Sunday, March 2, 2014






பொதுவாக குடிக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது அதற்கு காரணம் கேட்டால் அவர்களிடம் இருந்து பல காரணங்கள் வந்து குவியும் உதாரணமாக சரக்கு நாறித் தொலைக்கிறது அதனால் கணவன் பக்கத்தில் போவ முடிவதில்லை ( மனைவி ஊத்த வாயோடு பக்கத்தில் வரக் கூடாது என்றுதானே நாங்கள் குடிக்கிறோம் என்று குடிப்பவர்கள் சொல்லுகிறார்கள் ) குடிப்பதால் அநாவசியமான செலவு ஏற்படுகிறது (பக்கத்து விட்டுக்காரரி பொறாமைபட வேண்டி பத்தாயிரம் , இருபதாயிரத்துக்கு சேலை எடுப்பது அநாவசிய செயல் இல்லையா என்று குடிப்பவர்கள் கேட்கிறார்கள் ) குடும்பத்தாரின் பேச்சை கேட்பதில்லை ( ரொமாண்டிக்கா பேசினால் கேட்கலாம் ஆனால் எப்ப பார்த்தாலும் பொறந்த வீட்டு புராணத்தையே பேசி வந்தால் எவ்வளவு நாள்தான் கேட்டுக் கொண்டிருப்பது) பக்கத்து வீட்டுப் பெண்கள் தப்பாக எடுத்து கொள்வார்கள் (க்கத்துவீட்டுப் பெண்கள் அழகாக இருந்தால் நாங்கள் ஏன் குடித்துவிட்டு கெட்ட பெயர் எடுக்கப் போறோம் ) குடிகாரன் வீடு என்று சொல்லி பெண்களின் குடும்பத்தார் வருவதில்லை (அவங்க எல்லாம் வந்து டெரா போடுக் கூடாதுன்னுதானே நாங்க இந்த நாடகம் ஆடுகிறோம்) குடிகாரக் கணவன் அருகில் அமர்ந்து நாலு நல்ல வார்த்தை பேச முடிவதில்லை.. ( நாலு நல்ல வார்த்தை?? அம்மா அப்பாவுக்கு கார வாங்கி தரணும் தங்கை கல்யாணதிற்கு பண உதவி செய்யனும் தம்பி படிப்பிற்கு உதவி செய்யனும், இடுப்பு சைஸுக்கு தங்க ஒட்டியாணம் வாங்கனும் இப்படி பேசுவதான் நாலு நல்ல வார்த்தை என்றால் யாருக்குங்க கேட்கப் பிடிக்கும்)இப்படி பல காரணங்களை அடிக்கி கொண்டே போவார்கள்.



இந்த காரணங்கள் உண்மையானதுதானா என்று மதுரைத்தமிழன் ஒரு ஆராய்ச்சியை குடிப்பவர்களின் குடும்பத்தில் நடத்திய போது கிடைத்த புள்ளி விபரங்களின் படி அறிந்தது என்ன வென்றால்?



பெண்கள் குடியை வெறுப்பதற்கு மேலே கூறிய காரணங்கள் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது.



அப்படியென்றால் வேறு என்ன காரணம் இருக்க முடியும் என அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கிறது தானே?



அந்த காரணம் பெரிசா வேறு ஒன்றுமில்லைங்க.. ஆண்கள் குடித்த பின் மிகவும் பலசாலியாகவும்தைரிய சலியாகவும் ஆகி மனைவியின் பேச்சுக்கு பயப்படாமல் திருப்பி பதில் பேசுவதாகவும் மனைவி அடிக்க வந்தால் திருப்பி பதிலுக்கு அடித்துவிடுவதாலும்தான் குடியை பெண்கள் வெறுப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன அதுமட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் பிடியை இதனால் இழக்க நேரிடுகிறது அதனால்தான் இதை அவர்கள் கடுமையாக எதிர்கின்றனர்

இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக நடத்தி உண்மையை மறைக்காமல் தெரிவித்த மதுரைத்தமிழனின் செயலை பாராட்டி அவருக்கு நோபல் பரிசு கொடுப்பதற்காக அமெரிக்கா அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் முயற்சிக்கின்றன என்று அதிகாரப் பூர்வ வட்டாரங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன,





அன்புடன்
மதுரைத்தமிழன்


16 comments:

  1. தெரியாத்தனமா நோபல் பத்தி எழுதிட்டேன் பாஸ்
    என்னை மன்னிச்சுடுங்க !!
    //இப்டியே கவிதை எழுதியே காலத்தை ஒட்டிடலாமா
    இல்ல கட்டுரையை தொடர்ந்து எழுதலாமா ?
    நல்ல முடிவா சொல்லுப்பா -வெற்றி கொடிகட்டு வடிவேலுவின் வாய்ஸில் படிக்கவும்//

    ReplyDelete
  2. நோ "பல்" பரிசு கண்டிப்பாக உண்டு...

    ReplyDelete
  3. TV சீரியல்கள்ள, சொல்வதெல்லாம் உண்மை மாதிரி, வர எல்லாப் பொம்பளங்க மட்டும் அழணுமா. எங்களுக்கும் அவுங்களப் போல அழுது நடிக்கணும்னு ஆசையா இருக்காதா. நீங்க நல்ல புருசனா இருந்தா இது எப்படிங்க முடியும். சும்மா குடிங்க குடீங்க..

    வருத்தப் படத்துடிக்கும் மாதர் சங்கம்.

    மனைவிக்காக, கோபாலன்

    ReplyDelete
  4. ஆனா உங்க வீட்டுல இருந்து பூரிக்கட்டை பறந்து வருதுன்னு கேள்விப்பட்டேனே! ஹிஹி!

    ReplyDelete
  5. உங்க ஆராய்ச்சியே தப்புன்னு சொல்லுவேன்.
    உங்க ஆராய்ச்சிப்படி பார்த்தா, நீங்க பூரிக் கட்டையால அடி வாங்காம இல்ல இருந்திருக்கணும்??????????

    ReplyDelete
  6. "நோ" பல் ஆகிவிட்டதா மதுரை தமிழனுக்கு?
    அடி அவ்ளோ பலமோ?
    பூரி கட்டையால் அடித்தால் தலையில்தான் உருளைகிழங்கு வரும், உமக்கோ பல்லெல்லாம் கொட்டி, அதற்காக இந்திய அரசும் அமேரிக்க அரசும் "நோ" பல் பரிசு கொடுக்கிறாங்களா?
    எங்கே எப்போது என்று கூறினால் அலை கடலென திரளும் கூட்டம்!!

    ReplyDelete
  7. நோபல் பரிசென்ன!? ஆஸ்காரே கொடுக்கலாம்!!

    ReplyDelete
  8. ஆண்கள் குடிப்பது பெண்களுக்குப் பிடிப்பதில்லை & தனக்குத் தராமல்! என்கிற ஜோக்தான் நினைவுக்கு வருது! எல்லாப் பல்லும் ஒழுங்காய் இருக்கிற மதுரைத் தமிழனுக்கு எதற்கு நோபல் பரிசு என்றுதான் தெரியவில்லை!

    ReplyDelete
  9. தமிழ்நாட்டு சரக்கு போலியாக நாற்றம் அதிகமாக வருவதான காரணமாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  10. சரக்கடிச்சுட்டு நாம மட்டும் என்ஜாய் செய்வது யாருக்குதான் பிடிக்கும் ஹி ஹி....

    ReplyDelete
  11. பூரிக்கட்டை பதிவில் வரவில்லையே என்று நாங்கள் யோசித்த போதுதான் அறிந்தோம், அது இருக்கவேண்டியவர்கள் கையில் இருந்து பறந்துகொண்டிருக்கிறது என்று!

    ReplyDelete
  12. சரியான ஆராய்ச்சி
    அன்புப் போதை கிடைக்காதவர்கள்தான்
    அதிகம் குடிக்கிறார்கள் என்பதே சரி
    மைண்ட் வாய்ஸ் அற்புதம்
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. இன்றைக்கு தமிழர்கள் குடிப்பது பயங்கரம்; அமெரிக்கன் தோத்தான். எப்பா சாமி; அதுவும் ஒரு அரைமணி அல்லது ஒரு மணியில் நாலு ட்ரிங்க்ஸ் (ஒரு ட்ரின்க் 45 ml). அடிப்பார்கள் தமிழர்கள். ஒரு quarter. இதை இங்கு binge drinking என்றும் சொல்வார்கள். சுருங்க சொன்னால் மருத்துவ ரீதியாக அவன் குடிகாரன். இரண்டு ட்ரின்குக்கு மேல் ஒரு நாள் குடிப்பது கெடுதல். நிற்க..

    90 விழுக்காடு அமெரிக்கர்கள் குடிப்பது மிக மிக குறைவு! உண்மையில் பலர் குடிப்பதே இல்லை! அதில் சிலர் ஒரு 12 அவுன்ஸ் சாதா பீர் (330 ml) வைத்துக்கொண்டு உறிஞ்சி கொண்டு தான் இருப்பார்கள வீக் எண்டில் குடிபவ்ர்கள் தான் அதிகம். அதுவும் மூன்று சாதா பீருக்கு (ஒரு பீர்=330 ml) மேல் போக மாட்டார்கள்--குடிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் -- இரண்டில் இருந்து மூன்று மணி நேரம்.

    தமிழ்மணம்+1

    ReplyDelete
  14. :))))

    என்னமா ஆராய்ச்சி பண்றீங்க மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  15. நோபல் பரிசெல்லாம் கொடுக்க முடியாது தம்பி முதல்ல
    பூரிக் கட்டையால அடி வாங்கி வாங்கியே ஊழ இடுகிறத
    விடுங்க அதுக்குப் பிறகு நாங்களே ஒரு முடிவுக்கு வந்த பின்னால்
    நோபல் பரிசைக் கொடுப்போம் .(அடுத்தவங்க குடிச்சா எதிர்த்து
    நிக்க முடியிறப்போ இவருக்கு மட்டும் என்னவாம் ?..குடிச்சே
    பிரச்சனையைத் தீர்க்க வேண்டியது தானே :)))))) )

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.