Tuesday, September 10, 2013



இது கவிதை அல்ல அல்ல அல்ல அதனால் இதை படித்துவிட்டு நீங்கள் எழுதிய கவிதை நன்றாக இருக்கிறது என்று கருத்து இட்டால் எனக்கு பொல்லா கோபம் வந்துடும். கோபம் வந்தா என்ன பண்ணுவீங்க என்று கேட்கிறீர்களா? இன்னும் நிறைய பதிவுகள் போட ஆரம்பிச்சுடுவேன் அப்பறம் நான் எழுதும் பதிவை எல்லாம் படித்து விட்டு நீங்கள் பதில் எழுத வேண்டி இருக்கும்



எனக்கு தேவை ஒரு தேவதை

எனக்கு தேவை ஒரு தோள் ,  நான் சாய்ந்து கொள்ள
எனக்கு தேவை ஒரு மடி,  நான்  தலை வைத்து படுத்து கொள்ள 
எனக்கு தேவை மென்மையான விரல்கள்,  எனது தலையை  கோதிவிட

எனக்கு தேவை செவிகள் , நான் சொல்வதை  பொறுமையுடன் கேட்க
எனக்கு தேவை கைகள் ,  என்னை இறுக்கி அணைத்து கொள்ள
எனக்கு தேவை ஒரு நெஞ்சு,  என் முகம் புதைக்க

எனக்கு தேவை விரல்கள்,  என் கண்களில்  உள்ள   கண்ணிர்  துளியை துடைக்க
எனக்கு தேவை நட்பு  , சோர்ந்து கிடக்கும் என்னை அனணத்து முதுகை  தட்ட
எனக்கு தேவை வாய் , என் மனம் சஞ்சலப்படும் நேரத்தில் ஆதரவான மொழி பேச

எனக்கு தேவை  நல்ல மனம்  என்னை தப்பை கேலி கிண்டல் செய்யாத மனம்
இறுதியாக எனக்கு தேவை நான் இப்படி புலம்பிக் கொண்டிருக்காமல் இருக்க
என் இதழலில் சத்தமில்லாத ஒரு முத்தம்
இவைகள் தான் எனக்கு தேவை  ஆனால் அது உங்களுக்கும் தேவைப்படலாம் சில சமயங்களில்

அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : நான் ஆங்கிலத்தில் படித்த சில வரிகளை வைத்து என் வழியில் என்னால் எழுதப்பட்டதுதான் இந்த பதிவு.


20 comments:

  1. கோபப்பட்டு தொடர்ந்து கவிதை
    எழுதினாலும் பரவாயில்லை
    கவிதை மிகச் சிறப்பாக இருக்கிறது
    எதையோ சாதிக்க நிறையப் பொய் சொல்லுவோம்

    எதற்கு என்பது இறுதியில் தெரியும்
    இந்தக் கவிதையில் சொல்லிச் சென்று
    முடித்த விதம் போல

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பதில் மிக அருமை....


      என்னை கோப படுத்தி பார்ப்பது என்று முடிவு செய்துவீட்டீர்கள் போல இருக்கே? மதுரை வரும் போது கண்டிப்பாக காட்டுகிறேன்

      Delete
  2. Replies
    1. நீங்க படத்தில் உள்ள கவிதையைப் பற்றிதானே சொல்லுறீங்க?

      Delete
  3. நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிலில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் உள்ளது போல இருக்கிறது கவிதை என்பது கழுதை என்று வந்து இருக்க வேண்டுமோ?

      Delete
  4. தேவைகளை இல்லத்து அரசியிடம் சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் உங்க அட்வைஸும் ஹும்ம் உங்க அட்வைஸை கேட்டு இல்லத்து அரசியிடம் முத்தம் கேட்டால் சத்தமாக தருகிறாள் பூரிக்கட்டையால்

      Delete
  5. விரைவில் (கிடைக்கட்டும்) அமையட்டும் நல்ல மனம்...!

    ReplyDelete
    Replies
    1. படத்தில் உள்ள தேவதை கிடைக்கட்டும் என்றா வாழ்த்துகிறீர்கள் தனபாலன்?

      Delete
  6. நல்ல கவிதை படமும் தான்:)))

    ReplyDelete
    Replies
    1. அட நான் கவிதை எழுதலப்பா

      Delete
  7. தலைப்பை பார்த்தவுடனே மறுபடியும் கவிதை? ஆரம்பிச்சிட்டிங்கன்னு எட்டி பார்த்தேன்.. அட கவிதைதான்..?! நிசமா நல்லாருக்கு( உங்களுக்கு கோபம் வரட்டும் அப்பதான் நிறைய பதிவுகளை போடுங்க.. - நன்றி அவர்கள் உண்மைகளின் மொக்கை ரசிக, ரசிகைகள் சங்கம்) தேவதை வருவா ஆனா பூரி கட்டையோடு ஓ.கேவா?

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு ரசிகை மன்றம் இருப்பது இப்பதானுங்க தெரியவந்தது. ஆமா அந்த சங்கத்துக்கு நீங்கதான் தலைவரா?

      Delete
  8. எப்படி எப்படி பாராட்டினால் கோவம் வந்து அதிக பதிவு போடுவீங்களோ ?...!
    எங்க அதையும் பார்ப்போம் .ஆஹா .....இப்படியொரு அழகிய கவிதையை
    நாங்கள் கண்டதேயில்லை (சிறந்த ஆக்கங்களால் இந்த வலைத்தளம் நிறையட்டும்
    வாழ்த்துக்கள் .மன சாட்சி ).தேவைகளை எவ்வளவு அழகாகச் (வயசுக்
    கோளாறு :))) ) சொல்லி இருக்கார் ...!!!!அன்புச் சகோதரா அருமைப் புலவரே
    தமிழ் வாழ்க உன்றன் புலமை வாழ்க ...!!!(மொத்தத்தில் கவிதை மழை கொட்டட்டும் .
    பார்க்கலாம் .இப்போது என்ன செய்வீக ?....:))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்க இப்படி ஒரு கொலைவெறீ உங்களுக்கு??? கவிதை மழை நிஜமாகவே இங்க கொட்டப்போவது எப்படினு கேட்கிறிங்களா?உங்க தளத்தில் இருந்து சுடப் போறேனே

      Delete
    2. என் முதலுக்கே மோசமா?..!!! முருகப்பா காப்பாத்து .கொண்நேபுடுவ
      தொடப்படாது ஆமா :))))

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.