Tuesday, September 24, 2013

இந்தியாவும் கேவலமான சட்டங்களும்


இங்கு இயற்றப்படும் சட்டம் மக்களை பாதுகாக்கவா இல்லை கிரிமனல்களை பாதுகாக்கவா?

பாரம்பரிய நாடான இந்தியாவில் இப்போது மக்கள் பிரதிநிதிகள் மக்களை காப்பாற்ற அவசர சட்டங்கள் இயற்றுவதில்லை. கிரிமனல்களை காப்பாற்ற மட்டும் அவசர அவசரமாக சட்டங்கள் இயற்றப்படுகின்றன். உலகில் எந்த நாட்டிலும் இப்படியொரு கேவலமான சட்டங்கள் இயற்றப்படுவதில்லை.


சரி ஆளும் கட்சிதான் இப்படி இருக்கிறது என்றால் எதிர்கட்சிகள் இந்த மாதிரி சட்டங்கள் கொண்டு வருவதற்கு பலமான எதிர்ப்புகள் தெரிவித்து இருக்க வேண்டாமா?

பிரதமராக வர கனவு காணும் மோடி இதற்க்காக மக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் இந்த நேரத்தில் இறங்கி இருக்க வேண்டாமா என்ன? இதை எல்லாம் விட்டுவிட்டு நான் பிரதமராக வந்தால் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வேன் என்று சொல்லவது கேனத்தனமாக இல்லையா என்ன?


இந்தியாவிற்கும் ஒரு ஜனாதிபதி இருக்கிறார் அவர் செய்த நல்ல காரியம் இதுதான் சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்’ : சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட வகை செய்யும், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட திருத்த மசோதா –2013’க்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

அட அட அட இப்படியல்லவா நாட்டுக்கு ஒரு தலைவர் இருக்க வேண்டும் இனிமேல் இந்திய திருநாட்டை என்று அழைப்பதற்கு பதிலாக இந்திய திருட்டுபய நாடு என பெருமையாக அழைக்கலாம்.

இனி அடுத்த சட்டம் இப்படியும் கொண்டு வருவாங்கப்பா!!! இனிமேல் மக்கள் பிரதிநிதிகள் எந்த பெண்ணையாவது கற்பழித்தால் அது குற்றமாக கருதப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் அதை குற்றாமாக குறை கூறுபவர்களுக்கு கையில் ஒரு விளக்கு கொடுக்கபடும் இது அடுத்த தடவை மக்கள் பிரதிநிதிகள் யாரையாவது கற்பழிக்கும் போது இவர்கள் அங்கு சென்று விளக்கு பிடிக்க வேண்டும்...

பாருங்கய்யா படிங்கய்யா இந்தியாவின் அருமை பெருமைகளை
லோக்சபாவில் எம்.பி.,க்களாக உள்ள, 543 பேரில், 162 பேர் மீது, பல்வேறு கோர்ட்டுகளில், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.*இந்த, 162 பேரில், 76 பேர் மீது, கடுமையான பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.*நாடு முழுவதும் உள்ள சட்டசபை உறுப்பினர்களை பொறுத்தவரை, 4,032 பேர் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவர்களில், 14 சதவீதம் பேர் மீது, ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனை பெறும் வகையிலான, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நல்ல நாடுய்யா இந்த இந்திய திரு நாடு. மக்களே நீங்கள் டிவி சினிமா பார்த்துக் கொண்டும் கோயில் குளத்திற்கு போய் கொண்டும் இவர்களுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை தருவார் என்று பாவ புண்ணிய பேச்சுக்கள் பேசாமல் நீங்கள் இவர்களுக்கு எதிராக கடுமையாக போராடுங்கள்.இல்லையென்றால் நீங்களும் உங்களால் முடிந்த அளவு சட்டங்களை மீறுங்கள் ஒரு வேளை நீங்களும் மந்திரியாகவோ பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ ஆகலாம்

இந்திய மக்களே உங்களிடம் ஒரு கேள்வி கிரிமினல் ஆதரவு சட்டங்கள் இயற்றப்படும் இடமா இந்திய பாராளுமன்றம் ? உங்கள் மனதிற்குள் தோன்றும் உணர்வை இங்கே பகிருங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

இந்த அவசர சட்டம் பற்றிய செய்தியை மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்

12 comments:

  1. enakkum ungala pola evvalvo kovam varuthu sir enna pana. nethu ys jagan 14 matham kalichu jail la irunthu veliya varan appo avan vantha time ellam raku kalama nalla nerama ellam paarukkuranga.. makkal illa.. enga vittula... athvum amma... na enga poy sollikkuven... na nadu ellam maranumnu ninaikala enga amma mothala maruna pothum ninaikkuren...

    ReplyDelete
  2. வெட்கி தலை குனிவதை விட வேறென்ன சொல்ல முடியும் நண்பா ? சீக்கிரம் பல்லரசு ஆகி பல்லை இழிக்கட்டும்.

    ReplyDelete
  3. வெட்கக் கேடு
    வேறென்ன சொல்ல ?
    ஏனோ பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்
    என்கிற வாசகம் நினைவுக்கு வந்து போகிறது

    ReplyDelete
  4. நாடு போகும் போக்கு நல்லாவே இல்லை:(

    ReplyDelete
  5. ஒரு முடிவின் ஆரம்பம்!

    ReplyDelete
  6. வெட்கக்கேடான விஷயம் தான்...என்ன செய்வது? எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளவேண்டியது தான்... மீறி எதிர்த்தால் உங்களை ஏதாவது வழக்கில் உள்ளே தள்ளிவிடுவார்கள். பிறகு எப்படி வெளியே வருவதாம்?

    ReplyDelete
  7. இப்படி எல்லாம் கிரிமினல்களை பதவிக்கு அனுப்பும் பொதுமக்கள் இதை எல்லாம் எங்கே யோசிக்க போகிறார்கள்? அவர்களுக்கு தெரிந்தது தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் பணம், அன்பளிப்புகள். விலைவாசி ஏற்றம், மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாடு நிகழும் போது அந்த நேரத்திற்கு கொஞ்சம் ஆர்ப்பாட்டம் இதை தவிர அதையும் மீறி யோசிக்க பெரும்பான்மையானவர்கள் முன்வருவதில்லை.. எவன் கல்வி மந்திரியாய் இருந்தால் என்ன.. எவன் நிதி மந்திரியாய் இருந்தால் என்ன.. அதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள கூட ஆர்வம் இல்லாத ஒரு வேளை உணவை மட்டுமே யோசிக்கும் மக்களும் இங்கு சமுதாயத்தின் பாதி அங்கங்கள் .. படித்தவர்களும் அவரவர் நிலையில் நிம்மதியாய் இருந்தால் போதும் என்று தன் குடும்பம் வரையில் யோசிக்கிறார்கள்.. போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லாத வரை பெரிதாக ஒன்றும் மாற்றம் வரப்போவதில்லை. டோட்டலா எல்லா கட்சியையும் வெளியில் அனுப்பிட்டு... நேர்மையான படித்த இளையோர்கள் அரசியலுக்கு வரவேண்டும்...அவர்களை பொது மக்கள் முன் நிறுத்தி பொது நல பிரதியாக்க வேண்டும். ஆனா அதுக்குத்தான் யாரும் முன் வரமாட்டேங்கிறாங்களே...? என்னால் ஒத்தை ரூபா கூட தேர்தலுக்கு செலவு பண்ண முடியாது... ஆனால் நேர்மையான வல்லமை பெற்ற பத்து பேரோடு சேர்ந்து பொது நல பிரதி நிதியாக போட்டியிட்டால் எங்களை தேர்ந்தெடுக்க பொது மக்கள் தயாரா? இது முடியாத வரை இந்தியாவின் பெருமைகளை சொல்லும் உங்களிடம் எந்த வீராப்பும் பேச முடியாத நிலையில்தான் இருக்கிறேன். இங்கு வறுமை ஒழிந்து முழு கல்வியறிவு , நல்லாட்சி அமைந்தால் ஒழிய வல்லரசு என்பது நெடு நாள் கனவாகிவிடும்.

    ReplyDelete
  8. இது குறித்து நானும் ஒரு பதிவு போட வேண்டுமென்று இருந்தேன் ஆனால் அதற்கு அவசியமின்றி செய்து விட்டீர்கள் சிறையில் இருப்பவர்கள் போட்டியிடலாமென்றால், அவர் திருமங்கலம் பார்முலா மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறையில் இருப்பாரா அல்லது நாடாளுமன்றம் / சட்ட மன்றத்தில் இருப்பாரா ? அப்புறம் நன்கு விசாரித்து பல ஆண்டுகள் இழுத்தடித்து வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு மதிப்பு என்ன ? நீதி மன்றங்களை கலைத்து விடலாமே ? இது வெறும் சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டும் தானா அல்லது நகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் பொருந்துமா ? நம் நாட்டில் ஜனநாயகம் என்கிற பெயரில் தேர்தலுக்கு பஞ்சமே இல்லை. மாணவர் சங்க தேர்தல் தொடங்கி ஜனாதிபதி தேர்தல் வரை. ஆனால் நடப்பது என்னவோ வேறு. அதிகார பலம், பண பலம், ஜாதி பலம் ....இந்த லட்சணத்தில் வலைத்தளங்கள் / இணைய தளங்கள் மூலமாகத்தான் மதக்கலவரம் ஏற்படுகின்றதாம். வெட்கக்கேடு.

    ReplyDelete
  9. 1. in which way we have to fght?
    2.How to fight?
    3.is there any possible that middle class people come to fight against the bill?

    Today people spend 14 to 16 hrs in professional to fill the stomach? how it is possible to fight?
    4.Who have to come to fight?

    1.students - they dream to become milloniare
    2.shop keeper - they dream to become big owner in the town.
    3.IT peoples - they dream to become - bill gates or any thing.
    4.Teachers - they dream how to invest the money , side business (Most of the govt teachers do this)
    5.Lawyers - ( most of them involved in real estate matters and other rowdy things)
    6.Docters - (they dream to start clinic in all over tamilnadu)
    7. Clerks - (im a clerk - i put a budget , my dream is this month expenses should not exceed the limit )
    Who will fight...............? in which way ?? sir u should post about this matter which is helpful to us.

    i think u r clever than me....
    My mobile No:8300193019

    ReplyDelete
  10. காலையில் இதை செய்தித்தாளில் படித்ததும் கோபமாக வந்தது! நானும் எனது பகிர்வில் பகிர்ந்து உள்ளேன்! இந்த மாதிரி கேவலமான அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாடு உருப்படாது!

    ReplyDelete
  11. தங்களது கடும்பத்தில் நடந்த,நடக்கின்ற தவறுகளுக்கெல்லாம் தங்களது பெற்றோர்களை கேவலமான குடும்பமும்,அதன் தவறுகளும் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்களா?
    தலைப்பு அரசியல்வாதிகளும் அவர்கள் இயற்றும் சட்டங்களும் எனறல்லவா இருக்கவேண்டும்.எதற்கெடுத்தாலும் இந்தியாவைக் குறை கூறிக்கொண்டு
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.