Tuesday, December 17, 2013

அரசியல் தலைவர்களின் தலை இங்கே உருட்டப்படுகிறது.





கலைஞர்: வாஜ்பாயி காலத்து பாஜக இன்று இல்லை....
மோடி : வாஜ்பாயி காலத்தில் திமுகவுக்கு இருந்த செல்வாக்கு இன்று இல்லையே..


ஜெயலலிதா "இன்னும் ஆறு மாதம் தான் தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும்..
மக்கள் : அப்புறம்... கரண்டே இருக்காதா என்ன?

இளங்கோவன்.. தி.மு.., என்ற அழுக்கு மூட்டையை பா.., சுமக்காது:
அப்ப காங்கிரஸ் கழுதைங்க மட்டும்தான் அழுக்கு மூட்டையை சுமக்கும் என்று சொல்லுறீங்களா


கலைஞர் :வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும்
திருமா :அப்ப‬ உங்களையே நம்பி இருக்கும் என்னை கைவிட்டுடிங்களா?

சிவராஜ்சிங் சவுகான் : மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய ஒயின்ஷாப் மற்றும் ஒயின் தயாரிப்பு கம்பெனிகளுக்கு அனுமதி கிடையாது.
ஜெயலலிதா : அவங்களுக்கு தமிழகத்தில் அனுமதிக்க & ஆதரவளிக்க நாங்க ரெடி, அவங்க ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.


சல்மான் குர்ஷித்: கீழ்மட்ட தொண்டர்களிடமிருந்து காங்கிரஸ் விலகிச் சென்றுவிட்டது என்பதை ஏற்க முடியாது.
சரிங்க தொண்டர்களும், மக்களும், காங்கிரசை விட்டு விலகிட்டாங்கனு சொல்லவரரீங்க சரிதானே


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. அருமை
    தொடந்தால் மிக்க மகிழ்ச்சி கொள்வோம்

    ReplyDelete
  2. ஆறு மாசம் நாராயணசாமி போல இந்த அம்மா ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதே பாட்டு தான்

    ReplyDelete
  3. அருமை. தினம் ஒரு அரசியல் செய்தியை எதிர்ப்பார்க்கும் அடிமட்ட தொண்டன்.

    ReplyDelete
  4. நல்லாதான் உருட்டுறிங்க!

    ReplyDelete
  5. தொடரட்டும் அரசியல் உருட்டல்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.