Sunday, October 6, 2013


நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!'

எனது தளத்தில் வரும் தகவல்கள் அரசியல் செய்திகள் மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. இந்த தளம் எந்த ஒரு கட்சியையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. நடுநிலையோடு தகவல்களை செய்திகளாக தருவதாக பல நாளிதழ்கள் சொன்னாலும் அவர்கள் அப்படி செய்வதில்லை. ஆனால் எனது வலைதளம் யாரிடமிருந்தும் எந்த ஒருவித எதிர்பார்ப்பு இல்லாமல் நடத்தப்படுவதால் அரசியல் செய்திகள் மிகவும் நடுநிலையோடு இங்கு உங்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. நான் படிக்கும் பலவிதமான செய்திகளை மக்களின் பார்வைக்கு வைத்து அவர்களின் சிந்தனையை வளர்க்கவே இங்கு பல பதிவுகள் இடுப்படுகின்றன. அதில் நான் படித்ததில் பிடித்த சிலவற்றையும் இங்கு பதிவாக பகிர்கிறேன்.




மோடியைச் சுற்றி எழுப்பப்படும் இந்த பிம்பம் எதேச்சையாக வந்தது அல்ல. அமெரிக்காவில் உள்ள ஆப்கோ வேர்ல்டு வைடு (Apco World wide)என்ற மக்கள் தொடர்பு நிறுவனம், மோடியைப் பிரபலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்று மோடி ஒரு பெரிய பிராண்ட் ஆக நிறுவப்பட்டிருப்பதன் பின்னே, இந்த நிறுவனத்தின் 'லாபி’ உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை குஜராத்தை நோக்கி ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற திட்டத்தை, உலகளவில் மார்க்கெட் செய்வது இந்த நிறுவனம்தான். ஊடகச் செய்திகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் தூதுவர்களின் குஜராத் வருகை எல்லாவற்றுக்கும் பின்னால், இந்த நிறுவனத்தின் லாபி இருக்கிறது. மோடி எப்படி ஆடை அணிய வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்?.. என்பன ஒரு திரைக்கதையைப் போல முன்பே தயாரிக்கப்படுகிறது. மன்மோகன் சிங்கை UNDERACHIEVER என்று வர்ணித்த அமெரிக்காவின் 'டைம்’ பத்திரிகை, மோடியை MODI MEANS BUSINESS என்று அட்டைப் படத்தில் வெளியிட்டது. இவற்றை இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!'




நரேந்திர மோடியின் 'மைனஸ்’ குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரபூர்வமான அறிவிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவருடைய 'ப்ளஸ்’ குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும், பா..-வின் வானதி சீனிவாசன் நம்மிடம் கூறியவையே.

இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன், இதற்கு முன் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். அப்போது ரகுராம் ராஜன் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்திய மாநிலங்களின் வளர்ச்சிகுறித்து ஆய்வு செய்தது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் குழுவின் அறிக்கையில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில்... கோவா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், மஹாராஷ்டிரா, உத்தர்காண்ட், அரியானா... ஆகிய ஏழு மாநிலங்கள் உள்ளன. மிகவும் பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்கள் உள்ளன. பின்தங்கிய மாநிலங்களில் மேற்கு வங்கம், மணிப்பூர், நாகாலாந்து ஆகியவற்றோடு குஜராத்தும் இடம் பிடித்துள்ளது!



அன்புடன்
மதுரைத்தமிழன்






16 comments:

  1. பின் தங்கிய மாநிலப்பட்டியலில் குஜராத்தை ஆக்கியதுபோல, "வல்லரசான" இந்தியாவையும் (?!?!) பிந்தங்கிய நாடாக்காமல் விடமாட்டாங்க போல!

    ReplyDelete
  2. இந்தியாவை கூறு போட்டு பங்கு பிரிச்சு எடுத்துக்கிட்டுதான் ஓய்வாங்க போல!

    ReplyDelete
  3. சைதை அஜீஸ்,
    இதே மோடி இஸ்லாமியராக மதம் மாறிவிட்டேன் என்று ஒரு அறிக்கை விட்டா போதும் நீங்க எல்லாம் எப்படி பல்டி அடிப்பீங்க என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு ஆரூடம்!!!
      இதற்கு பதிலாக நீங்களே மோடியை திட்டி இருக்கலாம்.
      அது போகட்டும், எனக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று உங்களுக்கு எண்ணமிருந்திருந்தால் "மிகவும் பிந்தங்கியிருந்த மாநிலத்தை, 12 ஆண்டுகளில் பின் தங்கிய மாநிலமாக மாற்றியவரால் நிச்சயமாக இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியம்" என்று சிங்கம் போல கர்ஜிக்காமல் மோடியை கேவலப்படுத்திவிட்டீரெ திரு பாபு சிவா அவர்களே!

      Delete
  4. America-vil Vaalum Maduraikara Anna,

    En inda Kolaveri Mindum Congress Vara venduma...ungalukku appadan india porul aadaaramillama pogum adudan unga Idia

    ReplyDelete
  5. திரு வானதி சீனிவாசன் அளித்த தகவல்களில் உண்மை தன்மை கேள்விக்குரியதே ! காரணம் பி ஜே பி வகையறா கோயபல்ஸ் தனத்தின் சொந்த காரர்கள்.

    ReplyDelete
  6. Unmai thiuru Babu siva.nadu nilai endra peyaril ivargal 99percenttum congress i 1 percenttum thittuvargal

    ReplyDelete
  7. correct Mr.Babu sivam. ivargalukku Nadunilai endra peyaril Modoiyai 99 percetageum congressyai 1 percentageum thittuvargal

    ReplyDelete
  8. இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல!

    ReplyDelete
  9. பாபு சிவா

    எப்படியெல்லாம் யோசிக்குறீங்க? அசந்து போயிட்டேன்.

    ReplyDelete
  10. ஆனந்த விகடனில் வரும் கட்டுரைகள் அனைத்தும் உண்மைதானே?அதைத் தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்தானே!
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  11. paravalaya avaru 12 andugala 1,38,978 kodi kadan( kai erupu 1,00,000 kodi acha edha enn evaru podala) endral, enga naam tamilnadula 5andugakulka 2,00,000 kodi kandan acha
    avaru avarudaya state ah nalla munatra padaila kondu poi serukuraru anga onnum kanum ellama kolla kuthu dhan

    ReplyDelete
    Replies
    1. நண்பரே அடுத்த தடவை கருத்து சொல்லும் போது ஒன்று தமிழில் சொல்லுங்கள் இல்லையென்றால் இங்கிலீஷில் சொல்லுங்க இல்லையென்றால் பேசாமல் இருந்துவிடுங்க இப்படி ஜெயமோகன் சொன்னபடி கருத்து இடாதீங்க....நன்றி

      Delete
  12. naam india natuku evaravita vera nadi ella

    ReplyDelete
  13. mundravathu ani antu onu thodangunaga evangaluku votu pota congressku velai poiduvanga 2008 oru MP seat rate 200kodi mudha 250kodi varai black market sale nadandhadhu, eppo 3vathu aniku votu potal enndha murai open con gress sales marketil oru MP seat rate 1000kodi mudhal 5000kodi pogalam enpathu endraya karuthu kanipu enn endral evargal 10 varudangalili 50,00,000kodi varai suruti erukirargal

    ReplyDelete
  14. தெரிந்தோ தெரியாமலோ ஒரு மிகப் பெரிய உதவியை செய்துகொண்டு இருக்கிறீர்கள்.
    எப்பாடுபட்டாவது மோடியை பிரதமராக ஆக்கியே தீருவது என்ற முடிவோடு பதிவு எழுதுகிறீர்கள்.
    அதற்கு பின்னுாட்டும் அப்படித்தான் உள்ளது.
    அவர்தான் மனித ஜென்மமே இல்லை என்கிறீர்கள்.அப்புறம் எதற்கு ஒரு நான்ககைந்து பேர் அவரை மையப்படுத்தியே பதிவுகள் எழுதுகிறீர்கள்.இக்னேர் செய்ய வேண்டியதுதானே
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.