Sunday, July 21, 2013



@avargal unmaigal



மதுரைத்தமிழன் சரியான ராவுகாலம்டா!

 நான் கடந்த முறை இந்தியாவிற்கு வந்த போது என் மனைவியின் நெருங்கிய உறவினர் வீட்டிற்கு சென்றேன். அந்த வீட்டுல உள்ளவங்க என் மனைவியின் தம்பி முறையில் உள்ள பையனுக்கு  பொண்ணு பார்க்க எல்லோரும்  கிளம்பிட்டு இருந்தாங்க. அவர்கள் என்னைப் பார்த்ததும் அவர்கள் பொண்ணு பார்க்க போவதையே நிறுத்திவிட்டு என்னை நன்றாக உபசரித்தார்கள். எனக்கும் மிகவும் பெருமையாக இருந்தது.  நமக்காக பொண்ணு பார்ப்பதையே நிறுத்திவிட்டு எனக்காக இருந்ததால் நான் காலரை தூக்கிவிட்டு என் மனைவியிடம் பெருமை பேசிக் கொண்டிருந்தேன். அப்பதான் என் மனைவி சொன்னாங்க சும்மா கிடங்க நீங்க ரொம்ப பீத்திகாதிங்க என் உறவினர் வீட்டுல அன்று பெண்பார்க்க போகதா காரணமே நீங்கதான். ஆனா அது நீங்க நினைக்கிறமாதிரி இல்லை...உங்களை பார்த்ததும் சரியா ராவுகாலம் வந்துடுச்சுடா இப்ப போனா போன காரியம் நல்லா நடக்காதுன்னு அவங்களுக்கு நல்லா தெரியும் அதையும் எங்கிட்ட சொல்லிட்டாங்க .

என் மனைவி இப்படி சொல்லுவதற்கு பதிலாக என்னை பூரிக்கட்டையால் நாலு சாத்து சாத்திருக்கலாமுங்க....

@avargal unmaigal


சரி காமெடி பண்ணது போதும்.... கொஞ்சம் சீரியாஸ இந்த ராகுகாலம் என்ற ஒரு மூட நம்பிக்கையைப்பற்றி பார்ப்போம்.


உலகத்திலேயே ஏன் இந்தியாவிலே இல்லாத ஒரு விஷயம் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் அது இந்த ராகுகாலம் எமகண்டம்தான். தமிழ்நாட்டில் ராகுகாலத்தை நம்பாதவர்கள் ஒருசிலரே. எந்த அலுவலகத்துக்குப் போனாலும்  ராகுகாலம், எமகண்ட நேரத்தில் ஒரு வேலையும் நடக்காது. இப்படி ராகுகாலம், எமகண்டம் அதிகம் பார்ப்பதால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மற்றவர்களைவிட  அதிகம் சாதனைகள் படைத்ததாக எந்த புள்ளிவிபரங்கள் இருப்பதாக தெரியவில்லை 

மேலை நாடுகளில் இப்படி நல்ல நேரம் பார்க்காமல் ஆரம்பித்து  நடத்தியதினால் என்னவோ அவர்கள் இந்தியாவை விட பல மடங்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் எல்லாவற்றிற்கும் சகுனம் பார்க்கும் நாம் ஏன்,  'தமிழ்நாடு உலகின் முதல் பிரதேசமாக வர நல்ல நல்ல நாள் நேரம் பார்த்து முன்னேறேச் செய்து இருக்க கூடாது

சகுனம், நல்ல நேரம், ராகு காலம் என்று சொல்வதெல்லாம் சும்மா ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே! நடைமுறையில் வாழ்க்கைக்கு இவை எந்த அளவு பயன்படுகின்றன என்றால் பூஜ்ஜியம் தான். சகுனம் பார்க்காமல் செய்யும் காரியம் சரியாக நடக்காது, கெட்டுவிடும் என்றால் சகுனம், சாஸ்திரங்கள் அனைத்தையும் பார்த்து செய்தால் மட்டும் என்ன வாழ்கிறதாம்?

இந்த நம்பிக்கைக்கு அடிப்படை என்னவென்று தெரியாமல் பலர் கண்மூடித்தனமாக இன்னும் நம்புவதுதான் வியப்பு. இதில் கலைஞரின் குடும்பம் கூட விதிவிலக்கு அல்ல .ஏன் மூடநம்பிக்கை எதிராக முழங்கி கொண்டிருக்கும் கலைஞர் வீட்டில் கூட எல்லா நிகழ்வுகளும் நல்ல நேரம் பார்த்துதான் நடைபெறுகிறது, அவர்கள் ராகுகாலம் எமகண்டத்தில் சில நிகழ்வுகளை நடத்துகிறார்கள் என்றால் அது உடன்பிறப்புகளின் கல்யாணத்தை சீர் திருத்த முறையில் நடத்துவதாக சொல்லி நடத்துவது மட்டும்தான்

சரி விடுங்க....


இது யாரால எப்போது எப்படி ஆரம்பிக்கபட்டது என தெரியவில்லை அதை ஆரம்பித்துவிட்டவர்கள் யாரோ ஒருவன் தொடர்ந்து வெற்றிக் கொண்டிருப்பதை கண்டு பொறாமைக் கொண்டு அவனின் வேகத்தை தடுக்க இதை ஆரம்பித்து விட்டு இருக்கலாம் என்றுதான் கருதுகிறேன். இப்படிபட்ட செயல்கள் மனிதனின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் செயல்களாக  காலம் காலமாக நடந்து வருகிறது

என்னைப் பொருத்தவரை ஒருவர் செய்யும் எந்த செயலும் யாரையும் பாதிக்காமல் இருக்கிறதோ அந்த செயலை செய்யும் நேரங்கள் நல்ல நேரம் என்றும் அதற்கு பதிலாக கெட்ட செயலை செய்யும் எந்த நேரமும் ராகுகால எமகண்ட நேரமே.

இதைபடிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி ராகுகாலம் எமகண்டத்தில் உங்களுக்கு ஒரு நல்ல வேலைக்கு அப்பாய்ன்மென்ட் கொடுத்தால் மறுத்து விடுவீர்களா? அல்லது உலகின் அழகான மிக நல்ல பொண்ணு தன் காதலை சொன்னால் ஏற்கமாட்டீர்களா? மிக உயர்ந்த அவார்டை தந்தால் வாங்க மறுத்துவிடுவீர்களா? கோடி ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டீர்களா? இந்தியாவின் தலைவராக தேர்ந்தெடுத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா என்ன? சாக கிடக்கும் உங்களுக்கு ரத்தம் தேவைபடும் போது அதை ராகு காலத்தில் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா? உண்மையை சொல்லிவிட்டு போங்களேன்.

நான் சொன்னது தப்பபோ சரியோ ஏதோ என் மனசிலே தோணிச்சு அதனால சொல்லிட்டேன்.. நீங்களும் உங்க மனசில தோணியதை சொல்லாமே




அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments:

  1. நாளும் கிழமையும் நலிந்தார்க்கில்லை.
    இலவச கிரைண்டர் குடுக்கறாங்க உடனே வாங்கன்னு சொன்னா இப்போ ராவு காலம் எம கண்டம் நான் வர மாட்டேன்னா சொல்வாங்க?

    ReplyDelete
  2. மிகச் சரி
    சொல்லிச் சென்ற விதமும்
    உதாரணங்களும் அருமை
    தெளிவானவர்கள் பலர் தங்கள் வெளிவேலைகளை
    ராகு காலத்தில்தான் செய்வார்கள்
    ஏனெனில் கூட்டம் கம்மியாக இருக்கும்

    ReplyDelete
  3. ராகு காலத்தில் எந்த புதிய வேலையையும் செய்யக்கூடாது என்பதே நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. எப்போதும் செய்யும் வேலைகளை நாம் தாராலமாக செய்யலாம்....

    ReplyDelete
  4. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை... நம் மனதைப் பொறுத்து தான் எல்லாமே...

    என்னவெல்லாம் செய்றீங்க...! ஓலைச்சுவடி அட்டகாசம்...!!

    ReplyDelete
  5. இதைப்பற்றி நிறைய யோசித்துருக்கேன். இத்தோடு இன்னோரு பழக்கம். எங்க ஊரு பக்கம் வெள்ளைப் புடவை கட்டியிருப்பவர் வெளியே வந்தால் (கணவனை இழந்தவர்) பெரிய அபசகுனம் என்று மீண்டும் உள்ளே சென்று விடுவார்கள். எழுத வேண்டும். முரளி சொன்னது சிரிக்க சிந்திக்க வைத்தது.

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்... நல்லாத்தான் யோசிக்கறீங்க! :)

    அது சரி என்னோட டேஷ்போர்டில் “இங்கே என் இதயம் பேசுகிறது” அப்படின்னு உங்களுடைய ஒரு பதிவு அப்டேட் ஆகியிருக்கு.... ஆனா க்ளிக் பண்ணா உங்க பதிவு வரலை!

    நேற்று பதிவு செய்த இந்த பதிவு என்னோட டேஷ்போர்டில் வரவே இல்லை! இது எதனால! கொஞ்சம் பாருங்க!

    ReplyDelete
    Replies


    1. இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இப்படிதான் பிரச்சனைகள் வருகின்றன. இது என் தளத்திற்கு மட்டுமல்ல நான் ப்ளோ செய்யும் பல பதிவுகளும் இப்படி பிரச்சனைகள் தோன்றுகின்றன். இதனால்தான் எனக்கு பிடித்த வலைத்தளங்களை எனது கணணியில் புக் மார்க் செய்து அதன் பின் எனக்கு நேரம் கிடைக்கும் போது அதை க்ளிக் செய்து பதிவுகளை படித்து வருகிறேன் அதனால்தான் பல பதிவுகளை லேட்டாக படிக்கும் நிலை ஏற்படுகிறது. நேரம் கிடைக்கும் போது எதனால் பிரச்சனைகள் என்று கண்டு பிடித்து சரி செய்ய முயற்சிக்கிறேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.