Monday, April 22, 2013



இந்திய கலாச்சாரத்திற்கு SICK பிடித்துவிட்டதா ?

எப்போது எல்லாம் இந்தியாவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்களோ அப்போது எல்லாம் தலைவர்கள் & கலாச்சர காவலர்கள் சொல்லவது எல்லாம் நமது கலாச்சாரத்தை பின்பற்றாததாலும் பெண்கள் அணியும் ஆடையாலும்தான் என்றுதான்
ஆனால் அவர்கள் ஒருபோதும்,  "ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்காதாலும் நல்ல  நல்லொழுக்கம் பற்றிய போதனை கல்வியை நம் கல்விக் கூடங்களில் சொல்லிக் கொடுக்கவில்லை என்ற சுடும் உண்மையை சொல்லுவதில்லை

இந்த கலாச்சார காவலர்கள் கிழ்கண்ட செய்தியை படித்து விட்டு அதற்கு தகுந்த காரணங்களை சொல்லுவார்களா?



2 ஆண்கள் மாட்டை டிராக்டரில் கட்டி வைத்துவிட்டு அதனுடன் உறவு கொண்டுவிட்டு அதன் பிறகு அதனை கத்தியால் பல முறை குத்தி சென்று இருக்கின்றனர். இது  டிசம்பர் 8 ,2004 ல் இந்தியாவில் நடந்த நிகழ்ச்சி .

இந்த பசு மாடு என்ன கவர்ச்சிகரமான டிரெஸ்ஸையா அணிந்து சென்றதா? அல்லது மாட்டுக்கும் இந்தியாவில் ஆடை அணிவித்துதான் வைக்க வேண்டுமா என்ன?

கலாச்சார காவலர்களே தலைவர்களே நீங்கள் பணத்திற்க்காக நம் நாட்டில் மேலை நாட்டுக் கல்வியையும், நிறுவனங்களையும் இந்தியாவில் அனுமதி அளித்துவிட்டு இப்போது கலாச்சாரம் சிரழிந்துவிட்டது என்று கூப்பாடு போடுவதில் என்ன நியாயம்.

முதலில் மேலை நாட்டு கல்வியோடு மனித ஒழுக்கத்தையும் பெண்களை மதிக்கும் பண்பாட்டையும் நம் கல்வியில் புகுத்துங்கள் அதன் பின் பாருங்கள்...உங்களால் அது முடியும் என்றால் நம் நாட்டில் பலாத்காரம் மிக குறைய வாய்ப்பு உண்டு அதை முதலில் செய்யுங்கள்
 

அன்புடன்

மனதில்பட்டதை அப்படியே சொல்லும்

7 comments:

  1. அறச் சீற்றம் தர்ம பயம் குறைந்து
    சட்ட பயம் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்தும்படியான
    மனோபாவத்தை வளர்த்து வருவதால்
    இப்படி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது
    மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்ய
    சந்தர்ப்பம் கிடைக்குமாயின் இங்கு எல்லோரும்
    மிக மிக மோசமானவர்களாகவே இருப்பார்கள்
    என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சந்தர்ப்பம் கிடைப்பின் இங்கு மட்டுமல்ல எங்கும் எல்லோரும் மிக மோசமானவர்கள்தான் அது உண்மைதான் ஆனால் சிறு குழந்தைகளை பலத்காரம் செய்வது மிகவும் கொடுமையான செயலே அது போல பெண்களின் சம்மதம் இல்லாமல் செய்யும் உறவும் பலத்காரமே அது தடுக்க பட வேண்டும் அதற்கு பெண்களை மதிக்க கற்றுத்தர வேண்டும். என்னைப் பொருத்த வரை ஆயிரம் பெண்களோடு கூட உறவு வைத்து கொள்லாம் பெண்ணின் சம்மதத்தோட அவளின் விருப்பத்தோட ஆனால் பலாத்தாகரம் மிகவும் தவறுதான்

      Delete
  2. பசுவுக்கு கோமணம் கட்டும் திட்டம் இல்லையா?

    ReplyDelete
  3. சீக்குதான் பிடித்து விட்டது உடல் அரிப்பில் உயிர்வாங்கும் அரக்கர்கள்

    ReplyDelete
  4. பசுவுக்கும் கோமணம் கட்டினால் தான் உண்டு. இணையமும் தற்போது இதுபோன்ற பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகிறது...

    ReplyDelete
  5. neengal solvadhu oru pakathai athavadhu penngal solvadhai mattum kelvipattu solgireergal..

    Ingu pennai madhikamal pogiravargal, penngalal pathikapattavargal... sattam pengaluku thunai nirpatal penngal endha poiyum solli aangalai kollaiadikirargal enbadhu dhan unmai.---- Dowry case, divorce case podru pala poi casekal poda vaiypu koduthu pengaluku munnurimai endral unmai edhu endru sattam kandukolla villai..Oruvanai pattri ellam arintha pinnar Love panni kadaisiyil ematri kasukaga veroruvanodu kalyanam seivathu..--- Apadi pathikapattavarin mana nilai eppadi irukum endru yosichu parunga.. Pen endral unmai endru ninaikum aangalal nadu alapaduvadhal than nadu seeralinthu kidakiradhu... Aangalin udal uravu viruppam mattu kamaverri endru solvadu enna niyayam.. aangal endral ivargaluku enna venum endralum sollalam, enavendrum enralum pudingi kollalam ... appadithane..

    -- Ipadi pata pengalai yaar madhika mudiyum...

    Pengalin dress culture matrathuku pinare ivai athigalavi nadai perukirathu... Idhil aangalin manadhai matra vendum endrum endru oru unmaiku marana oru vakai soli pengal podum koochal thangamudiyadhadhu... Aan penn eerpuku avaravarudaiya sexual parts than karanam adhai thirandha veliyil paraka vitu aangalai kurai kooruvadhu... Tsunamiyai parthu nee kadal jaraiyai thandi varadhey endru solvadhu pol irukirathu... Kasuku alaiyum penngal, sattathai kondu aangalin manasai pathikkum penngal irukum varai ivaigalai thirutha mudiyadhu..

    ReplyDelete
  6. நியாயமான கேள்வி தோழரே!

    இதுபோன்ற வெட்கங்கெட்ட ஆண்களை என்னவென்று சொல்வது? இதனாலேயே நல்ல ஆண்களை கூட சமுதாயம் ஒரு சந்தேக பார்வையோடு பார்க்க வைக்கின்றது?

    நம் நிலை என்றுதான் மாறுமோ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.