Friday, August 9, 2013

சென்னை பதிவர் கூட்டத்தில் இப்படியும் நடக்க வாய்ப்புகள் உண்டு( எச்சரிக்கை )
 
chennai bloggers meeting

இது ஒரு கற்பனை பதிவே.....

சென்னை பதிவர் மாநாடு ஆரம்பிக்கிறது முதலில் மதுமதி பேச ஆரம்பிக்கிறார்




வரவேற்புரையை மதுமதி பேசி முடிக்கும் நேரத்தில் ,கடைசி வரிசையிலிருந்த திண்டுக்கல் தனபாலன் எல்லோரையும் தள்ளிக் கொண்டு மேடைக்கு வருகிறார். அவரைத் தடுத்த ஜோதிஜி எதற்கு இப்படி அவசரமா ஓடுறீங்க என்று கேட்டார். அதற்குத் தனபாலன் ,நான் நன்றி சொல்லப் போகிறேன்
என்றார்.என்றார்

அதைக் கேட்ட ஜோதிஜி யோவ் இங்க யாரும் பதிவு போடலை. அதனால் நீ முந்திரிக் கொட்டை மாதிரி முதலில் வந்து நன்றி சொல்ல வேண்டாம் .கடைசியில்தான் நன்றி சொல்லவேண்டும் .அந்த நன்றியுரையை நீதான் முதலில் பேச போறே. இப்ப போய் உட்காருப்பா.என்றார்.
 

அடுத்தாக ஜோதிஜி மேடையில் பேசும் போது ,அங்க வந்த கேபிள் சங்கர், கட் கட் கட் எனச் சொல்லுகிறார் .எல்லோரும் இவர் எதற்கு ஜோதிஜி பேசுவதை நிறுத்த சொல்லுகிறார் என்று ஆச்சிரியமாகப் பார்க்க ,அதைப் பார்த்த ஜாக்கி யோவ் என்னய்யா ஆச்சு என்று கேட்க ஜாக்கி இது நான் எடுக்கும் படம் என நினைத்துவிட்டேன் ஸாரிடா என்றார்.


கொஞ்சம் தாமதமாக வந்த பதிவர் ஒருவர். எல்லா ஆண் பதிவர்கள் அனைவரும் வெளியில் நின்று தம் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர் என்னங்க தியோட்டர்ல இடைவெளி விட்டது போல இந்தக் கூட்டத்திற்கும் இடைவெளி விட்டு இருக்கிறார்களா என்று கேட்க, அதற்கு அவர்கள் இல்லையப்பா இப்ப பெண் பதிவர்கள் தாங்கள் எழுதிய கவிதையைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் தான் வந்துட்டோம் என்றார்கள்

அடுத்தாக மேடை ஏறிய பால கணேஷ் இப்போது நான் ஒரு பிட் படம் காண்பிக்கப் போகிறேன் என்றதும் ,பெண்கள் கூட்டம் அலறி அடித்து வெளியே ஒடினாரகள் சீனு உள்பட இளைய பதிவாளர்கள் கூட்டம் மேடைக்கு அருகில் வந்தது.. இதைப் பார்த்த கணேஷ் என்ன நடக்கிறது என்று புரியாமல் தன் சட்டைப் பையில் வைத்திருந்த ஒரு சிறிய பிட் பேப்பரை எடுத்து இது 1967ல் கல்கியில் வந்த நகைச்சுவை என்று கூறி அதைக் காண்பித்தார்
,
அப்புறம் கூட்டத்தில் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும்


சரி வாத்தியார் அப்படின்னாஸ்டுடேன் சீனுவை பற்றிச் சொல்லவா வேண்டும் அவரும் மேடை ஏறி எனக்கு வந்த காதல் கடிதங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு நிமிஷம் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார் உடனே காதல் கடிதங்கள் எழுதிய எல்லாப் பதிவர்களும் என் கடிதமா என் கடிதமா என்று கேட்க அவர் குழம்பிப் போய்ச் சொன்னார் ஐயா சாமிங்களா இது எனது போட்டிக்கு வந்த கடிதத்தைப் பற்றி அல்ல எனக்கு நிஜமாக என் அலுவலக பெண்கள் எழுதிய காதல் கடிதத்திலிருந்து எனக்குப் பிடித்த காதலி எழுதியவற்றை நான் தேர்ந்து எடுத்து என் லவ்வை இங்கே சொல்லப் போகிறேன் என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னார்


அப்புறம் கூட்டத்தில் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும்

அடுத்தாக வந்த ஸ்கூல் பையன் ஒரு கவிதையைச் சொல்லி அதில் தான் எல்லாருடைய பதிவுகளுக்கு வந்து கருத்துச் சொல்வதாகவும் அதனால் அவருது பதிவுகளுக்கும் கருத்துச் சொல்லவும் என்று சொல்லித் தான் தினமும் கவிதையை எழுதிவிடுவதாகச் சொன்னார் அதைக் கேட்ட எல்லா ஆண்பதிவாளர்களும் தம்பி கவிதை மட்டும் எழுதிடாதே அப்படித் தினமும் எழுதாமல் இருந்தால் ஸ்ரீராம ஸ்ரீராமஎன்று எழுதுவது போல உன் பதிவுகளுக்கு ஆயிரக் கணக்கில் கருத்துகள் போடுகிறோம் என்று கெஞ்சிக் கேட்டனர். வந்தாங்கடா வழிக்கு என்று நினைத்து நன்றி சொல்லிவிட்டு இறங்கிவிட்டார்


நெல்லை ஆபிஸர் எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு சாப்பாடு தயாராகும் கிச்சனுக்குச் சென்றுவிட்டார். அங்குத் தயாராகும் உணவுகளை டேஸ்ட் பார்க்க ஆரம்பித்துவிட்டார் உணவுக்கு ஏற்பாடு பண்ணியவர்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள் எங்கே உணவு பாதுகாக்கப்பட்ட முறையில் தயாரிக்கப்படவில்லை என்று எல்லாவற்றையும் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவாரோ என்று ...அவரோ எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டுத் திரும்பிப் பார்க்கையில் உணவுக்கு ஏற்பாடு செய்தவர்கள் பதட்டத்துடன் இருப்பதைப் பார்த்து என்னப்பா எனக்குச் செம பசி அதுன்னாலதான் இப்படிச் சாப்பிட்டுட்டேன் சாரிப்பா என்று சொல்லிவிட்டு கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்று அமர்ந்தார்.


அவ்வ்வ்வ்வ்வ்வ்


அன்புடன்
மதுரைத்தமிழ்ன்

டிஸ்கி : இதுக்கும் மேல் கலாய்ச்சா இந்தியா வரும் போது நமக்கு சமாதி கட்டிவிடுவார்கள் என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன். இதில் நான் கலாய்ச்சவங்க எல்லா ரொம்ப நல்லவங்க எனக்கு கெடுதல் பண்ணமாட்டாங்க... அப்பாடா இப்படி எல்லாம் சொன்னதான் நாம தப்பிக்க முடியும்

16 comments:

  1. ம்., நடத்துங்க, நடத்துங்க...

    ReplyDelete
  2. மதுரைத்தமிழா, நான் எழுதிய கவிதை ஒரு பிரபல கவிஞரை ஓட்டி எழுதியது... அதைப்போய்.... ஐயகோ...

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல் பையா சீரியஸா எடுத்துகாதீங்க ஜஸ்ட் எஞ்சாய்

      Delete
  3. நாங்கள்லாம் எத்தனை பேர் அடிச்சாலும் தாங்குவோம்...

    ReplyDelete
  4. நல்ல நகைச்சுவை..... ரசித்தேன்....

    ReplyDelete
  5. இன்னும் பாக்கி நிகழ்ச்சிகள்?! ஹா ஹா ஹா!

    ReplyDelete
  6. கலாய்ச்சா இப்படி ரசிக்கும்படியா கலாய்க்கணும்
    கற்பனை அருமை மனம் விட்டுச் சிரித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. புணைவு அருமை! நகைச்சுவையை ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  8. ஆஹா எலேய் இப்பவே பொங்க வச்சாச்சா ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  9. பதிவர் சந்திப்புக்கு போகலாம்ன்னு ஒரு ஐடியாவுல இருந்தேன். இப்படில்லாம் கூட நடக்குமோ!! அதனால போகனுமா?!ன்னு மிடிவை மறுபரிசீலனை பண்ணுறேன்!!

    ReplyDelete
  10. இன்று தான் வந்துருக்கேன்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.