Wednesday, November 7, 2012



அதிகம் பேசும் மனைவியின்(பெண்களின்) வாயை அடைப்பது எப்படி?


ஆண்களுக்கான ரகசியம்


பெண்கள் வளவளவென்று பேசியே ஆண்களை சாக அடிப்பார்கள்.( அது யாரும்மா கல்லைத் தேடுறது) அதற்காக அவர்களை நாம் குறை சொல்லக் கூடாது. ( அவர்களை குறை சொல்லிவிட்டு நாம் வீட்டில் இருக்க முடியுமா என்ன?)அவர்களை படைத்த இறைவனைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும் (அப்பாடிபெண்களிடம் இருந்து வாங்கி கட்டி கொள்வதில் இருந்து தப்பிச்சாச்சு. டேய் மதுரக்கார நீ பிழைக்க தெரிஞ்சவண்டா )


பெண் நம்ம அம்மாவாக இருந்தால் நம் அப்பாவையும் பாட்டியையும் நம் படிப்பை பற்றியும் எப்போதும் குறை பேசியே நம் காது  சிவக்கும் அளவிற்கு பேசுவார்கள்


பெண் நம் சகோதரியாக இருந்தால் பள்ளியில் நாம் செஞ்ச சேட்டைகளை எப்போதும் குறை பேசியே நம் பெற்றோர்களின் கை சிவக்கும் அளவிற்கும் நம் முதுகு சிவக்கும் அளவிற்கு பேசுவார்கள்.


காதலியாக இருந்தால் கவிதை என்ற பெயரில் ஏதாவது சொல்லியே நம்மை சாக அடிப்பார்கள்.


மனைவியாக இருந்தால் தன் அப்பாவின் பெருமையையும் பக்கத்துவிட்டுகாரரின் திறமையையும் மாமியாரைப் பற்றிய குறையையும் சொல்லி சொல்லி நம்மை சாக அடிப்பார்கள்

தோழியாக வந்தால் நம்மை ஆபிஸில் வேலை செய்யவிடாமல் மாமியாரையும் கணவரையும் மேனேஜரையும் குறை சொல்லியே நம்மை சாக அடிப்பார்கள்

இன்னும் நிறைய பெண்களை போலவே சொல்லிக் கொண்டே போகலாம் ஆனா அப்படி சொல்லாம விஷயத்தை சுருக்கமா சொல்லிடுறேன். ஒகேவா?

முட்டாள் ஆண்கள்தான் பெண்களிடம் வாயை மூடு ..பேசுவதை நிறுத்து என்று கத்துவார்கள் ஆனா மதுரைக்காரங்க மிக புத்திசாலிங்க அவங்க எல்லாம் அப்படி சொல்லமாட்டாங்க அதிகம் பேசும் பெண்ணிடம் உங்கள் உதடுகள் இரண்டும் ஒட்டிக் கொண்டிருக்கும் போதுதான் நீங்கள் மிகவும் அழகாக தேவதை போல இருப்பதாக சொல்லுவார்கள்.

நீங்களும் இப்படி சொல்லிபாருங்கள் அப்படியும் நடக்கவில்லையென்றால் எனக்கு தனியாக இமெயில் அனுப்புங்கள் வேறு ஒரு வழி சொல்லுகிறேன், அதை இங்கே சொன்னால் வம்பு.........

அப்ப வரட்டா?


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

19 comments:

  1. ஆயிரம் தான் சொல்லுங்க குடிச்சுட்டு பேசும் ஆண்கள் பேச்சுக்கு ஈடாகுமா????

    ReplyDelete
    Replies
    1. "சில" ஆண்கள் குடிச்சாதான் பேசுவாங்க...ஆனா "எல்லாப்" பெண்களும் குடிக்காமலே பேசுறாங்களே

      Delete
  2. பேசாத ஆண்களை எப்படி பேச வைப்பது அதற்கும் ஒரு பதிவிடுங்கள்.

    (உங்களுக்கு இருக்கு)

    ReplyDelete
    Replies
    1. //பேசாத ஆண்களை எப்படி பேச வைப்பது///

      ரொம்ப சிம்பிள் பேசும் பெண்கள் வாயை சிறிது நேரம் மட்டும் மூடினால் பேசாத ஆண்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். என் ஐடியா எப்படி? ஹீ..ஹீ

      Delete
    2. nandri nanbare indha article and indha thalam amaithatharkku.


      Reply starts::
      Chance ae illai.
      Vaaiyai moodinaaal... idhudhaan chance endru... sugamaagavum....
      wife-ai ignore-um pannividuhiraarhal aangal.

      wife: vaaiyai moodi try pani paarthirukiren..
      husband: shabaaa.... nimathi endru...vaalkai nadathuhiraar..
      wife: udane result-um edhirpaarkalai.. 3 months vaayai moodinaar..
      vaaiyai moodi endha pirachanai solve panna mudiyum?
      wife ku pirachanai endru vandhaal kanavanidam thaan murai ida mudiyum... kanavanum ennidam sollathe vaayai moodu endru sonaaal.... wife yaaridam solla mudiyum?

      aangale ungal wife vaayai moodu endru mattum sollatheerhal..
      naanum oru aan thaan..
      aaanaal.. en manaiviyai purinthu konda oru nalla aan..
      neengalum ungal manaiviyai purindhu kolungal... sugamaana vaalkai vaalungal..


      Idea#1: Vaaiyai moodi irungal..
      so vera idea irunthaal sollunga... aangalai pesa vaipatharku... atleast pirachanai solve panratharkaavadhu aangal pesavaikanum..
      elaavitaaal yaaridam murayida mudiyum pengal?

      naanum aan thaan...
      ingu naan enakaaha pesa varavillai...
      naan ingu pesuvathu matra pengalukaaha..

      nandri "Madurai Tamilan" avargalukku.. oru thalam amaithu thandhamaikku to talk about this.. and to make husband and wife to talk to each other to solve their own problems.

      veetu problem-ai veetu thalaivan listen-talk-solve paninaal, naatu problem
      mukkaalvaasi solve aana maathiri thaan.

      Delete
    3. முட்டாள் ஆண்கள்தான் பெண்களிடம் வாயை மூடு ..பேசுவதை நிறுத்து என்று கத்துவார்கள் ஆனா மதுரைக்காரங்க மிக புத்திசாலிங்க அவங்க எல்லாம் அப்படி சொல்லமாட்டாங்க அதிகம் பேசும் பெண்ணிடம் உங்கள் உதடுகள் இரண்டும் ஒட்டிக் கொண்டிருக்கும் போதுதான் நீங்கள் மிகவும் அழகாக தேவதை போல இருப்பதாக சொல்லுவார்கள்.

      நீங்களும் இப்படி சொல்லிபாருங்கள் அப்படியும் நடக்கவில்லையென்றால் எனக்கு தனியாக இமெயில் அனுப்புங்கள் வேறு ஒரு வழி சொல்லுகிறேன், அதை இங்கே சொன்னால் வம்பு......



      Excellent idea...
      atleast idhukaahavadhu aangal vaai thiranthu pesungal... ungal manaivi idam.

      manaiviyum sandhoshamaha irupaargal
      kanavanum sandhoshamaha irupargal.

      Delete
    4. siruthu neram vaai moodinaalum pesamaataarhal..
      palamani neram vaai moodinaaalum pesamaataarhal... oru sila aangal.
      avarhalai pesa vaika idea sollungal.

      Delete
  3. பெண்கள் பேசாம இருந்தா அதுவும் பெருந்தொல்லைதான்.அவங்கெல்லாம் பேசும்போது அப்படியா? ஓஹோ ன்னு தலை ஆட்டறது அனிச்சை செயலா ஆயிடிச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஓ....நீங்களும் என் கட்சிதானா? என் பொண்டாட்டி பேசமா என் எதிரில் நின்றாலே என் தலை ஆட்டோமாட்டிக்காக ஆடுகிறது

      Delete
  4. சொல்லிப் பாக்கறேன். விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பாளி தோழா...

    ReplyDelete
    Replies
    1. நாம எல்லாம் பூரிக்கட்டையால் அடி வாங்கியே மரத்து போனவர்கள் அதற்கு மேல என்ன நடக்கப்போவுது அதனால தைரியமா சொல்லுங்க நண்பரே ?

      Delete
  5. அட! அருமையான யோசனையா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. யோசனை அருமையா இருக்கலாம் அதன் பலனும் மிக "அருமையா" இருக்கும்

      Delete
  6. அது சரி... இன்னும் இருக்கா...?

    ReplyDelete
    Replies
    1. முதல்ல இந்த ஐடியாவை பின்பற்றி உங்க அனுபவத்தை எழுதுங்க அதன் பின் மற்றவைகளை சொல்லுகிறேன்

      Delete
  7. அட பாவிங்களா. இப்படி வேற கிளம்பியிருக்கிங்களா? இனிமேல் வாயாலும், கண்ணாலும் பேசுறதை நிறுத்திட்டு கையால் செயலில் இறங்கறதுதான் நல்லதுனு தோணுது.


    உதாரணத்திற்கு நான் கேள்விப்பட்ட ஒரு கவிதை

    "கண்ணடித்து பார்த்தேன்...
    மயங்கவில்லை;
    கட்டையால் அடித்தேன்...
    உடனே மயங்கி விட்டான்!

    உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் இப்படிதான் பண்ணனும்.

    ReplyDelete
    Replies
    1. //வாயாலும், கண்ணாலும் பேசுறதை நிறுத்திட்டு கையால் செயலில் இறங்கறதுதான் நல்லதுனு தோணுது.//

      அப்ப நீங்க இன்னும் கல்யானம் ஆகாத பெண்ணுதான்


      மிக ரசிக்க வைத்த கவிதை


      //உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் இப்படிதான் பண்ணனும்.///
      அப்படியெல்லாம் கஷ்டப்படாதீங்க ஜஸ்ட் ஒரு புன்னகை எனக்கு போதும்
      அப்படிதான் என் மனைவி என்னை மயக்கினாள் ஆனா மயங்கிய பின்னால்தான் கை செயலில் இறங்கிவிட்டாள்


      உங்களின் பின்னுட்டம் மிக ரசிக்க வைத்தது நன்றி

      Delete
  8. kandipaga pengal pesavilai endral mandaiyai piyuthu kondu thaan tiriya vendum aangal
    irunthalum oppu kolkirane sila veedukalil radio off avathae ilai ...

    intha idea try pana 1 day tapikalam athukumela engala yematha mudiyathu thola correct thaanae...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.