Sunday, May 25, 2014




கோமாளிகளை உருவாக்கும் விஜய் டிவி.



விஜய்டிவியின் சூப்பர் சிங்கர்என்ற டிராமா என்ற பதிவை வெளியிட்டு இருந்தேன்அந்த பதிவு வெளிவந்த ஒரு சில தினங்களில் ஒரு பதிவர் விஜய் டிவியை பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.. அதில் நண்டு ஜெகன் ,சந்தானம் சிவகார்த்திகேயன் , மா.கா.பா, கோபிநாத் (கோமாளிகளின் அறிமுகத்திற்கிடையே கோபிநாத பெயர் வந்து இருந்தது எனக்கு ஆச்சிரியம் அளித்தது ) போன்றவர்களின் படங்களை வெளியிட்டு அவர்களைப் பற்றி எழுதி இவர்கள் திரையுலக நட்சத்திரங்களாக உலா வருகின்றனர் என்று எழுதி இருந்தார். அவர் அதை மட்டும் சொல்லிவிட்டு போயிருந்தால் இந்த பதிவு எழுதவே எனக்கு தோன்றி இருக்காது. ஆனால் அவர் அதோடு விடாமல் இப்படி'''எனக்கு விஜய் ஒரு மாபெரும் புரட்சியை நடத்துவதாகவேபடுகிறது. '' என்று சொன்னதோடு 'புதிய திறமைகளை அடையாளம் கண்டு புதிய நட்சத்திரங்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலை ஒரு ஆரோக்கியமான சமூக நல இயக்கம் விஜய். என்று பாராட்டியும் இருந்தார்


இதை படித்தவுடன் என் மனதில் தோன்றிய கருத்துக்களை உங்கள் முன்னால் இப்போது நான் வைக்கிறேன்.

என்ன விஜய் டிவி ஒரு சமுக நல இயக்கமா அது நட்சத்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலையா? இதை படிக்காதவர் ஒருவர் சொல்லி இருந்தால் சிரித்து கொண்டே போகலாம் ஆனால் படித்தவர் ஒருவர் சொல்லி செல்லும் போதுதான் என்ன மாதிரியான சமுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரிகிறது.

விஜய் டீவி என்ன சமுக நலத் தொண்டு புரிந்து இருக்கிறது எத்தனை சமுக நலம் காக்கும் அல்லது பாடுபடும் நட்சத்திர தலைவர்களை உருவாக்கி இருக்கிறது. அவர்கள் உருவாக்குவது எல்லாம் கோமாளிகளும் கூத்தாடிகளும் தெருப்பாடகர்களை மட்டும்தான் அவர்கள் தான் சமுக நல இயக்க நட்சத்திரங்களா என்ன?

தமிழக பண்பாட்டை கலாச்சாரத்தை கெடுத்து மேலைநாட்டு கலாச்சரத்தை நம் மண்ணில் விதைத்து கொஞ்சம் கொஞ்சமாக அறுவடை செய்து அழித்து கொண்டிருப்பதுதான் விஜய் டிவி செய்யும் சமுக நலமா என்ன? அட போங்கப்பா திரை உலகில் முகத்தை காட்டிவிட்டால் அது சாதனையா என்ன?

வெளிநாட்டுக்காரன் தமிழ் நாட்டில் பணத்தை கொட்டி கலாச்சாரத்தை கெடுத்து பல கோமாளிகளை உருவாக்கி, பார்ப்பவர்களையும் கோமாளியாக்கி செல்கிறான் அதைப் பார்த்து நீங்கள் ஆஹா ஒகோ என்று பாராட்டுகிறீர்களே? உங்கள் நிலமையை எண்ணி எனக்குதான் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. அறிஞர்களை மதிக்காத ஒரு கலாச்சாரத்தில் கோமாளிகள் கொண்டாடப்படுவதில் வியப்பொன்றுமில்லை.

    ReplyDelete
  2. சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!

    ReplyDelete
  3. இன்றைய ஊடகங்கள் வணிக நோக்கில் இயங்குகின்றன. அவை ஒருபோதும் பண்பாட்டைப் பேண முன்வரா!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வேட்டி சட்டையுடன்தான் வேலைக்கு போகிறீர்களா?? நாம் கலாசாரத்தை பின்பற்ற மாட்டோம் ஆனால் மற்றவர்கள் செய்ய வேண்டும்.. ஊருக்கு மட்டும் உபதேசம்!!!!!

      Delete
  4. எப்படியோ. இந்த சானல எல்லாரும் பாக்கறாங்களாம். ஏன் வூட்டு மந்திரியம்மா இந்தப் பாட்டப் பாடியே கடுப்படிக்கிறாங்க.

    /நான் ஒரு முட்டாளுங்க. ரொம்ப நல்லாப் படிச்சவங்க கோடிப் பேரு சொல்றாங்க/

    கோபாலன்

    ReplyDelete
  5. மேலே படத்தில் உள்ளவர்களெல்லாம் எவ்ளவோ பராவாயில்லை, நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம், மெயின் ஹோஸ்ட் ஒருத்தன் இருக்கானே (பெரிய மேதாவிமாரிப் பேசுவான்) அவன் என் கையில சிக்கினான், சட்னிதான்.

    He is the most annoying character and offends everyone in the name of "joke"! What an IDIOT he is.

    ReplyDelete
  6. One day, he asked Vijay Sethupathy what is biology in Tamil. VS does not seem like well-educated guy but he answered correctly as uyiriyal. This half-baked IDIOT CONFUSED him and made him to screw up! Never have seen an idiot like him hosting a tv show!

    ReplyDelete
  7. என்ன செய்வது...?
    அறிஞர்கள் யாரும் திரைக்கு வரவேண்டும் என்று விருப்பப்படுவதில்லையே....

    ReplyDelete
  8. //அவர்கள் உருவாக்குவது எல்லாம் கோமாளிகளும் கூத்தாடிகளும் தெருப்பாடகர்களை மட்டும்தான்//

    நீங்கள் கூறியது அபத்தமாகப் படுகிறது. அவர்கள் சமூக நல இயக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை ஆனால் அவர்கள் கோமாளிகளும் கூத்தாடிகளும் தெருப்பாடகளும் அல்ல. மாறாக அவர்கள் கலைஞர்கள் அல்லது துறை சார்ந்த திறமைசாலிகள் ஆவர்.

    எனது கருத்துப்படி, தமிழில் சிறந்த பொழுதுபோக்ககிற்கான தொலைக்காட்சி விஜய் ஆகும்

    ReplyDelete
  9. கோமாளிகளை ரசிக்கும் கூட்டமாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அதை சரியாக புரிந்து கொண்டிருக்கிறது விஜய் டீவி!

    ReplyDelete
  10. :((((

    இந்த டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் இருப்பதே மேல்!

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
      வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
      வாய்ச் சொல்லில் வீரரடி

      கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
      நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
      நாளில் மறப்பா ரடீ

      ஒரு சவாலாக கூறுகிறேன் !!! vijay tv பார்க்காமல் இருந்துதான் பாருங்களேன்!!!!

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.