Monday, November 11, 2013

நீயா நானா புகழ் கோபிநாத் தன் பேஸ்புக் பக்கத்தில் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை (வெட்ககேடு)



 
நீயா நானா புகழ் கோபிநாத் தன் பேஸ்புக் பக்கத்தில் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை (வெட்ககேடு)

நீயா நானா கோபிநாத தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அது ஒரு கட்டுக்கதையாகௌம். இது அவரது கட்டுக்கதை அல்லது இன்னொறு தளத்தில் வந்த கட்டுக்கதையை இவர் ஷேர் செய்து இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இவரைப் போல புகழ் பெற்றவர்கள் தன் தளத்த்தில் ஒரு செய்தியை பகிரும் போது அது உண்மையா அல்லது சரியான தகவல்தானா என்று ஆராய்ந்து வெளியிட அல்லது பகிர வேண்டும் என்பது எனது கருத்து. காரணம் இவரைப் போல புகழ் பெற்றவர்கள் சொல்வதை மக்கள் பலரால் கவனிக்கப்படுகிறது. அதிலும் நம் தமிழ் மக்கள் ஆட்டுமந்தை கூட்டத்தை போல உள்ளவர்கள் அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று சிந்திக்காமல் அதை ஒரு வேதவாக்காக நினைத்து அதை நம்ப மட்டுமல்லாமல் அதை பலரிடமும் உண்மை என்று கருதி பகிரவும் செய்கிறார்கள்.

உதாரணமக அந்த செய்தியை படித்து விட்டு 6095 லைக்கும் 7443 பேர் ரீஷேரும் 1534 பேர் கருத்தும் தெரிவித்து இருக்கிறார்கள். இதில் ஒரு சிலரை தவிர அனைவரும் இதை மிக பயனுள்ள தகவல் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி என்று கருத்தும் தெரிவித்து இருக்கிறார்கள். இப்படியும் பல கூமுட்டைகள் இணையத்தில் வந்து படித்து செல்லுகிறார்கள் என்பதை நினைக்கும் போது அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை
இந்த செய்தியை படிக்கும் போது என் மனதில் எழுந்த கேள்விகள் இவைகள்:

ஒரு புகழ் பெற்றவர் செய்தியை பகிரும் போது இப்படிதான் மொட்டையாக பகிர்வதா?

பயணம் செய்த டாக்ஸி நிறுவனம் எது? இந்த சம்பவம் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு செல்லும் வழியில் நடந்தது? நீங்கள் டிரைவரிடம் காரை நிறுத்த சொன்ன போது அவர் நிறுத்தாமல் ஒட்டும் போது ஏன் போலீஸுக்கும் போன் செய்யாமல் கார் ஒனருக்கு போன் செய்தீர்கள்? இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது நீங்கள் நிறுத்த சொல்லியும் சம்பவம் நடந்த இடத்தில் நிறுத்தாமல் டிரைவர் சென்றார் என்ற உங்கள் வாதத்தை ஏற்றுக் கொண்டால் அந்த விபத்தில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் அடிபட்டு கிடப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது? உங்கள் டிரைவர் காரை மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு ஓட்டிஸ் செல்லும் வேகத்தில்தான் சென்றாரா என்ன? நீங்கள் போலீஸில் புகார் செய்து இருந்தீர்கள் என்றால் அது எந்த ஊர் போலீஸ் நிலையம் எந்த போலீஸ் அதிகாரி என்று நீங்கள் சொல்லாதது ஏன்? டிரைவரின் & போலீசாரின் கூற்றுப்படி இது அந்தப்பகுதியில் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி என்றால் போலீஸார் இது வரை ஏன் அந்த கும்பல் மிது நடவடிக்கை எடுக்கவில்லை? அல்லது ஏன் எந்த வித தினசரி நாளிதழ்களும் அதௌ பற்றி செய்திகள் வெளியிடவில்லை? வாகனத்தின் லைட்டை அணைத்துவிட்டு இரவு நேரத்தில் அந்த சாலையில் எப்படி அந்த டிரைவரால் வண்டியை ஒட்ட முடிந்தது? இல்லை சாலை ஒரத்தில் விளக்குகள் இருந்தால் காரின் விளக்கை அணைப்பதால் என்ன பலன்? பகல் நேரத்தை போலதான் இரவு நேரங்களில்தான் அநேக வாகனங்கள் செல்கின்றன அப்படி இருக்கும் போது வாகன லைட்டை அணைத்து விட்டு எப்படி ஒட்டி இருக்க முடியும்? அப்படி அவர் ஓட்டி இருந்தால் நீங்கள் இப்போ இருப்பது சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோதான்?



நீயா நானாவில் வாதத்தின் போது இரு தரப்பாரையும் மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் கோபிநாத் அவர்களே மேலே எனக்கு எழுந்த கேள்விகள் நீங்கள் இதை பகிரும் போது அல்லது சொல்லும் போது உங்களுக்கு எழவில்லையா என்ன??



நீங்கள் சொல்லும் கருத்துக்களை வேதவாக்கா எடுத்து கொள்ளும் தமிழகத்தில் வசிக்கும் கூமுட்டைகளுக்கு நீங்கள் செய்திகள் பகிர்வது இப்படிதானா? இது உங்களுக்கு வெட்கமாக தோன்றவில்லையா?



Shame on you Mr.Gopinath


அன்புடன்
மதுரைத்தமிழன்





இப்படியும் நாடகமாடி பணமோ,கற்போ,உயிரோ சூறையாடபடுகிறது... எச்சரிக்கை பதிவு............. இரவுப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை ,,,, நான் சில நாட்களுக்கு முன் வாடகைக்கு வாகனம் எடுத்து குடும்பத்தோடு வெளியூர் சென்றோம். அப்போது இரவு 10 மணி இருக்கும். ஒரு இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் செல்லும் போதே இடது ஓரத்தில் ஒரு வாகனம் உருக்குலைந்து காணப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நானும் எனது மனைவியும் வாகனத்தை நிறுத்துமாறு எங்களது ஓட்டுனரை கேட்டோம். ஓட்டுநரோ மிகச் சாதாரணமாய் பேசாமல் வாருங்கள், உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் இது,”என்று சொல்லி விட்டு நல்ல குத்து பாட்டை சத்தமாக போட்டுக் கொண்டு வேகமாக செலுத்தினார். எனக்கு, என் மனைவிக்கும் அந்த ஓட்டுனர் மீது கோபம் கோபமாக வந்தது. ”ஏன் இப்படி இருக்கின்றீர்கள், உன் அக்காள் தங்கைக்கு இப்படி நடந்தால் இப்படித் தான் செல்வீர்களா? ஒரு குழந்தை வேறு இருக்கின்றதுதயவு செய்து வண்டியை நிறுத்துங்கஎன்று சொல்ல ஓட்டுனர், இன்னமும் வேகமாக வண்டியை செலுத்தினார். நான் எனது அலைபேசியை எடுத்து அந்த வண்டி உரிமையாளருக்கு தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்னரே ஓட்டுனர் என்னிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்? இப்போது லேசாக பயம் வந்தது, சந்தேகமும் வந்தது. அவ்வப்போது என் மனைவியை வேறு திரும்பி பார்த்து கொண்டிருக்க எனக்கு கூடுதலாய் அவன் மீது சந்தேகமும் வந்தது. சிறிது தூரத்தில் வெறும் மரங்களாய் இருக்கும் இடம் வந்தது. இரண்டு பக்கமும் ஆலமரம், நடுவினில் எங்களது வாகனம், இருட்டை கிழித்துக் கொண்டு சென்றது. திடீரென்று வாகனத்தின் முகப்பினில் எதுவோ தெரித்தது போன்ற உணர்வு. என்னவென்று புரியவில்லை? ஏதோ பறவை அடிப்பட்டிடுச்சு போல என்று சொல்ல ஓட்டுனர் மீண்டும் வேகம் எடுத்தார். அதுமட்டுமல்லாமல் வாகனத்தின் முகப்பு விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல எங்கள் இருவருக்கும் பயம் மேலும் அதிகரித்து விட்டது. ஏன் விளக்கை அணைக்கிறீங்க? என்று கேட்டதும் பேசாம வாங்க, உங்களை சேர்க்க வேணடிய இடத்துல சேர்த்திடுறேன் என்று சொல்ல நாங்கள் விக்கித்து நின்றோம். முதலில் அந்த விபத்து நடந்த இடத்தில் நிற்கவே இல்லை. பின்னர் ஏதோ பறவை அடிப்பட்டது, அப்போது கூட நிற்க வில்லை, தற்போது வாகன விளக்குகளையும் அணைத்து விட்டான். என் மனைவி பயத்தில் உறைந்து போய் என் கைகளை இறுக்க பற்றினாள். சிறிது நேரம் கழித்து ஏதோ ஊர்ப் பகுதி வந்தது. சரியாய் இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. மனதிற்குள் தெம்பு வந்தது. வண்டியை ஒரு காவல் நிலையத்தின் முன் நிறுத்தினான். அவனுக்கு முன்னால் நான் இறங்கி என் மனைவியையும் இறக்கி வேகமாய் உள்ளே சென்று அந்த விபத்து மற்றும் ஓட்டுனரின் அதிவேக மற்றும் மனிதாபமானமற்ற செயலையும் விளக்க ஓட்டுனர் மெல்ல மெல்ல எங்கள் பின்னே வந்து நின்றான். அவன் சரியாக விபத்து நடந்த இடத்தை ப்பற்றி சொல்ல, காவல்துறை அதிகாரி யாரோ ஒருவருக்கு தகவல் சொன்னார். உடனே சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் அப்படி எந்த ஒரு வாகனமும் இல்லை என்றும் சொன்னார்கள். எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியமாய் இருந்தது. அது எப்படி?. அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே? எப்படி? அப்போது காவல்துறை அதிகாரி எங்களிடம் அந்த ஓட்டுனர் செய்தது நூற்றுக்கு நூறு சரியான செயல். ஒருவேளை நீங்கள் அங்கே நின்று இருந்தால் இந்த நேரம் உங்கள் நகைகள், பணம், அலைபேசி கொள்ளையடிக்கப் பட்டிருககலாம், உங்கள் மனைவிக்கு வேறு விதமான ஆபத்து வந்திருக்கலாம், அல்லது உங்களில் யாராவது ஒருவர் உயிர் பறி போயிருக்கலாம், அந்த மாதிரியான இடங்களில் வாகனத்தை நிறுத்தாமல் செல்லுவதே சிறந்த விசயமாகும். அடுத்தது உங்கள் வாகனங்களில் முட்டைகளை வீசுவார்கள். அந்த முட்டை தண்ணீரோடு கலக்கப்படுவதால் பிசு பிசுப்பு அதிகமாகி உங்கள் கண்ணாடி பார்வை முழுமையாக குறைந்து விடும். அதனால் உங்கள் வேகம் குறையும், அப்போதும் கூட உங்களுக்கு ஆபத்தே. இப்போது உள்ள கொள்ளைக் கும்பல் எல்லாம் அவர்கள் திட்டத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்களை விபத்தில் அடிபட்டவர்களாக நடிக்க வைக்கின்றார்கள். பொதுவாக யாராக இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றால் கொஞ்சம் இரக்கம் காட்டுவார்கள், உங்கள் பலகீனம், அவர்களது பலம். உங்கள் ஓட்டுனர் செய்தது மிகச் சரியான விஷயம். அவரை பாராட்டுங்கள். முடிந்தால் கூடுதல் பணம் கொடுங்கள் என்று சொல்ல நானும் என் மனைவியும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம். அவர் எதுவுமே சொல்லாமல் சிரித்து விட்டு வாசலுக்கு சென்று விட்டார். காவல்துறை அதிகாரிகள் எங்கள் விலாசத்தை குறித்துக் கொண்டு எங்களை அனுப்பி வைத்தனர்

5 comments:


  1. நீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் நியாயமானவைதான். இந்த சம்பவம் உண்மையோ பொய்யோ ஆனால் விழிப்புணர்வுக்காக புனையப்பட்டதாக இருக்கலாம். அந்த வகையில் தர்க்கம் பார்க்காமல் வரவேற்கலாம் என்பதே என் தனிப்பட்ட விருப்பம்.

    ReplyDelete
  2. பெண்கள், குழந்தைகளை விபத்து போல நடிக்க வைத்து பணம் பறிப்பது பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, முட்டையில் தண்ணி கலந்து!?

    ReplyDelete
  3. கோபிநாத் சொல்லும் சம்பவம் புனைவு போல தோன்றுகிறது! உங்களது கேள்விகள் நியாயமானது! ஆனாலும் இது போன்ற பகிர்வுகளை படிக்கும்போது உடனடியாக கேள்விகள் எழுவதில்லை! நன்றி!

    ReplyDelete
  4. I assume you are over-reacting (ask yourself why.). However, thanks for your view.

    ReplyDelete
  5. நீயா நானா-வாயிருந்தா கோபிநாத் காதுக்குள்ள வந்து ஆண்டனி கேள்விகள ஓதுவாரு. பேஸ்புக்குன்னா சொந்தமால்ல சிந்திக்கோணும், அப்புறம் கேக்கோணும்? அது *நமக்கு* வருமா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.