்!!

    ReplyDelete
  2. அருமையான கற்பனை.

    ReplyDelete
  3. ஆமா அமைச்சரவை கூட்டத்தில் விஜய்காந்த் எப்படி வந்தாரு?

    ReplyDelete
  4. இப்போ சொல்லுங்க பதிவுலகில் சிறந்தவர் அந்த மோடியா? இல்ல நம்ம டி.டி யா?(அண்ணாவா)

    ReplyDelete
  5. அருமையான கற்பனை.. ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  6. அருமை ... அருமை...
    பதிவர்களை மோடியோட பேச வைத்து சிரிக்கவும் வச்சிட்டீங்க..

    ReplyDelete
  7. அந்த இராணுவத்துக்கு பூரிக்கட்டை அடி வாங்கிய அனுபவமில்லை போலியிருக்கிறது. அதனால்தான் பூரிக்கட்டை அடிவாங்கச் சொல்லி மோடி சாப்..மோதி பார்க்கச் சொல்லுது.

    ReplyDelete
  8. ஆஹா என்னமா ஒரு கற்பனைப் பதிவு! அது சரி ராணுவ ட்ரெயினிங்க் யாருக்கு? உங்களுக்கா...இல்லை சகோதரிக்கா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.