Sunday, October 6, 2013

மனைவியை (பெண்களை ) விட நாய் சிறந்ததா என்ன?

நாம் வெளியே போகும் போது நாய்யை வாடா போகலாம் என்று சொன்னால் நாம் செப்பல் மாட்டுவதற்கு முன்னால் வாசலுக்கு வந்து விடும் ஆனால் மனைவியோ இந்தா நான் ஜந்து நிமிஷத்தில் வந்துவிடுகிறேன் என்று சொல்லி அரை மணி நேரம் ஆக்கிவிடுவார்கள்
 


நமது நாய் ,என்னைவிட பக்கத்துவீட்டில் இருக்கும் நாய் மேல்தான் உங்களுக்கு ஆசை அதிகம் என்று சொல்லாது ஆனா மனைவியோ உங்களுக்கு பக்கத்துவீட்டுகார பெண் மேல்தான் ஆத அதிகம் என்று குறை சொல்லுவார்கள்


நம்ம கூட நாய்படுத்துகிட்டா எந்த குறை ஏதும் சொல்லாமல் படுத்துக்கும் ஆனா மனைவி கூட படுத்துகிட்ட உங்கள் என் மேல் அக்கறை இல்லை காதல் இல்லை கத்தரிக்காய் இல்லை என்று சொல்லி கொண்டு இருப்பார்கள்


நாய்யோட பிறந்த நாளை மறந்துவிட்டால் அது குற்றம் இல்லை ஆனால் மனைவியின் பிறந்த நாளை மறந்து விட்டால் ?
THFTTS BETTER,comics,funny comics & strips, cartoons, ,couple,seat,dog,off the leash

நாய் கூட படுத்துகிட்டா அது மிக அமைதியாக படுத்துக்கும் ஆனா மனைவி கூட படுத்துகிட்டா பிறந்தவீட்டு பெருமையை ஆண்டு ஆண்டுகாலமாக உடைந்த ரிக்கார்டாக சொல்லி கொண்டு இருப்பார்கள்

நாய் கூட ஷாபிங்க் போனா அது வாங்கி கொடுங்க இது வாங்கி கொடுங்க என்று கேட்காது. ஆனா மனைவி?


நாய்க்கு விண்டர் டைம் போட ஒரே ஒரு ஸ்வட்டர்தான் அதை வாஷிங்க் செய்வது மிக எளிது ஆனா மனைவிக்கு எத்தனை எத்தனை சேலைகள் உடைகள் அவ்வளவையும் துவைத்து போடுவது மிக கடினம். கல்யாணமான ஆண்களுக்கு இது நல்லாவே தெரிஞ்சு இருக்கும்

நாய் இன்னொரு நாய் அழகாக இருந்தால் எரிச்சல் படாது பொறமை கொள்ளாது ஆனால் மனைவி ?
001(AYaOREOS DARLING*,I LOVE you 30000 MUCH.My BEBUTIFUL,ADORABLE.BUt'lDLE OF Toy. YOU/v\RKE ME SO HfPPy.X LOVE YOU, LOVEYO, loveSHE USE.D TO TftLK TO ME LIRE THFYTOor777/y.'-;:,y//]r7?:v *'/', vV; 1 WRR'V,comics,funny comics & strips, cartoons, ,off the leash,dog,love,wife

நாய்க்கு எத்தனை வயதானாலும் நம்மிடம் வந்து ஒன்றும் கேட்காது ஆனா மனைவியோ நான் அழகாக இருக்கிறேனா என்று கேட்டு கேட்டு நம்மை டார்ச்சர் பண்ணுவார்கள்

நாய்கள் தங்கள் எடையை பற்றி கவலைப்படமாட்டார்கள் ஆனால் மனைவிகளோ ?


நாய்கூட சேர்ந்து சினிமா பார்த்தால் அது எந்த சீனுக்கும் அழுகாது அதனால் அதை சமாதானப்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டாம் ஆனால் மனைவி கூட சினிமா பார்த்தால் சோககாட்சிகள் வரும் போது அவர்கள் குடம் குடமாக அழுகும் போது அவர்களின் கண்ணிரை துடைக்க ஒரு லாரி லோடு துண்டை பக்கத்தில் வைத்து கொள்ள வேண்டும் அது மட்டுமல்லாமல் இது சினிமாதான் நிஜம் அல்ல என்று சமாதானப்படுத்த வேண்டும் இதெல்லாம் தேவையா?

இதை படித்துவிட்டு அப்ப வேணா நீங்க நாய்கூட போய் படுத்து கொள்ளுங்கள் என்று சொல்லாதீர்கள் ஏனென்றால் நான் நாய்கூடத்தான் தூங்குகிறேன் ஹீ.ஹீ ஆனா நான் எந்த நாய் என்று சொல்லமாட்டேனே...


டிஸ்கி இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது அதனால் இதை நகைச்சுவையாக படித்து ரசியுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்




11 comments:

  1. இதைப் படிக்கிற மனைவிமார்கள்
    எவ்வளவு கோபம் வந்தாலும்
    தங்கள் பற்களைத்தான் கடித்துக் கொள்வார்கள்
    இதுவே நாய்க்கு எதிராய் இருந்தால்
    அது நம்மைக்கடித்துக் குதறி எடுத்துவிடும்

    ReplyDelete
  2. நாய்கூட அதை செய்யமுடியாதே?

    ReplyDelete
  3. என்னய்யா செமையா எங்கேயோ சொம்பு நெளிஞ்சாப்புல இருக்கே....

    ReplyDelete
  4. நாம் எது சொன்னாலும் நாய் வாலாட்டும். மனைவி எது சொன்னாலும் நாம் தலையாட்டுவோம்.

    ReplyDelete
  5. எல்லாம் சரி. நாய் சீர் ,வரதட்சிணை எல்லாம் கொண்டுவராதே !

    ReplyDelete
  6. பார்ட்டிக்கு போனா நாய் டான்ஸ் ஆடாது.
    அதுக்கு கரெக்டா டைமுக்கு சாப்பாடு கொடுத்துடனும், பிளாக்ல எழுதிட்டு லேட்டா போய் சாப்பாடு கொடுத்தா கடிச்சு வைக்கும்.
    நாய் ஆஃபீசுக்கு போய் சம்பாதிரிச்சு கொடுக்காது.
    நாய் உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சிகளுக்கு வடிச்சு கொட்டாது.

    ReplyDelete
  7. ஹா... ஹா.. உங்க வீட்ல இதை படிக்க சொல்லிட்டிங்களா? ஹலோ மனைவிங்க... கணவர்களை பற்றி எழுத ஆரம்பிச்சா அம்புட்டுத்தான்.....
    எக்ஸாம்பிளுக்கு முதல் பாயின்ட்....
    க்கும்... இந்த மங்கி மூஞ்சிகளுக்கு என்ன கெடக்குது தொவைச்சது தொவைக்காததுன்னு எதையாவது மாட்டி வாசல்ல நின்னுக்கிட்டு ரெடியா ரெடியான்னு கத்த வேண்டியது... நாம அழகா ட்ரஸ் பண்ணிக்கிட்டா பொறுக்காதே.. மத்தவங்க நாம அழகா இருக்கோம்னு சொல்லிடுவாங்களோன்னு வயித்தெரிச்சல்... இவங்க பார்க்கிற பொண்ணுங்க மட்டும் அழகா இருக்கனும்... நாம அழகா வந்துடக்கூடாது...

    நானும் சும்மாத்தான் சொன்னேன்...

    ReplyDelete
  8. உண்மையாக இருந்தாலும் இப்படியெல்லாம் சொல்லப்படாது. அப்புறம் தோப்புல சுற்றி ஊசி போட வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  9. என்னமோ பொகயிர வாசன வருதே....

    ReplyDelete
  10. உண்மை சேல்லி
    கலக்கி போட்டிங்க
    டக்காருங்க
    பிராமாத்தாம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.