Sunday, April 20, 2014






மோடி என்ன விவேகனந்தரா நம்ம கலாச்சாரத்தை காப்பாற்ற?




தான் டீ விற்று வாழ்க்கையில் முன்னேறியவன் டீக்கடைக்காரன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி தான் மிக எளிமையானவன் என்று பிரச்சாரம் செய்யும் மோடி தமிழகம் வரும் போது எந்த டீக்கடைகாரனையாவது சந்தித்து விசாரித்து தான் அந்த டீக்கடைகாரனின் நண்பனாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லியது உண்டா என்றால் இல்லை என்று பதில்தான் வரும்.



ஆனால் இந்த எளிமையான டீக்கடைகாரர் பிரதமர் பதவிக்கான போட்டியில் குதித்தவுடன் ரஜினி தனது நண்பர் என்று சொல்லி அவர் வீட்டில் டீ குடிக்க வரலாமா என்று கேட்டு அங்கு சென்று டீ குடித்து வந்து இருக்கிறார். பிரதமர் போட்டியில் குதித்தவுடனே அவர் கண்களுக்கு நண்பராக தெரிபவர்கள் பணக்காரர்கள் மட்டுமே ஏழை எளிய டீக்கடைக்காரர்கள் அல்ல. அப்படி பட்ட இவர் பிரதமராக வந்தால் ஏழைகளுக்காக என்ன செய்து விடப் போகிறார்? மக்களே உங்களுக்கு சிந்திக்கும் திறன் இருந்தால் சிந்தியுங்கள்.




திருமணம் செய்து கொள்வது ஒன்றும் கேவலமான செயல் அல்ல. அதை மறைப்பதும் அவசியம் அல்ல. எல்லா திருமண வாழ்க்கையும் வெற்றி பெறுவதும் அல்ல அப்படி வெற்றி பெறாமல் தோல்வி அடைவது இழுக்கும் அல்ல. அதனால் அதை மறைக்க வேண்டியது அவசியம் அல்ல. ஆனால் விவேகானந்தர் போல பரிசுத்தமானவர் என்று எல்லோரும் தன்னை கருதவேண்டும் என்று கருதி இத்தனை ஆண்டுகாலம் அதை மறைத்து நாடகமாடியவர்தான் இந்த மோடி. இத்தனை ஆண்டுகாலம் மறைத்து நாடகமாடியவர் தன் பிரதமர் ஆசையை இந்த நாடகம் பாதிக்கும் என்று தெரிந்தவுடன் தன் பதவி வெறிக்காக இப்போது உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அப்படி உண்மையை ஒப்புக் கொள்ளக் காரணம் தன் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுமோ என்ற பயத்தில்தானே ஒழிய தன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அல்ல



பெண்களை , திருமணத்தை புனிதமாக கருதும் நம்பாரத கலாச்சராத்தை மதிக்காத இந்த மோடிதான் நம் கலாச்சாரத்தை உலக அரங்கில் நிலை நிறுத்த போகிறாராம்...மக்களே இன்னுமா இவரை நம்புகிறீர்கள்.




மோடி அலை அலை என்று சொல்லி அந்த அலையை நிருபிக்க திருச்சி மற்றும் சென்னையில் நடந்த கூட்டத்திற்கு பலமாதங்களாக கஷ்டப்பட்டு பணத்தை கொட்டி கூட்டத்திற்கு ஆட்களை வரவழைத்தார்கள் இது வரவழைக்கப்பட்ட கூட்டம் தானாக வந்து சேர்ந்த கூட்டமல்ல. ரஜினியை சந்தித்து விட்டு மோடி கலந்து கொண்ட கூட்டத்திற்கு வந்த ஆட்களின் எண்ணிக்கை மூவாயிரம்மட்டும்தான் இதை நானாக சரடுவிடவில்லை மோடியின் துதிபாடும் தினமலரில் வந்த செய்தியை பார்த்துவிட்டுதான் சொல்லுகிறேன்.




வடிவேலு ஏதாவது ஒரு தலைவரை எதிர்த்து ஒரு பொதுகூட்டம் கூட்டப்போவதாக ஒரு நாள் முன்னால் அறிவித்துவிட்டு அடுத்த நாள் கூட்டம் கூட்டினால் மோடிக்கு வந்த கூட்டத்தை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் ஏன் விஜயகாந்த், ஸ்டாலின் கூட்டங்களுக்கு கூட மோதிக்கு வந்த கூட்டத்தை விட அதிகமாகவே கூடுகிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் அலை உலை என்று ஊடகம் மூலம் விளம்பரம்படுத்துவதில்லை. மக்களே இன்னுமா நீங்கள் மோடியின் பொய் அலையை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.




சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகில் மிகப் பெரிய சிலை குஜாராத்தில் அமைக்கிறாராம். இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் புகழப்படும் தலைவருக்கு சிலை அமைப்பதில் தவறு ஏதும் கூறவில்லை அதை ஏன் குஜராத்தில் அவர் அமைக்க வேண்டும். குஜராத்துதான் மிக வளர்ச்சியடைந்த மாநிலமாகிவிட்டதே அதனால் வளர்ச்சியடையாத மாநிலமாக பார்த்து அங்கு அமைத்தால் அந்த மாநிலத்திற்கு சுற்றாலா மூலம் நல்ல வருமானம் கிட்டுமே அந்தப் பரந்த மனப்பான்மை இல்லாதவராகி இருக்கிறார் இந்த மோடி...தன் மாநிலம் என்று சுயநலத்துடன் செயல்படுகிறார் இந்த தேசியத்தலைவர்.



அட மக்களே இன்னுமா இவரை நம்புகிறீர்கள்...



விவேகானந்தர் வேஷம் போட்டு ஒழிந்து கொண்டு இருக்கும் நித்தியானந்தா சுவாமிகள்தான் மோடி கதவை திற காற்று வரும் என்றார் நித்தியானந்தா ஆனால் எனக்கு ஒட்டு போடு நாட்டில் மதக்கலவரத்தை உண்டாக்கி அதில் குளிர்காயப் போகிறேன் என்று இந்த மோடியானந்தா கனவுக்கோட்டை போடுகிறார். அந்த கனவை நினைவாக்குவதும் கலைப்பதும் மக்களே உங்கள் கையில்தான் இருக்கிறது. ஏதுவாக இருந்தாலும் அது என்னைப் பொருத்தவரையில் இந்த தேர்தல் ஒரு வேடிக்கை மட்டுமே ஆனால் அது உங்களை பொருத்தவரை உங்களின் எதிர்காலம். அதனால் சிந்தியுங்கள் செயல்படுங்கள்..



The simplistic argument is this: “India is a country with multiple religions, more than a dozen major languages and numerous ethnic groups and tribes. Mr. Modi cannot hope to lead it effectively if he inspires fear and antipathy among many of its people.

மோடி ரஜினி மற்றும் விஜயை சந்தித்த போது அரசியல் பற்றி பேசவில்லை இந்த வீடியோவில் நீங்கள் கண்டதைதான் பார்த்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்களோ என்னவோ?

 






மோடிக்குதான் நீங்கள் ஒட்டுப் போடப் போகிறீர்கள் என்றால் ஒட்டுப் போட்ட பின் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் அணிந்திருக்கும் பேண்டை சற்றே கிழே இறக்கி உங்கள் பின் புறத்தை காட்டி நில்லுங்கள். ஒரு வேளை கன்னி கழியாத மோடி வெற்றி பெற்றால் உங்கள் பின் புறத்தை நன்றாக கவனித்து கொள்வார்.மக்களே நீங்கள் தப்பாக ஏதும் நினைத்து கொள்ள வேண்டாம் நான் சொல்ல வருவது என்னவென்றால் மிஸ்டர் க்ளீன் உங்கள் பின்புறத்தை சுத்தம் செய்துவிடுவார் என்றுதான்...ஹீஹீஹீ



அன்புடன்
மதுரைத்தமிழன்









6 comments:

  1. என்னாங்க. நீங்களும் ஏழை பணக்காரன் என்று பேச ஆரம்சிட்டீங்க.

    குஜராத் சோகக் கலவரத்தை ஒரு மதக் கலவரமாகவே பார்க்கிறோம். அளவுக்கு மீறிய பழிவாங்கும் செயல் என்றும் எடுத்துக் கொள்ளலாம். தவறு மற்ற பக்கமும் இருக்கிறதே. இதுபோன்ற எரிக்கும் செயல் தனக்கு நடந்திருந்தால் மற்றவர்களும் வன்முறையில் ஈடுபட்டிருப்பார்கள், உயிர் இழப்புக்கள் மட்டுமே குறைந்திருக்கும்.

    அவர் என் மகள் இல்லை. என் மனைவி அவருக்கு அம்மா என்று சொன்னவரை 10 வருசத்துக்கு மேல் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மற்றொரு யோக்கியத் தலைவரும் 10 வருசம் இருந்தார். நான் முற்றும் துறந்த முனிவரும் அல்ல அவர் படிதாண்டாப் பத்தினியும் அல்ல என்று கூறிய தலைவரும் நம்மிடையேதான் இருந்தார். இந்த ஒரே காரணத்துக்காக மட்டும் மோடியைத் தமிழகம் எதிர்ப்பது ஏனோ.

    மற்ற கட்சியிக்காரங்க முடிஞ்சப்பறம் பேண்டையையும் களட்டிக் கொண்டு போய்ருவாங்களே..

    கோபாலன்

    ReplyDelete
  2. மோடிக்கு இல்லை என் ஓட்டு என்பது ரொம்ப நாளுக்கு முன்பே முடிவாகிவிட்டது! யாருக்கு என்பதில்தான் இன்னும் குழப்பம் இருக்கிறது!

    ReplyDelete
  3. இந்த கட்டுரை போட காங்கிரஸ்-கிட்ட எவ்வளவு வாங்குனீங்க பாஸ்.

    பிரமாதம் :)

    காசு வாங்கிட்டு எழுதுற இந்த பொழப்புக்கு ------, மிச்சத்தை உங்களுடைய ஒரே மனைவிகிட்ட கேளுங்க :)

    ReplyDelete
  4. ohh payama publish panna..

    idhukkum kaasa.. bosss.. engeye poitteenga..

    ReplyDelete
  5. எளிமை, டீக்கடைக்காரன் எல்லாமே ஏமாத்து வேலை, வர்றது அதானி கொடுத்த தனி விமானத்துல. இவங்க எளிமையைப் பத்தி பேசுறானுங்க. என்னமோ வெள்ளைக்காரன் இந்து-முஸ்லீம் பிரிவினை செஞ்சி கொள்ளையடிச்சான், அதே கொள்ளையை அதே மாத்ரி ஆனா பாரதமாதா ந்க்கிற பேரு.

    நல்லா இருந்த நாட்டை நாசமாக்க வந்துட்டாங்க!

    ReplyDelete
  6. முகப்பு படம் பயங்கரம் தான்!!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.